Wednesday, August 31, 2011

ஆனால் அவள் கடத்தப் பட்டதை யாருக்கும் சொல்ல கூடாது என பொலீஸ்சார் மிகவும் கடுமையாக எச்சரித்து விட்டுள்ள‌னர் இது தான் உண்மை

[இந்த சிறுமிக்கு அப்பா அம்மா எல்லோரும் குஞ்சர் கடை பகுதிகில் இருக்கிறார்கள்.இதற்கு ஆதரங்கள் நிறைய உண்டு அவரது அப்பா முச்சக்கர வண்டி ஓட்டுனர்,
இச் சிறுமி வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு செல்லும் பொது 3 பேரல் கையேஸ் கடத்தப்பட்டு நல்லூர் பகுதிகில் இச் சிறுமி தப்பித்து ஆலய சூலலில் நின்ற பெண்ணுடம் தஞ்சம் அடைந்து உள்ளார்,அவர்தான் அடுத்த நாள் கலையில் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது தாய் தந்தையுடன் இருக்கிறாள்
ஆனால் அவள் கடத்தப் பட்டதை யாருக்கும் சொல்ல கூடாது என பொலீஸ்சார் மிகவும் கடுமையாக எச்சரித்து விட்டுள்ள‌னர் இது தான் உண்மை.]


.தான் நிற்கும் இடம் தெரியாமல் யாழ் பஸ் நிலையத்தில் அழுதுகொண்டிருந்த 13 வயதுச் சிறுமியை குடும்பப் பெண் ஒருவர் யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ் பஸ் நிலையத்தில் தனிமையில் நின்று அழுதுகொண்டிருந்த 13 வயதுச் சிறுமியான பிரசாந்தினியை மல்லாகத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் ஆறுதல் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாதுகாப்பாக தங்கவைத்துள்ளார். மறுநாள் (நேற்று) காலை யாழ் பொலிஸ் நிலையத்திற்கு பிரசாந்தினியை அழைத்துவந்த மேற்படி அந்தக் குடும்பப் பெண் நடந்தவற்றைக் கூறி பிரசாந்தினியை தன்னுடனே விட்டு விடுமாறு கோரியுள்ளார். இதனை மறுத்த பொலிசார் பிரசாந்தினியை தாமே பொறுப்பேற்றனர்.
இதன் பின்னர் அச் சிறுமியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அச் சிறுமி தான் வன்னி மாவட்டம் புதுக்குடியிருப்பினைச் சேர்ந்தவர் என்றும் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் தனது தாய், தந்தை உறவினர்களை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வவுனியா செட்டிக்குள இராமநாதன் முகாமில் இருந்து தனது அக்கா முறையுள்ள உறவினருடன் கொழும்பு சென்று இவ்வளவு காலமும் வசித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் தன்னை வைத்து பராமரித்த அக்கா தற்போது வெளிநாடு செல்ல இருப்பதால் என்னைக் கொண்டு வந்து பருத்தித்துறை நெல்லியடியில் விட்டுவிட்டு சென்றார் எனத் தெரிவித்த சிறுமி கதறி அழுதும் உள்ளார்.

நெல்லியடியில் தனது தூரத்து சொந்தக்காரர்களை தன்னால் தேடிப்பிடிக்கமுடியவில்லை என்றும் தான் இருக்கும் இடம் தெரியாமல் சுற்றித்திரிந்து கடைசியில் இங்கு வந்து சேர்ந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார். யாழ் பஸ் நிலையத்தில் அழுதுகொண்டு இருக்கையிலேயே அந்த அம்மா என்னை தன்னுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் 13 வயதுச் சிறுமியின் நிலையைப் பார்த்தீர்களா தமிழர்களே. புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இதுபோன்ற சிறுவர்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும். மாதம் ஒரு 10 பவுன்களை அனுப்பினால் கூட அச்சிறுமி தனது கல்வியைத் தொடரமுடியும், ஒரு பாதுகாப்பான இடத்தில் வளர முடியும். இன்னும் எத்தனை எத்தனை பிரசாந்தினிகள் ஈழத்தில் ஆதரவற்று தெருக்களில் நிற்கிறார்களோ தெரியவில்லை.

இவர் ஒருவரை எமது நிருபர் பார்த்ததால் இச் செய்தியை நீங்கள் அதிர்வில் வாசிக்கிறீர்கள்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=599

LAC இன் ஓர் புதிய Smartphone அறிமுகம்!


இந்திய நிறுவனமான லக்சுமி அக்ஸஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இணையதள தலைப்புச் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கிறது. அதாவது அதன் புதிய டேப்லெட்டைப் பற்றிய அறிக்கை இணையதளங்களை ஈர்த்திருக்கிறது.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு புதிய ஸ்மார்ட் போனை எஸ்சிஎஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அது உண்மையாகவே இந்தியாவில் நல்ல பெயரைப் பெற்றது. இப்போது எல்சிஎஸ் தயாரிக்கும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

இந்த புதிய எல்எசிஎஸ் மேக்னம் மிர்ச்சி-5 வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த எல்எசிஎஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் கம்ப்யூட்டாரன இது மலிவு விலையில் கிடைக்கும்.

புதிய எல்எசிஎஸ் மேக்னம் மிர்ச்சி-5 டேப்லெட் 5இஞ்ச் கொண்ட திரையுடன் வருகிறது. மேலும் இதன் சிபியு 1ஜிஹச்ஸட் வேகத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு ஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

இதன் இன்டர்னல் சேமிப்பு அளவைப் பார்த்தால் அது 512 எம்பி ஆகும். மேலும் இது 512 எம்பி ரேமையும் கொண்டுள்ளது. 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஎ முகப்பு கேமார கொண்டு இந்த மொபைல் அமர்க்களப்படுத்துகிறது. முகப்பு கேமரா இருப்பதால் வீடியோ காலுக்கு பிரச்சினை இல்லை.

இதனுயை 5 இஞ்ச் டிஸ்பிளே இதற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதனால் இதன் டிஸ்ப்ளே 800 X 480 பிக்ஸல் தெளிவைத் தருகிறது. புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 மற்ற ஆண்ட்ராய்டு போன்களைப் போலவே எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறது.

புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 இன்டக்ரேட்டட் எப்எம் ரேடியாவுடன் ஆட்டோ சுழற்சிக்காக லைட் சென்ஸார், இகம்பாஸ் மற்றும் அக்ஸிலர்மீட்டர் போன்ற வசதிகளை வழங்குகிறது. ப்ளூடூத், வைபை மற்றும் ஹச்எஸ்பிஎ தொடர்பு வசிதிகளும் இந்த போனை அலங்கரிக்கின்றன. மற்ற ஆண்ட்ராட்டு போன்களோடு புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 கண்டிப்பாக போட்டிபோட வேண்டியிருக்கும்.

குறிப்பாக எல்ஜி ஆப்டிமஸ் ஒன் அன் ப்ளாக், ஹச்டிசி சாசா, மைக்ரோமேக்ஸ் எ60 சாம்சுங் காலக்ஸி எஸ் மற்றும் ஸ்பைஸ் எம்-410 போன்ற போன்களோடு கடும் போட்டி போட வேண்டியிருக்கும். இருந்தாலம் புதிய எல்எசிஎஸ் மாக்னும் மிர்சி 5 அனைத்துப் போட்டிகளையும் சமாளித்துவிடும் என நம்பலாம். இதன் விலை ரூ.20,000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாதாடுவதற்கு கட்டணத்தைப் பற்றி கவலையில்லை! மூன்று உயிர்கள் முக்கியம்! தமிழர்களுக்காக வருகிறேன்!- ராம் ஜெத்மலானி!


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் செப்டம்பர் 9-ம் தேதி தூக்குத் தண்டனை’ என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தமிழ் உணர்வாளர்கள் தொடங்கிவிட்டார்கள்.

பூந்தமல்லி தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில்... தமிழக ஆளுநர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, மூவரும் 'கருணை மனு’ அனுப்பிவைத்தார்கள்.

தமிழக ஆளுநராக அப்போது இருந்த ஃபாத்திமா பீவி இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். இதை எதிர்த்து பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். 'ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.

மாநில அமைச்சரவையின் முடிவைத்தான் வழிமொழிய வேண்டும். எனவே, ஃபாத்திமா பீவியின் முடிவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!’ என்று பழ.நெடுமாறனுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சந்துரு சொல்ல... நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டு ஃபாத்திமா பீவியின் நிராகரிப்பைத் தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னால் இருக்கும் மனு ஒன்று மட்டுமே பாக்கி இருந்தது. 1999-ம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்ட கருணை மனுவை 12 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார் பிரதிபா பாட்டீல்!

ஆளுநர், குடியரசுத் தலைவர் இருவருமே கருணை மனுவை நிராகரித்த நிலையில்... மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழ் உணர்வாளர்கள் முடிவெடுத்தார்கள்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை அடிக்கடி வேலூர் சிறைக்குச் சென்று சந்தித்து வந்த இளம் வழக்கறிஞர்களான பாரிவேந்தன், பிரபு ஆகியோர், 'கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதன் பிறகு உடனடியாகச் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்துவிடுவது...’ என்று பல மாதங்களுக்கு முன்பே வேலைகளை ஆரம்பித்தார்கள்.

டெல்லியில் காலின் கான்சிவேல்ஸ் என்ற வழக்கறிஞரை சந்தித்தனர். 'ஹியூமன் ரைட்ஸ் லா நெட்வொர்க்’ என்ற அமைப்பின் மூலம், நெடுங்காலமாக மனித உரிமை வழக்குகளுக்காக மட்டும் வாதாடி வருபவர் இவர்.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பல விருதுகளைப் பெற்றவர். அவர் இந்த வழக்கில் வாதாடுவதற்கு ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே, மும்பையில் இருக்கும் மொகித் சவுத்ரி என்ற இன்னொரு வழக்கறிஞர் குறித்த தகவல் கிடைத்தது. தூக்குத் தண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து வாதாடி வரும் மொகித் சவுத்ரியையும் இதற்காகக் கொண்டுவந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்து, இந்த வழக்கறிஞர்கள் அவரையும் சந்தித்தனர். 'ராம்ஜெத்மலானி இருந்தால் நல்லது’ என்று அவர் ஆலோசனை சொன்னாராம்.

மனித உரிமை, தூக்குத் தண்டனை ஆகியவை குறித்து எத்தனையோ சாதகமான விஷயங்கள், தீர்ப்புகளை நாங்கள் எடுத்துவைக்கலாம். ஆனால், ராம்ஜெத்மலானிதான் நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாகவும்... கூடுதல் கடுமையாகவும்கூட வாதாடுவார்.

கடுமையாகக் கடைசி வரைக்கும் போராடுவார்’ என்று மொகித் சவுத்ரி சொல்ல... அவருடன் பேச முடிவானது. 'எனக்கு ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. எனவே, இதில் ஆஜராக முடியாது. அதுவும் சென்னைக்கு வர இயலாது’ என்று ஜெத்மலானி சொன்னதும்... இந்த வழக்கறிஞர்கள் வைகோவை சந்தித்து விஷயத்தைச் சொன்னார்கள்.

இது ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்தது!

ஜெத்மலானியைத் தொடர்புகொண்ட வைகோ, ''மூன்று தமிழர்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.கோடிக் கணக்கான தமிழர்களின் சார்பாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மறுப்பு ஏதும் சொல்லிவிடாதீர்கள்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அழுத்தம் தர... அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.

மறுநாள் வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்த வைகோ, நம்பிக்கையுடன் இருங்கள். விடுதலை ஆவீர்கள்...’ என்று சொல்லிவிட்டு வந்தார்.

இது தொடர்பான அனைத்து ஆவணங்களுடன், 23-ம் தேதி ராம்ஜெத்மலானியின் வீட்டில் நீண்ட நேரம் ஆலோசனைகள் நடந்தன. ''எந்தத் தேதியாக இருந்தாலும், அனைத்து வழக்குகளையும் தள்ளிவைத்துவிட்டுத் தமிழர்களுக்காக வருகிறேன்!'' என்று ஜெத்மலானி சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் 25-ம் தேதி மூவரின் தூக்கையும் உறுதி செய்து மத்திய அரசில் இருந்து கடிதம் வந்தது. மீண்டும் வைகோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானியை சந்தித்தனர்.

அனைத்துத் தகவல்களையும் விரிவாகக் கேட்டுக்கொண்ட ஜெத்மலானி, ''இவர்கள் மூவரையும் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது'' என்றார் நெகிழ்வாக. ''மூன்று தமிழர்களின் உயிர்தான் எனக்கு முக்கியம். வாதாடுவதற்கான கட்டணத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை!'' என்று சொன்னாராம் ஜெத்மலானி.

ராம் ஜெத்மலானி, காலின் கான்சிவேல்ஸ், மொகித் சவுத்ரி ஆகிய மூவரது வாதங்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரது உயிரைக் காக்குமா... என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்!

ஜூனியர் விகடன்

இந்தியர்கள் அல்லாத தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும்: சுப்ரமணிய சுவாமி


இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இரண்டாவதாகத் தான் தமிழர்கள். வைகோ தெலுங்கில் இருந்து வந்தவர்.

இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் கூறுகிறது.

தமிழர்களின் உணர்வுகள் இது என்றால் இந்தியர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

Tuesday, August 30, 2011

பேரறிவாளனின் இளமைக் காலங்கள்... (படங்கள் இணைப்பு)






காணாமல் போகும் சிறுமிகள்! கதவைத் தட்டும் மர்ம மனிதர்கள்!! கலங்கி நிற்கும் யாழ்ப்பாண மக்கள்!!!


யாழ்.குடாநாடு தற்போது ஒரு ஸ்திரத்தன்மையற்ற ஒரு பிரதேசமாக மாறி, அங்கு வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்வு பதற்றம் நிறைந்த வாழ்வாக மாறி வருகின்றது.

அதாவது காணாமல் போகும் சிறுமிகள், கதவைத் தட்டும் மர்ம மனிதர்கள் இவற்றுக்கு மத்தியில் கதிரவன் மறைந்தால் கதவைத் திறக்க முடியாத நிலை என மக்களின் மன நிலை குறைகுடம் போல் ததும்பிக் காணப்படுகின்றது.

அதாவது யாழ். குடாநாட்டில் மூன்று சிறுமிகள் நேற்று திங்கட்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நல்லூர்க் கந்தசாமி கோவிலின் வருடாந்தத் திருவிழாவின் இறுதி நாளான பூங்காவனத் திருவிழாவுக்கு பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமி நேற்றையதினம் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸார் கூறினர்.

புதிய செம்மணி வீதி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த வேலன் வேணிகா (வயது 6) என்ற சிறுமியே நல்லூர்க் கோவிலில் காணாமல்போயுள்ளார்.

பெற்றோரும் பொலிஸாரும் இணைந்து கோயில் வளாகத்தில் நேற்றிரவு வரை குறித்த சிறுமியை தேடியபோதிலும் கிடைக்கவில்லையெனத் தெரிவித்த யாழ். பொலிஸார்இ இச்சிறுமியை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை மானிப்பாய்இ வடமராட்சிப் பகுதிகளை சேர்ந்த இரு சிறுமிகள் நேற்றுக்காலை முதல் காணாமல்போயுள்ளதாக மானிப்பாய் மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

மானிப்பாயைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் எஸ்.ரோஷினி (வயது 17) என்பவரும் வடமராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 8இல் கல்வி கற்கும் கனகலிங்கம் லக்ஷிகா என்ற சிறுமியும் காணாமல்போயுள்ளதாக மானிப்பாய் மற்றும் நெல்லியடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு காணாமல் போன சிறுமிகள் மூவரில் ஒரு சிறுமியின் பெற்றோரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் காணாமல்போன 13 வயது சிறுமியின் பெற்றோர் மனித உரிமைகள் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த சிறுமியைக் கண்டுபிடிப்பது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரி.கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறு தினம்தினம் அரங்கேறும் அரக்கர்களின் அட்டூழியங்களால் நின்மதியிழந்த யாழ்ப்பாண மக்களின் துயரைத் துடைக்க யார் முன்வருவார்கள்? வேலியே பயிரை மேய்ந்தால் யார்தான் என்ன செய்ய முடியும்?

நான் அழகாகவும் அம்சமாகவும் இருப்பதற்கு "தண்ணி" தான் காரணம் - அனுஷ்கா


ரெண்டு படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அருந்ததீ படம் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். நான் அழகாக இருப்பதற்கு காரணம் தினமும் ‌யோகா செய்வதாலும், கூடவே நிறைய தண்ணீர் குடிப்பதுமே காரணம் என்று கூறுகிறார் நடிகை அனுஷ்கா.

இதுதவிர நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அழகிற்கான ரகசியத்தை கூறியிருக்கிறார். இதுகுறித்த அனுஷ்கா கூறியதாவது, நான் அழகாக இருப்பதாகவும், உங்கள் அழகின் ரகசியம் என்ன என்றும் நிறைய பேர் கேட்கின்றனர். அழகுக்கு என்று நான் பிரத்யேகமாக எதுவும் செய்வதில்லை.
முதலில் அழகை விட ஆரோக்கியம் தான் சிறந்தது என்று அனைவரும் உணர வேண்டும். ஆரோக்கியத்துக்காக தினமும் காலையில் யோகா செய்கிறேன். அத்துடன் நிறைய தண்ணீரும் குடிக்கிறேன். யோகா உடம்பை கட்டுகோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தண்ணீர் குடிப்பதால் தோல் அழகாகிறது.

இவைதான் எனது அழகு ரகசியங்கள். சினிமாவில் பிசியாக இருக்கும் நீங்கள், விளம்பர படத்தில் நடிப்பது தேவையா என்கின்றனர். வருடத்துக்கு 2 அல்லது மூன்று படங்களில் தான் நடிக்க முடியும். ஆனால் விளம்பர படங்கள் அடிக்கடி டெலிவிஷனில் வருவதால் தினமும் ரசிகர்களை நெருங்கலாம். விளம்பர படத்தில் நடிக்க நேரமும் குறைவு பணமும் கிடைக்கிறது. எனவேதான் விளம்பர படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

கிறீஸ் பூதம் இருந்தால் எனது தொலைபேசிக்கு அழைக்கவும்! மேர்வின்


நாட்டில் மர்மமனிதர்கள் அல்லது கிறீஸ் பூதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் தனது கைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுக்குமாறு பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சராக உள்ள தனக்கு இதுதொடர்பில் பாரிய கடப்பாடு இருப்பதாக மேர்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் தொடர்பாடல் என்பது கிறீஸ் பூதமும் உள்ளடங்கும். கிறீஸ் பூதம் தொடர்பில் சந்தேகம் நிலவினால் 0722287210 என்ற தனது கைத்தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இரவு 12 மணிக்கும் எடுக்கவும். கிறீஸ் பூதம் கிடைத்தால் சுற்றிவளைத்து பிடித்துக் கொள்ளுங்கள். அந்த இடத்திற்கு நான் வருவேன். முச்சந்திக்கு கொண்டுவந்து கட்டிவைப்பேன். அந்நாளில் எனக்கு சிறைவாசல் திறக்கும். கிறீஸ் பூதத்திற்கு சுடுகாட்டின் கதவு திறக்கும்” என்று மேர்வின் சில்வா முழங்கியுள்ளார்.

மிக அழகான மேனியை பெறுவதற்கு


மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது அரிது. தங்களது தோலை பாதுகாக்க என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

தங்களது தோலில் சிறிய சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோபோச்சே என கவலை கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி.

தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய அதிகமாக தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல்சுருக்கம் மறைந்து விடுவதோடு தோலுக்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கின்றது. எனவே இளமையாக தோன்றலாம்.

இதற்காக ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது-இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் மினரல் வாட்டராகும்.

தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத் தான் பயன்படுத்துகின்றனர். அதாவது செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தபடும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம் பெறுவதால் தான் தோல்சுருக்கம் காணமல் போகிறது.

இதில் கலந்துகொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பிறகும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு பிறகு எடுக்கபட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர். சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

எது எப்படியோ ஆக மொத்தத்தில் தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தோல் சுருக்கம் மறையும்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்


நான் ஒரு தடவை முடிவு எடுத்துட்டடா, அந்த முடிவில் மாற மாட்டேன், மாற்றவும் முடியாது, என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.

மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விஜய்யின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

அதிலும் குறிப்பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய பேச்சுக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது.

விஜய் பேசுகையில் மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள்.

ஆனால் மதுரை மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட, அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள்.

பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள்ளத்தோடு இருப்பார்கள்.

நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது, ஏலே ஏலே என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து இருக்கும். இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பா உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான், என்று கூறினார்.

ஜனாதிபதி நிராகரித்த பிறகு தூக்கு தண்டனையை நிறுத்த முடியாது; “சோ”


ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து இனி காப்பாற்ற முடியுமா? முடியாதா? என்ற சர்ச்சை வலுத்து வருகிறது. இதுபற்றி எழுத்தாளர் “சோ”விடம் கருத்து கேட்ட போது, அவர் கூறியதாவது:

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மீண்டும் அதில் தலையிட மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. இதை தவிர சில விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே மாநில அரசு, இந்த கருணை மனுவை நிராகரித்துள்ளது. அது கலைஞர் அரசு செய்த காரியம். இப்போது ஜனாதிபதி நிராகரித்த நிலையில் மாநில அரசு அதில் தலையிட முடியாது.

கேள்வி:- கேரளா, ஆந்திராவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தப்பிறகும் மத்திய அரசு மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:- நீங்கள் சுட்டிக் காட்டுக்கிற ராமதாசின் பேச்சிலேயே கூட ஜனாதிபதி நிராகரித்தப்பிறகு மாநில அரசு கருணை மனுவை ஏற்றதாக சொல்லப்படவில்லை. மீண்டும் மத்திய அரசுதான் பரிசீலனை செய்ததாக அவர் சொல்லி உள்ளார். இந்த நிலையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இந்த பேச்சிலும் உறுதியாகிறது.

கே:- இனி 3 பேரையும் காப்பாற்ற வழி இருப்பதாக தெரிகிறதா?

ப:- மரண தண்டனையையே இனி கிடையாது என்றால்தான் இதுவும் நிற்கலாம்.

இவ்வாறு “சோ” கூறினார்.

ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

திட்டமிட்டு மற்றும் மனி தாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட கொலை குற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தூக்கு தண்டனையை உறுதி செய்து ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்த பிறகு அந்த தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ கிடையாது. சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்த பிறகு மீண்டும் மறுபரிசீலனை செய்ய முடியாது.

வேண்டுமென்றால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட விதம், கையாளப்பட்ட வழிமுறைகள் தவறு என்று வாதிடலாம். அதுபற்றி கோர்ட்டும் விளக்கம் கேட்க வாய்ப்பு உண்டு. இதனால் தண்டனையை நிறைவேற்றும் காலம் வேண்டுமென்றால் தள்ளிப்போகலாம். ஆனால் தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை. இருந்தாலும் சில வழக்கு களில் தண்டனை குறைக்கப்பட்டும் உள்ளது.

1990-ல் உ.பி.யைச் சேர்ந்த ஜும்மான்கான் என்பவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்ட னையை உறுதி செய்தது. அவர் அனுப்பிய கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லாத காலதாமதம் ஏற்பட்டு இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதேபோல் 1991-ல் தயாசிங் என்பவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்ட னையை உறுதி செய்தது. அவர் போட்ட முதல் கருணை மனு தள்ளுபடி ஆனது.

2-வது கருணை மனு மீது 2 வருடமாக நடவடிக்கை எடுக்கவில்லை. முதல் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை வைத்து தயாசிங்கை தூக்கில் போட்டி ருக்கலாம். அனால் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் மனுதாக்கல் செய்து கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. கருணை மனு கால தாமதம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை குறைத்து விடாது. காலதாதம், குற்றத்தின் தன்மையையும் பரிசீலித்து முடிவு செய்யும்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகி யோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறுத்த முடியாது. இதை தடுத்து நிறுத்த அரசியல் சட்டப்படி யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்த விஷயத்தில் முதல்- அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து மிகவும் சரியானது. இந்த பிரச்சினை மீதான அரசியல் சட்ட நிலையை அவர் சரியாக புரிந்து விளக்கி உள்ளார்.

நளினிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைப்பு சட்ட விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தில் இது மோசமானது. எனவே, சட் டத்தில் மேற்கொண்டு யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது. 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை வருகிற 9-ந்தேதி நிறைவேற்றப்பட வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் கொண்ட நமது நாடு, மென்மையான போக்கை கடைப்பிடிக்காது என்பதை உணர்த்த வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

போராளிகளுக்கு விமானம் வந்தது எப்படி ? ரிப்போர்ட்


லிபியாவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள போராளிப் படையினர் தமது தாக்குதல்களுக்கு உதவியாக உபயோகித்தது, கனடாவில் வாங்கப்பட்ட உளவு விமானம் என்ற விபரம் வெளியாகியுள்ளது. போராளிப் படையினர் வெற்றி பெற்ற பின்னர், இந்த விமானத்தின் கனேடியத் தயாரிப்பு நிறுவனம், விமானம் வாங்கப்பட்ட பின்னணித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஒன்டாரியோ மாகாணம் வாட்டர்லூவிலுள்ள ஏர்யான் லேப்ஸ் என்ற நிறுவனமே இந்த விமானத்தைப் போராளிப் படையினருக்கு விற்பனை செய்துள்ளதாம். இந்த நிறுவனத்தின் தலைவர் டேவிட் குரோட்ச், �இந்த வருடம் ஜூன் மாதத் தொடக்கத்தில், போராளிப் படையினரின் பிரதிநிதி ஒருவர் எம்மைத் தொடர்புகொண்டு, உளவு விமானம் பற்றி விசாரித்தார். அப்போதே எமக்கு இது லிபியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு போராளிப் படையினரால் உபயோகிக்கப்படவுள்ள விபரம் கூறப்பட்டிருந்தது� என்று விமானம் வாங்கப்பட்ட பின்னணி பற்றிக் கூறுகிறார்.

இது ஒரு அரசுக்கு (லிபியா) எதிரான யுத்தத்துக்கு உபயோகிக்கப்படவுள்ளது என்பதால், உடனடியாக விற்பனைக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம் என்கிறது கனேடிய நிறுவனம். ஒரு போராளி இயக்கம் விமானம் வாங்க விசாரிக்கும் விபரம் பற்றி கனேடிய பாதுகாப்பு அமைச்சுக்கு உடனே அறிவித்து விட்டது. எந்த விடுதலை இயக்கம் என்ற விபரத்தைக் கேட்டறிந்த கனேடிய பாதுகாப்பு அமைச்சு, ஆலோசனைக்காக ஓரிரு நாட்களை எடுத்துக் கொண்டது. விமானம் லிபியாவில் ராணுவத்துக்கு எதிராக உபயோகிக்கப்படவுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின், விற்பனைக்கு பச்சைக் கொடி காட்டியது கனேடிய அரசு என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் வாங்க விரும்பிய உளவு விமானம் அளவில் சிறியது. மொத்த நிறையே 2 கிலோவுக்கு குறைவானது. ஆனால், இரவிலும் பகலிலும் போட்டோக்களை எடுக்கக்கூடிய வசதியுடையது. ஒரு போராளிப் படை ஆபரேஷனுக்கு இப்படியான உளவு விமானம்தான் தேவை. ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பறக்க விடப்பட வேண்டும். பெரிய தோற்றம் இருக்கக்கூடாது. இலகுவில் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் விதத்தில் இருக்க வேண்டும். விமானத்தின் விலை கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் டொலர்.

�ஒரு போராளி அமைப்புக்கு விமானம் விற்பது மிகவும் குழப்பமான நடைமுறை� என்கிறார் டேவிட் குரோட்ச். �ஒரே நபருடன் டீல் பண்ண முடியாது. வெவ்வேறு டைப்பான ஆட்களுடன் டீல் பண்ண வேண்டியிருந்தது. இந்த போராளி அமைப்பு, நேர்த்தியான திட்டமிடலுடைய அமைப்பல்ல என்பது அவர்களுடன் டீல் பண்ணத் தொடங்கிய உடனேயே புரிந்து விட்டது�

மற்றொரு விஷயம், விமானத்துக்கான பைனான்ஸிங்.

விமானத்தை வாங்குவது ஒரு விடுதலை இயக்கம், அரசுக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு! இதற்கு பணம் கொடுப்பது, வெளிநாடுகளில் வசிக்கும் லிபியர்களும், வேறு சில அமைப்புகளுமே. இதனால், இந்த விமானம் வாங்குவதற்குத் தேவையான பணம், 8 வெவ்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்து சேரவேண்டியிருந்ததாம். இவையெல்லாம் சில நாட்களிலேயே முடிந்துவிட, ஜூலை மாதத்தில் ஸாரிபா செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த சார்லஸ் பார்லோ, இந்த விமானத்தை எடுத்துக் கொண்டு ஆபிரிக்கா சென்றார். லிபியாவில் யுத்தம் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் அமைப்புக்கான விமானத்துடன் போய், தலைநகர் ட்ரிபோலியில் உள்ள விமான நிலையத்தில் இறங்க முடியாது அல்லவா.

இவரை விமானத்துடன் மால்டா நாட்டுக்கு வருமாறு தகவல் கொடுத்திருந்தனர் போராளி அமைப்பினர். மால்ட்டாவிலிருந்து லிபியாவுக்கு செல்வதற்கு ஒரு கப்பல் தயாராக இருக்கும் என்று அவருக்கு கூறப்பட்டிருந்தது. கப்பல் ஒன்று தயாராகத்தான் இருந்தது. ஆனால், அது பயணிகள் கப்பல் அல்ல. மீன் பிடிக்க உபயோகிக்கப்படும் கப்பல். தென் கொரிய மீன்பிடிக் கப்பல் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தனர் போராளி அமைப்பினர். மால்டாவில் இருந்து அந்தக் கப்பல் புறப்பட்டபோது, விமானம் சகிதம் சார்லஸ் ஏறிக் கொண்டார். அதே கப்பலில் பி.பி.சி.யிலிருந்து வந்திருந்த சில கேமராமேன்கள், ஜேர்மன் ரெட் கிராஸினால் வழங்கப்பட்ட இரு மருத்துவ வாகனங்கள், சில செல்போன் தொழில்நுட்ப ஆட்கள் என்று கப்பல் நிறைந்துவிட்டது. கடலில் 18 மணிநேர பயணத்தின்பின் கப்பல், லிபியாவின் துறைமுக நகரமான மிசூராடாவில் நங்கூரமிட்டது.

மிசூராட்டா நகரத்தில் ஏற்கனவே போராளிப் படையினருக்கும் ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்று முடிந்திருந்தது. ராணுவம் அந்த நகரைக் கைவிட்டு தப்பியோட, போராளிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நகரம் வந்திருந்தது. இதனால், இவர்கள் அங்கே போய் இறங்குவதில் சிக்கல் ஏதுமில்லை. இமிகிரேஷன், கஸ்டம்ஸ் என்று ஏதும் இல்லாமல், நேரே கொண்டுபோய் கரையில் இறக்கி விட்டார்கள். அங்கே காத்திருந்த போராளிப் படையினர் சார்லஸை அழைத்துச் சென்றனர். சார்லஸ் அந்த நகரில் இரு தினங்கள் தங்கி, விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது. அந்த இரு தினங்களுத், நகருக்கு வெளியே இருந்து கடாபி ராணுவத்தினர், நகருக்கு உள்ளேயுள்ள இலக்குகளை நோக்கி ஆட்டிலரி ராக்கெட் தாக்குதல்களை நடாத்திய வண்ணம் இருந்தனர்.

நகருக்குள் ஒரு பக்கமாக ஆட்டிலரி ஷெல்கள் வந்து வீழ்ந்து அதிர்ந்து கொண்டிருக்க, மறு பக்கமாக இந்த விமானத்தை இயக்கப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் சார்லஸ். தலைநகர் ட்ரிபோலியை போராளிப் படையினர் கைப்பற்றுவதற்கான இறுதிப் போர் தொடங்கியது. போராளிப் படையினரின் நகர்வுக்கு இந்த உளவு விமானம் பெரிதும் உதவியாக இருந்தது. ராணுவத்தினர் எங்கே இருந்தபடி ஆட்டிலரி தாக்குதல்களை நடாத்துகின்றார்கள் என்பதைத் துல்லியமாகப் படமெடுத்து அனுப்பியது இந்த விமானம். இதன் உதவியோடு போராளிகள் பல இடங்களை வென்றனர் என்ற செய்தி இப்போதுதான் கடாபிக்கே சென்றிருக்கும். ஆக மொத்தத்தில் மேற்குலகம் என்ன நினைக்கிற்தோ அதுவே உலகின் பல பாகங்களில் நடைபெற்று வருகிறது. புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்க அவர்களே முதலில் நினைத்தார்கள். அதுதான் நடந்தும் முடிந்தது.

Monday, August 29, 2011

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...?


ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்....

எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...

வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....

வஞ்சக நோக்கம் உடையவள்...

அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்

வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்

தூது செல்பவள்

தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்

குலப் பெருமையை அறிந்திராதவள்

மலடி

கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்

செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்

வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...

கட்டுப்பாடு இல்லாதவள்

அசாதாரணக் குணம் உள்ளவள்

தகுதியற்றவனை மணந்தவள்

வயதான கணவனைக் கொண்டிருப்பவள்

இளம் வயதில் கணவனை இழந்தவள்

அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்

காம இச்சை அதிகம் கொண்டவள்

ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்

கணவனை வெறுப்பவள்....

இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....*

ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.

எஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்த நாய். (வீடியோ இணைப்பு)


வாலை குலைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா என்று பாடி இருக்கின்றார் மகாகவி பாரதியார். கணவன் இறந்தமையை அறிந்த கணத்திலேயே உயிரைத் துறக்கின்ற மனைவியை நாம் இலக்கியப் பாத்திரங்களூடாக கேள்விப்பட்டு இருக்கின்றோம்.

எஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்து விட்டது இந்நாய்.

எஜமானனின் பெயர் ஜோன். இராணுவ வீரர். திடீர் மரணம் அடைந்து விட்டார். இவரது சடலம் வீட்டில் பிரேதப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது.

இவர் இறந்து விட்டார் என்பதை உணர்ந்து கொண்ட செல்லப் பிராணியான நாய் பிரேதப் பெட்டிக்கு அருகில் உயிரை மாய்த்துக் கொண்டது.

தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்

சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை பிள்ளை போல் இன்று அனைவரது கரங்களிலும் அதி நவீன செல் போன்கள். செல்போனில் வீடியோ கேமரா வசதி வந்த பின்னர் சைபர் குற்ற நடவடிக்கைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காரணம் இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சேலை அணிந்து செல்லும் குடும்ப பெண்களையும் ரகசியமாக படம் பிடித்து கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக மாற்றி இண்டர்நெட்டில் பரவ விடுகின்றனர். செல்போன் பயன்படுத்தும் சில குறும்பு கார மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இண்டர் நெட்டில் இருந்து அத்தகைய காட்சிகளை செல்போனில் டவுன் லோடு செய்து கொள்கின்றனர். தாங்கள் பார்த்து மகிழ்வது மட்டுமல்லாமல் தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


நடிகை திரிஷா குளியல் காட்சி, ரசிகர்கள் கூட்டத்தில் கசங்கும் ஜோதிகா, உடை மாற்றும் குஷ்பு, ஆடை நழுவும் கிரண், மசாஜ் சென்டரில் திரிஷா, முத்தமிடும் நமீதா என தமிழ் திரையுலக நடிகைகளின் பட காட்சியை கிராபிக்ஸ் மூலம் இண்டர் நெட்டில் ஆபாசமாக உலவ விட்டனர். அதனை செல்போன் மூலம் பரவ விட்ட குறும்பு காரர்கள் தற்போது நடிகை பூஜா சோபாவில் அமர்ந்து தொழில் அதிபர் ஒருவருடன் செக்ஸ் அனுபவிப்பது போன்ற ஆபாச காட்சியை பரப்பி வருகின்றனர்.


மாதவன் ஜோடியாக `ஜே.ஜே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக மானவர் நடிகை பூஜா. தொடர்ந்து இவர் அட்டகாசம், தம்பி, பொறி உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட பூஜா தற்போது கொழும்புவில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி வருகிறார்.


இந்த நிலையில் நடிகை பூஜாவின் ஆபாச படம் `பிசினஸ்மேன் வித் பூஜா’ என்ற பெயரில் செல்போனில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1 நிமிட நேரம் ஓடும் அளவிற்கு உள்ளது இந்த ஆபாச காட்சி. ஒரு ஷோபாவில் பூஜா நிர்வாண நிலையில் அமர்ந்திருக்கிறார். பின்னர் 20 வினாடிகள் அவரது முகம் குளோசப் காட்சியில் காட்டப்படுகிறது. தொடர்ந்து சுமார் 40 வயது தொழில் அதிபர் ஒருவருடன் பூஜா உல்லாசமாக இருப்பது போல அந்த காட்சி அமைந்துள்ளது.


நடிகை பூஜாவின் ஆபாச காட்சி சென்னை, புதுவை, கோவை, திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே செல்போன் மூலம் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.


ஆபாச காட்சியில் இடம் பெற்றுள்ளது நடிகை பூஜாவா, அல்லது அவரை போன்ற உருவ அமைப்பு கொண்ட வேறு ஆபாச நடிகையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் நடிகை பூஜாவின் ஆபாச காட்சியில் கிராபிக்ஸ் ஏதும் இடம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்து வருகிறார்கள்.

கோவையில் பதட்டம்: தூக்குக்கு எதிராய் நடுவன் அரசு அலுவலகங்கள் முற்றுகை! பரபரப்பு காணொளி இணைப்பு


கோவையில் இன்று மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராய் சட்டக்கல்லூரி மாணவர்கள் அணி அணியாக பிரிந்து ஒவ்வொரு நடுவன் அரசு அலுவலகங்களாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று கோவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததற்கு இணங்க, அனைத்துக்கட்சியினரும் தொடர்வண்டி நிலையம் அருகில் குவிந்திருக்க, அங்கு காவல் துறையும் பெரும்படையை குவித்திருந்தது.

இந்த நிலையை மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கோவை மாநகரில் அமைந்துள்ள நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அணி அணியாக படையெடுத்தனர்.

முதலில் ஒரு அணி அவினாசி சாலை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள கடவு சீட்டு அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இன்னொரு அணியோ கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள மண்டல வருமான வரி ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிட்டது.

மேற்படி நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிந்திருக்கவில்லை. காவல்துறையின் கவனம் தொடர்வண்டி நிலையத்திலேயே இருந்தது. மாணவர்கள் தொடர்ந்து முக்கிய சாலை சந்திப்புகள் வழியாக நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பாதசாரிகள், பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பதட்டம் அடைந்தனர். என்ன நிகழ்கிறது என்று யாருக்கும் அங்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் கோவை மாநகரில் நாள் முழுதும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.






தென்னாபிரிக்க அதிபருடன் புலிகளின் நெருக்கம்: இலங்கை அதிர்ச்சி !


விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அரசுடனும் அங்கே இருக்கும் பல நாடுகளோடும் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகள் தொடர்பாக இலங்கை பெரும் அதிர்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புலிகள் சமாதான காலத்தில் அதன் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனூடாகவும் மற்றும் இதர சிரேஷ்ட உறுப்பினர்களூடாகவும் ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளிடம் நட்புறவை வளர்த்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரித்திரியா நைஜீரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் அவர்கள் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புகைப்படம் தொடர்பாகவும் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் ஸுமா சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தனது வீட்டில் வைத்து உரையாடும் இப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பல நாடுகளை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தென்னாபிரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்கொப் ஸுமா அவர்கள் உலகில் உள்ள பலம்பெருந்திய தலைவர்களில் ஒருவர் ஆவார். விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அதிபருடன் கொண்டுள்ள உறவுகள் குறித்து இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலம்பெயர் மக்களின் போராட்டம் ஒரு புறம் இருக்க, மேற்குலகின் போர் குற்ற அழுத்தங்கள் மறு முனையில் இருக்க ஏக காலத்தில் புலிகளின் மறை முகப் பலம் தொடர்பாக இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது எனக் கொழும்பில் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளிடன் மொத்தமாக 3 விமானங்கள் இருந்ததாகவும், அவற்றில் 2 விமானங்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3 விமானம் எங்கே சென்றது என்பது தொடர்பாக இலங்கைப் புலனாய்வு இன்னும் ஆராய்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாது புலிகளிடம் கிளைடர் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்றும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்விமானமும் மாயமாக மறைந்துள்ளது. இலங்கை அரசானது தனது தரைப்படையின் கட்டமைப்பை மாற்றாது, வான்படை மற்றும் கடற்படைகள் கட்டமைப்பை பலப்படுத்தி வருவதன் பின்னணி தான் என்ன எனப் பலர் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இலங்கை அரசானது எதற்கு இவ்விரு கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகின்றது என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது எனலாம்.

நன்றி:athirvu.com

தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யும் அதிகாரம் எனக்கில்லை! 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரையே அணுக வேண்டும் ஜெயலலிதா!


03 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்குத் தண்டனையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்யலாம். அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி அவர் மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். ஒருவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டால், அதில் மாநில முதல்வரால் தலையிட முடியாது.

தூக்குத் தண்டனையை எதிர்கொண்டுள்ள அந்த மூவரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகி கருணை கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

Tuesday, August 23, 2011

ஆயுர்வேதம், ஆபாசமாக மாறிய அதிசயம் :: செல்போனில் பரவும் திரிஷாவின் மசாஜ் வீடியோ


நடிகை திரிஷாவுக்கும், ஆபாச வீடியோவுக்கும் என்ன ராசியோ தெரியவில்லை. அவ்வப்போது அவரது கிளுகிளு வீடியோ காட்சிகள், செல்போன் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் பரவி வருகிறது.

தற்போது கோவை பள்ளி- கல்லூரி மாணவர்களின் செல்போனில் நடிகை திரிஷா அரைநிர்வாணமாக பால், ஆயில் மசாஜ் செய்யும் வீடியோ பரவ தொடங்கி உள்ளது.

கோவையில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடங்கி கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை செல்போனை தாராளமாக உபயோகிக்கிறார்கள். இதில் கேமரா செல்போன்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய நபர்களை படம் பிடிப்பது, மெமரி கார்டு மூலம் சினிமா படங்களையும், கிளு கிளு ஆபாச படங்களையும் பார்த்து ரசிப்பதில் சிறுவர்கள் மிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கோவையின் மைய பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாட நேரத்தில் செல்போனில் எதையோ ரகசியமாக பார்த்து சிரித்துள்ளனர். இதை அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை கவனித்து விட்டார். அவர்களிடம் இருந்து செல்போனை பறித்து அவர்கள் எதை கண்டு சிரித்தனர் என்று செல்போனை உற்று நோக்கியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் நடிகை திரிஷாவுக்கு மசாஜ் செய்யும் கிளுகிளு ஆபாச வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. இதுபற்றி மாணவர்களிடம் கண்டிப்புடன் விசாரித்தார். அவர்கள் காந்திபுரம் பகுதியில் மெமரி கார்டுகளில் பாடல் மற்றும் இதுபோன்ற படங்களை பதிவு செய்து தருவதற்கு நிறைய செல்போன் சர்வீஸ் இருப்பதாகவும், அதில் ரூ. 200 முதல் ரூ. 400 வரை கொடுத்தால் ஆபாசப் படங்கள் பதிவு செய்யப்பட்ட தனி மெமரி கார்டுகளே கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த பள்ளி ஆசிரியை பள்ளி தாளாளரிடம் புகார் செய்துள்ளார். அந்த பள்ளியில் மாணவர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஆபாச படங்களை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து கொடுக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

செல்போன் சர்வீஸ் கடைகளில், இணையதளங்களில் இருந்து ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்து மெமரி கார்டில் பதிவு செய்து கொடுக்கின்றனர்.

இதுபோல கேரள சுற்றுலா துறை இணையதளத்தில் நடிகை திரிஷா உள்ளிட்ட சில இளம் பெண்கள் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ உள்ளது. இதில் இருந்து ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்து மெமரி கார்டில் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது.

கேரள சுற்றுலா துறை வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக "ஆயுர்வேத மசாஜ்" என்ற பெயரில் பெண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்யும் வீடியோக்களை தயார் செய்துள்ளது. அதில் தான் நடிகை திரிஷாவுக்கு மசாஜ் செய்யும் காட்சி உள்ளது.
ஒரு பெண் ரூபீஸ் உடையில் ஆயில் மசாஜ் செய்வது போன்ற காட்சியும் உள்ளது. இவற்றைதான் பள்ளி மாணவர்களின் செல்போனில் பதிவு செய்து கொடுத்துள்ளனர். அதாவது, இந்த வீடியோக்களோடு ஷகீலா படத்தில் நடித்த கிளுகிளு காட்சிகளையும் இணைத்துள்ளதால் ஆயுர்வேதம், ஆபாசமாக மாறி உள்ளது தெரிய வந்தது.

இதனை டவுன்லோடு செய்து கொடுத்த சில கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் இது போன்று செயல்படும் செல்போன் சர்வீஸ் கடைகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்; சக்சேனா-அய்யப்பனிடம் விரைவில் விசாரணை


திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து புகழ் பெற்றார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நித்யானந்தா பின்னர் ஜாமீனில் வெளிவந்து ஆசிரம பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நித்யானந்தா ஆசிரமத்தின் தமிழக தலைவர் நித்யசிவானந்தா, மற்றும் பெங்களூர் ஆசிரமத்தின் மானேஜர் ஆத்ம பிரமானந்தா ஆகியோர் கமிஷனர் திரிபாதியிடம் தனித்தனியாக 2 புகார் மனுக்களை அளித்தனர்.

அதில் ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டது. பின்னர் ரூ.35 கோடி பணம் தரவேண்டும் என்று மிரட்டினார்கள். முதலில் தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஆசிரம நிர்வாகிகளை சிறை வைத்து ரூ.30 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டனர் என்று கூறியிருந்தனர்.

இது தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சன் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், ஆபாச படம் எடுத்த நித்யா னந்தாவின் சீடர் லெனின் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. ஸ்ரீதர் ஆகியோரது மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பரணிகுமார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தா- ரஞ்சிதா ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனை ஏற்று நேற்று மாலை 3 மணிக்கு கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நித்யானந்தா ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆபாச படம் வெளியானது மற்றும் அதன்பிறகு நடைபெற்ற மிரட்டல் சம்பவங்கள் குறித்து நித்யானந்தா விரிவாக விளக்கம் அளித்துள்ளார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக தன்னால் புகார் கொடுக்க முடியாதது குறித்தும் ரஞ்சிதா எடுத்துக் கூறியுள்ளார். தன்னை யார்-யார் மிரட்டினார்கள் என்பது பற்றிய தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆபாச படத்தை காட்டி சீடர் லெனின் தன்னை கற்பழிக்க முயன்றார் என்று ரஞ்சிதா குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்தும் பல்வேறு தகவல்களை ரஞ்சிதா கூறியுள்ளார். இதையடுத்து சீடர் லெனினிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இந்த வழக்கில் இவர் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல சக்சேனா, அய்யப்பன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக 2 பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச படவிவகாரம் 1.5 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சூடு பிடித்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து இதன் பின்னணியில் இருந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

கிளி. கரைச்சி பிரதேசசபைத் தேர்தல் வெற்றி! கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீர மறவர்களுக்கு சமர்ப்பணம்!- எம்.எம்.ரதன்


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வெற்றியை கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரமறவர்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றோம் என தமிழ் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வட-கிழக்கு இணைந்த தாயக பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வரலாறு காணாத வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது. அதை எவரும் மறுப்பதற்கில்லை. எனவும் அவர் தெரிவித்தார்.

கரைச்சி பிரதேச சபையில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பதவியேற்பு வைபவம் கிளிநொச்சியில் நேற்று காலை எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமை தாங்கினார். சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க நகரின் மத்தியில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் அனைவரும் கரைச்சி பிரதேச சபை செயலகம் வரை அழைத்து செல்லப்பட்டனர்.

அதன் பின்னர் அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய எம்.எம்.ரதன்,


இன்று வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்வில் நாம் நிற்கும் சர்வதேசமே வியந்த ஒரு மிகப்பெரும் நகரிலே நின்று நாம் விழா எடுக்கின்றோம். எங்கள் முப்பது வருடகால போராட்டத்திலே குறிப்பாக நான்காம் கட்ட ஈழப்போரிலே கிளிநொச்சி என்ற நகர் வரலாற்று பிரசித்தி பெற்றது.

இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்நகரில் மீண்டும் ஓர் தேசியம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் இந்த அரசாங்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சியை நோக்கி தனது முழுவளத்தையும் பயன்படுத்தியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சகோதரர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள், ஏனைய பட்டாளங்கள் என அனைவரும் இங்குதான் முகாமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். தாமே வெற்றியடைவோம் என கனவு கண்டார்கள். இறுதியில் நடந்தது என்ன?

எமது தமிழ் பேசும் மக்கள் மிகத் தெளிவான செய்தியை யாவருக்கும் சொல்லியுள்ளார்கள். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று நிற்பதற்கு வாக்களித்துள்ளார்கள்.

நாம் வாழ பிறந்தவர்கள், ஆளப் பிறந்தவர்கள் என்ற நிலையில் நாம் தோற்று போனவர்களும் அல்ல தோற்கடிக்கப்பட்டவர்களும் அல்ல என்ற நிலையில் கொள்கையின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்திற்காக வாக்களித்துள்ளனர்.

எனவே இந்த வெற்றியை மண்ணின் விடுதலைக்காக போராடி எமது தேசத்தின் விடுதலைக்கு வலுச்சேர்த்த 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களுக்கும், இறுதி வரைக்கும் எங்கள் போராட்டத்துடன் நின்று உயிர்நீத்த 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும் காணிக்கை ஆக்குகின்றோம்.

இவர்களின் இத்தியாகத்தை நிறைவேற்ற வட-கிழக்கு இணைந்த எமது தாயகத்தின் விடுதலைக்காக தொடர்ந்தும் நாம் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடலில் மூழ்கிய கப்பலில் எடுக்க எடுக்க பொக்கிஷம்!

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமீபியா. இங்குள்ள விண்ட்ஹுக் நகருக்கு அருகே அட்லான்டிக் பெருங்கடலில் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த போர்ச்சுகீசிய கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் விபத்துக்குள்ளான கப்பல்கள்தான் அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கும். ஆனால், இந்த கப்பல் சிறிதும் சேதமில்லாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடலில் கப்பல் மூழ்கி 500 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால், கப்பலின் ரகசிய அறையில் வைக்கப்பட்ட அரிய பொக்கிஷங்கள் அழியாமல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். கப்பலின் அறையில் இருந்து 2,266 தங்க, வெள்ளி காசுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பல பொக்கிஷங்கள் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதால் தீவிர ஆய்வு நடந்து வருகிறது.

கப்பல் மூழ்க காரணம் எதிர்பாராத விபத்தா, திட்டமிட்ட சதியா, கொள்ளையடிக்கும் நோக்கில் தாக்கப்பட்டதா என்றும் ஆய்வு நடக்கிறது. கப்பலில் இருந்து கிடைத்துள்ள பொக்கிஷங்கள் நமீபியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

Friday, August 12, 2011

Facebook இன் அழிவு நாள் நவம்பர் 5 – திருடர் குழு சபதம்


Anonymous குழுவினர் சிரியாவின் பாதுகாப்புத் தளத்தினைத் தாம்தான் திருடியதாக உரிமை கோரியுள்ளனர். இதன் சில உறுப்பினர்கள் அடுத்ததாக Facebook இனையும் அழிக்க விரும்புகின்றனர் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவாக உங்களது நண்பனின் வேண்டுதலை Anonymous குழு ஏற்றுக்கொள்ளாது.

அரசியல்ரீதியான இணையத்தளத் திருட்டுக்களையும் தாக்குதல்களையும் செய்துவரும் இதன் மறைமுக உறுப்பினர்கள் தற்போது Facebook சமூக இணையத்தளத்தினை இலக்காகக் கொண்டுள்ளனர்.

இந்த இணையத்தளம், சமூகத்தின் தனிநபர் தகவல்களைப் பிழையாகப் பயன்படுத்துவதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

‘நீங்கள் மிகவும் விரும்பும் உங்களது தொடர்பாடல் ஊடகம் அழிக்கப்படும்’ என அதன் பேச்சாளர் YouTube காணொளியில் தெரிவித்துள்ளார்.

இது யூலை 16 இல்தான் காட்டப்பட்டது. எனினும் இந்த வாரந்தான் இது சூடுபிடித்துப் பரவலாகச் சுழலத்தொடங்கியுள்ளது.

பேச்சாளர் மேலும், ‘Facebook இல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயற்பாடும் Facebook இலேயே இருப்பதுடன் தனிநபர் விருப்பிற்கு மாறாக உங்களது கணக்கினை அழிப்பதும் முடியாத காரியமாகிவிடும்.

எனவும் Facebook தனது பயனாளர் தகவல்களை அரச நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றது எனவும் அவை பின்னர் மக்களை வேவு பார்க்கப் பயன்படுத்துகின்றன’ எனவும் கூறினார்.

ஒரு Facebook பேச்சாளர் இந்தக் கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துப் பதிலளித்திருந்தார்.

Facebook இனை முடக்கும் நடவடிக்கை நாளாக நவம்பர் 5 உள்ளது. இது கரிமருந்துத் திட்டத்தின் நினைவாகக் கொண்டாடப்படும் Guy Fawkes Day எனும் நாளாகும்.

இந்நாளில்தான் 1605ஆம் ஆண்டில் Fawkes என்பவர் பிரித்தானியப் பிரபுக்களின் வீடுகளில் வெடிமருந்துகளை வைத்து வெடிக்கவைத்தனர்.

Anonymous குழுவின் பொதுவான தாக்குதலாக ஒரு தளத்தினைத் திறக்க மறுக்கும் செய்தியை அனுப்புவதே உள்ளது. ஓர் இணையத்தளத்திற்குள் செல்ல மக்கள் பல தடவைகள் அதைத் திறக்கின்றனர்.

இது மோசமாக அல்லது நெரிசலாகப் போகும்பட்சத்தில் அதன் இணையத் தொடர்பினையே அது நிறுத்திவிடுகின்றது.

ஆனால் எல்லோராலும் விசிலடிக்குமளவிற்கு உயர்நிலையில் இருந்த விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு ஆதரவு தெரிவித்த Anonymous இன் உறுப்பினர்கள் எல்லோருக்கும் Facebook இனைத் தாக்கும் எண்ணம் இல்லை என்பது தெளிவாகவே உள்ளது.

இவ்வமைப்பின் குறிப்பிட்ட சில உறுப்பினர்களே facebook இனை முடக்குவதற்கு முன்னிற்கின்றனர்.

இக்குழுவின் செயற்பாடுபற்றிக் குறிப்பிடும் @GoupAnon எனும் Twitter பகுதி, எல்லா Anonymous உறுப்பினர்களும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தது.

தனியான தலைவரின்றியுள்ள இந்தக் குழுவின் ஒழுங்கமைப்பு அதிக கட்டுப்பாடுகளின்றியே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் 750 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட இணையத்தளத்தினை அழிக்க அல்லது மெதுவாக்கப் போதுமான உதவியை மற்றவர்களிடமிருந்து ஒற்றுமையாகப் பெறுவார்களா என்பது சந்தேகமே.

இதே குழு டிசம்பரில்தான் ஒன்லைன் சந்தைப்படுத்தல் தளமான Amazon எனும் இன்னொரு இணைய இராட்சதனை அழிக்க முயற்சித்துத் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடங்களில் இந்த Anonymous குழு புகழ்பெற்ற இணையத்தளங்களான PayPal, Master Card, ஏனைய மற்றும் Church of Scientology போன்றவற்றைக் குழப்பியதாகப் பொறுப்பேற்றிருந்தது.

புலம்பெயர் உறவுகளே! வெளிநாட்டில் அணிகின்ற ஆடைகளைத் தவிர்த்து எம் கலாசார உடைகளை அணிந்து வாருங்கள்...!


வெளிநாடுகளில் வாழும் எமது அருமை உறவுகளுக்கு வணக்கம். ஈழத் தமிழ் மக்கள் உள்நாட்டில் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்த போதெல்லாம், நீங்கள் ஐரோப்பிய நாடுகளின் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தியதை நாம் ஒருபோதும் மறந்திலோம். சொந்த நாட்டை விட்டு வசதி, வாய்ப்பு என எல்லாமும் இருக்கக்கூடிய வெளிநாட்டிற்கு வந்தபின்பு நம் பாட்டில் இருக்கவேண்டியதுதானே. இந்த நினைப்பு இம்மியும் இல்லாமல் எங்களுக்காக நீங்கள் செய்தவை, செய்து கொண்டிருப்பவை ஏராளம்.




நீங்கள் வெளிநாடுகளில் இருப்பது எங்களுக்கான பலம் என்ற உண்மை முழுமையாக உணரப்பட்ட நிலையில், உங்களின் யாழ்ப்பாண வருகை கண்டு மட்டற்ற மகிழ்வு அடையாமல் இருக்கமுடியாது.

நல்லூர்க் கந்தனின் திருமுகம் காண, அவனின் பெருந்திருவிழாக் காலத்தில் நீங்கள் வருவதானது உங்களின் இறைபக்திக்கும், தாய்த் தேசம் மறவாத பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டாகும்.

இத்தகைய உயர்ந்த சிறப்புக்கள் உள்ள உங்களிடம் விநயமாக ஒன்றைக் கூறவேண்டும். அதாவது, நீங்கள் வெளிநாடுகளில் எப்படியான உடைகள் அணிகின்றீர்கள் என்பது பற்றியெல்லாம் எமக்கு எந்தக் கவலையும் கிடையாது.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வருகைதருகின்ற நீங்கள், வெளிநாட்டில் அணிகின்ற ஆடைகளைத் தவிர்த்து எங்கள் பண்பாட்டிற்கு உகந்த உடைகளை அணிய வேண்டும் என்பது எங்கள் பெருவிருப்பம்.

இப்பெருவிருப்பம் உங்கள் பற்றிய உயர்ந்த நினைப்பை உருவாக்கவேண்டும் என்ற நன்நோக்கம் கொண்டது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

சட்டக் கல்வியை நிறைவு செய்துவிட்டு பாரதம் திரும்பிய மகாத்மா காந்தி, தான் அணிந்திருந்த அந்நிய நாட்டுக் கலாசார ஆடைகளை புறந்தள்ளி பாரததேசம் மதிக்கக்கூடிய உடைகளை அணிந்தார் என்ற செய்தியை அறிகின்றபோது காந்தியின் தேசப்பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றதல்லவா? ஆம், எங்கள் மண்ணில் எங்களுக்கே உரித்தான ஆடைகளை அணிவதே பொருத்தமானதாகும்.

மனித வாழ்வில் ‘பொருந்துகை’ என்பது மிகவும் முக்கியமானது. எனவே வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரும் எமது அருமை உறவுகள் எங்கள் பண்பாட்டிற்குரிய ஆடைகளை அணியவேண்டும். அதேநேரம் நீங்கள் வாழும் நாட்டில் பிறந்த தமிழ் மண்ணின் வாரிசுகளுக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக்கொடுங்கள்.

நிச்சயம் அவர்கள் அதன்பால் விருப்பம் கொள்வர். அது வெறுமையான விருப்பமன்று. அது தமிழ் மீது பற்றுவைக்க, தங்கள் தாத்தா, பாட்டி என்ற உறவைப் போற்ற, தாய் மண்ணில் பாசம் கொள்ள நிச்சயம் உதவும் என்பதை சத்தியமாகச் சொல்கின்றோம்.

நித்தியானந்தாவின் புதுக் காம லீலை !

நித்தியானந்தா , தானும் ரஞ்சிதாவும் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த காட்சிகள் அனைத்தும் பொய் என்கிறார். அவ்வளவும் கிராபிக்ஸாம். தான் இருந்தது படுத்தது நடந்தது எல்லாத்தையும் வெவ்வேறா ரக்கோட் செய்து பின்னர் ரஞ்சிதாவின் காட்சிகளோடு பொருத்தியுள்ளனராம் என்று சொல்கிறார். இலங்கை அரசு சனல் 4 வீடியோ பொய் என்று சொன்னது போல இவரும் இது ஒரு கிராபிக்ஸ் என்கிறார். அதற்கு அவர் சொல்லும் வார்த்தைகளும், அதுக்கு கவுண்டர் செந்தில், சந்தானம், விவேக் இருந்தா எப்படி பதில் சொல்லி இருப்பாங்க எண்டு ஒரு நகைச்சுவைக் காட்சி இங்க வீடியோவா இருக்கு. நிச்சயம் பார்க்கவேனும் சார் ! பாருங்க !

வாங்க சுயமாக இணைய வானொலி ஆரம்பிக்கலாம். (வீடியோ உதவி உள்ளே)

எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து இருக்கிறீர்களா? பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தா? ஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க கூடாது? ஓடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய சேவைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் புதிதாக நேர்ந்திருக்கிறது ஸ்பிரிக்கர்.


உலகோடு பேசுங்கள் என அழைக்கும் இந்த இணையதளம் உங்களுக்கான இணைய வானொலியை நடத்தி கொள்ள வழி செய்கிற‌து. அதிலும் எப்படி, இதோ இந்த நிமிடத்தில் இருந்து உடனடியாக உங்கள் வானொலி சேவையை துவக்கி விடலாம். ஆம் பேசுவதற்கோ பகிர்ந்து கொள்வதற்கோ விஷயம் இருக்கிற‌து என்றால் இந்த தளத்தில் உறுப்பினராக உடனேயே உங்களுக்கான வானொலியை துவக்கி விடலாம். நேரடி ஒலிபரப்பு என்பார்களே அதே போல நீங்கள் பேச பேச நிகழ்ச்சி உங்கள் வானொலியில் ஒலிபர‌ப்பாகும். இல்லை என்றால் அழகாக திட்டமிட்டு ஒரு நிகழ்ச்சியை தயார் செய்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம். பதிவு செய்யவும் சிறப்பு சப்தங்களை சேர்க்கவும் வசதி உள்ளது.


நீங்கள் கேட்டு ரசித்த பாடல்கள், நாட்டு நடப்புகள் மீதான விமர்சனம், கிரிக்கட் வர்ணனை என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். வானொலி நடத்தும் அளவுக்கு குரல் வளம் எல்லாம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் மற்றவர்கள் வானொலியை கேட்டு பாருங்கள். உருவாக்கி வைத்திருக்கும் விதவிதமான வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ர‌சிக்கலாம். நிறுவனங்களால் நடத்தப்படும் வணிக ரீதியிலான வானொலி நிகழ்ச்சிகளை விட இவை மாறுபட்டதாக இருக்கும். உறுப்பினர்களின் நிகழ்ச்சிகள் அவற்றின் வகைகளுக்கேற்ப தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பும் பிரிவை தேர்வு செய்து கேட்கலாம்.


சொந்தமாக வானொலியை நடத்துபவர்கள் தங்களுக்கான நேயர்களை தேடி கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் இருக்கிற‌து. வானொலியை உருவாக்கிய பிறகு அதனை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வழியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதே போல் நிகழ்ச்சியின் வகைகளை அதற்கேற்ற சொற்கள் மூலம் வகைப்படுத்தலாம். வானொலியை நடத்துபவர்களுக்கான தனி பக்கமும் தரப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரலாம். இணையம் ஏற்படுத்தி தந்துள்ள எல்லையில்லா வாய்ப்பின் அடையாளமாக இணையவாசிகள் தங்களுக்கான வானொலி நிலையத்தை நடத்தி கொள்ள உதவுகிற‌து இந்த தளம்.

http://www.spreaker.com


மன்மோகன் சிங் என்னும் கல்லுளி மங்கனின் திருட்டுத்தனம் அம்பலம் !

ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான். இந்த மன்மோகன் சிங் சாதாரணமான நபர் அல்ல. இன்று இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மன்மோகனே காரணம் என்றால் அது மிகையாகாது.

மிஸ்டர்.க்ளீன் என்ற ஒரு இமேஜை வேறு வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர் என்றால் அது மன்மோகன் சிங் தான். இந்த மிஸ்டர்.க்ளீன் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடைபெற்ற ஊழலை நிச்சயமாக தடுத்திருக்க முடியும். 25.10.2007 அன்று, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் டி.எஸ்.மாத்தூர், குறைந்த பட்சம், ட்ராயின் கருத்தைக் கேட்டாவது முடிவெடுக்கலாம் என்றும், ராசாவின் பார்வைக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும், ஸ்பெக்ட்ரம் எவ்வளவு உள்ளது என்பதையும், பல மாநிலங்களில் கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி அலுவலகக் குறிப்பு ஒன்றை வைக்கிறார். பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் தெரிவித்தது என்ன தெரியுமா ?

�மே 2007ல் மந்திரியாக ஆனதும், ராசா என்னை அழைத்தார். �சார் குறைஞ்சது 500 லைசென்ஸாவது குடுக்கனும். என்ன பண்ணலாம்னு சொல்லுங்க� என்று கூறினார். அதற்கு மாத்தூர், ஸ்பெக்ட்ரம் அந்த அளவுக்கு இல்லை. கொடுக்க இயலாது என்று தெரிவிக்கிறார். உடனே ராசா �லாஸ்ட் டேட்ட மாத்திட்டா குடுக்கலாம்ல ?� என்று எதிர்க் கேள்வி போடுகிறார். அதற்கு மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கடைசித் தேதியை மாற்றுவது என்பது தவறானது அதனால் அவ்வாறு செய்ய இயலாது� என்று கூறுகிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் லீவ் போட்ட அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் ராசா�. இது போல ராசாவுக்கு, பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டன.

ராசா எச்சரிக்கையை சட்டை செய்பவரா என்ன ? பெயருக்கேற்றார் போல எதேச்சதிகாரமாக செயல்பட்டார். தகத்தகாய கதிரவனல்லவா ? 02.11.2007 அன்று, 25.09.2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதுதான் கடைசித் தேதி என்று முடிவெடுக்கிறார். இந்த முடிவின் முக்கியப் பின்னணி, 25.09.2007 அன்று கடைசி தேதி என்று முடிவெடுத்தால், டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கான ஸ்பெக்ட்ரம், ராஜாதி ராசாவுக்கு நெருக்கமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு கொடுக்க இயலும்.
சரி. நான் எடுத்ததுதான் முடிவு என்று தொலைத் தொடர்புத் துறையில் சொல்லியாகி விட்டது. ட்ராய் அமைப்புக்கு கூட தகவல் தெரிவிக்க மாட்டேன், என்றும் சொல்லியாகி விட்டது. இத்தோடு விவகாரம் முடிந்து விடுமா என்ன ? ராசாவுக்கு மேல் சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறாரே�. மன்மோகன் என்று. அவருக்கு சொல்ல வேண்டாமா ?

02.11.2007 அன்று, ராசா பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 25.09.2007தான் விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி என்ற விபரம் பத்திரிக்கைகளில் அறிவிப்பாக வந்ததாக கூசாமல் ஒரு பொய்யை எழுதுகிறார். அதோடு நில்லாமல், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், ஸ்பெக்ட்ரம் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாளை நிர்மாணிப்பது தொடர்பான விவகாரத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய கருத்து, தவறானது என்றும் குறிப்பிடுகிறார். எப்படி இருக்கிறது ? சட்டத்துறை அமைச்சகம் தவறாக கூறியதாம், சரியாகச் சொன்னாராம். இது மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகம், சட்டத்திற்கு உட்பட்டு, நூல் பிசகாமல் நடந்து கொள்வதாகவும் ராசா தெரிவித்திருந்தார். 99ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை பத்தி 3.1.1ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதை ராசா வசதியாக குறிப்பிட மறந்தார்.

இந்தக் கடிதத்தை ராசா அனுப்பிய 02.11.2007 அன்றே, பிரதமர் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், �அன்பான ராசா, ஸ்பெக்ட்ரம் கொஞ்சூன்டு தான் இருக்கு. நெறய்யயய பேரு அப்பிளிகேசன் போட்ருக்காங்க.. நெறய்ய பேரு கேட்ருக்கதால, இன்னும் பல வருசத்துக்கு ஸ்பெக்ட்ரம் இருக்காதுன்றதால, அப்ளை பண்ண நெறய்ய பேருக்கு ஸ்பெக்ட்ரம் கெடைக்காம பூடும். அத்தோட இல்லாம, டெலிகாம் பாலிசின்னு ஒன்னு வச்சுருக்காங்க. அது படி பாத்தா, இருக்கற ஸ்பெக்ட்ரம்ம, எல்லாருக்கும் நயந்து குடுக்குனும்னு அதுல சொல்லிக்கீது. அதனால, எவ்ளோ ஸ்பெக்ட்ரம் கீதுன்னு, பாத்துப்புட்டு, அப்பாலிக்கா லைசென்ஸ் குடுங்க. ஸ்பெக்ட்ரமே இல்லாம வெறும் லைசென்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னாக்கா, அந்த கம்பேனிக்காரன் லைசென்ச வச்சுக்கிட்டு இன்னா பண்ணுவான் ?� என்று எழுதுகிறார்.

அவ்வளவுதான், ராசாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா இது, நம்பளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. நம்பகிட்டயே இவரு கேள்வி கேக்கறாரே என்று அதிசயித்த ராசா, இரவோடு இரவாக, அவருக்கு பதில் அனுப்ப முடிவு செய்கிறார். அது மட்டும் அல்லாமல், ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாவற்றையும் கரீட்டாக செய்திருக்கிறேன் என்று அனுப்பிய கடிதம், பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே, பிரதமரின் கடிதம் வந்து சேர்ந்ததால் ராசாவின் அதிர்ச்சி மேலும் கூடியது. அன்று இரவே பதில் கடிதம் தயாரிக்கலாம் என்ற முடிவெடுத்து, தனது செயலாளர் சந்தோலியாவை வரவழைக்கிறார். அவர் வந்தால் போதுமா� கடிதத்தை டைப் அடிக்க நம்பகமான ஆள் வேண்டுமில்லையா�.. அதனால், 2004ம் ஆண்டு முதல், ராசாவின் காரியதரிசியாக இருந்த, ஆச்சார்யா ஆசீர்வாதம் என்பவரை, இரவு 8 மணிக்கு உடனே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறுகிறார். அனைவரும், ராசாவின் வீட்டில் கூடுகிறார்கள்.

ஆசீர்வாதம் வீட்டுக்கு வந்ததும், ராசாவே அவரோடு அமர்ந்து கடிதத்தை டிக்டேட் செய்கிறார். �கண்மணி, அன்போட�.� என்று அல்ல. �டியர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்� என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், ராசா, �எல்லாம் கரீட்டா நடந்துகினு கீது. ஒரு தப்பும் பண்ணல. இந்த மேரி வெளிப்படையா யாருமே நட்ந்து கிட்டது இல்ல. இப்போ மட்டும் இல்ல.. ப்யூச்சர்ல கூட, இதே மேரி நூல் புட்சா மாதிரி எல்லாம் நடக்கும். நீ ஒன்யும் கவலைப் படாதே வாத்யாரே� என்று பதில் எழுதுகிறார். ராசா, சந்தோலியா, தொலைத் தொடர்புக் கமிஷன் உறுப்பினர் ஸ்ரீதர், ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை தயார் செய்கிறார்கள். இரவு 11 மணிக்கு வேலை முடிகிறது. இரவோடு இரவாக, சிறப்புத் தூதுவர் மூலம், அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

என்ன ஆயிற்றோ தெரியவில்லை. 26.12.2007 அன்று சந்தோலியா, அந்தக் கடிதத்தை தயாரித்த ஆசீர்வாதத்தை அழைத்து, நீங்கள் அடித்த கடிதம் எங்கே என்று கேட்கிறார். அவர் இந்தக் கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது என்று கூறியதும், அதை பென் டிரைவில் காப்பி செய்து, மீண்டும் ப்ரின்ட் எடுத்து, பிரதமருக்கு அனுப்பப் படுகிறது
இந்த ஆசீர்வாதம், சிபிஐ ன் முக்கிய சாட்சியாக சேர்க்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரின் முக்கியத்துவம் கருதி, இவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப் பட்டு, இவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த லைசென்ஸ் வழங்குவது குறித்த கோப்புகள், பல்வேறு அதிகாரிகளிடம் சென்று வந்த போது, நேர்மையான அதிகாரிகள் பலர், ராசாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளனர். அப்போது, தொலைத் தொடர்பு கமிஷனின் நிதிக்கான உறுப்பினராக இருந்த மஞ்சு மாதவன் என்பவர், இது வரை லைசென்ஸ் கொடுத்து வந்தது 2001ல் உள்ள விலை. இப்போது ஸ்பெக்ட்ரத்துக்கான தேவை (Demand) மிக அதிகமாக உள்ளது. அதனால், ஏலம் விட்டால், அதிகத் தொகையை ஏலத்தில் கேட்பவர்கள், ஸ்பெக்ட்ரம் பெற இயலும், மேலும், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று, சம்பந்தப் பட்ட கோப்பிலேயே எழுதுகிறார். ஆனால், தகத்தகாய கதிரவன், அவ்வாறு எழுதப்பட்டதன் மீது, எந்த முடிவும் எடுக்காமல், டபாய்து விடுகிறார்.

அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் மாத்தூர், இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கும் போதெல்லாம், ஏலமெல்லாம் விட முடியாது என்பதை தீர்மானமாக தெரிவித்தார். மேலும், 2001ல் உள்ள விலைக்குத் தான் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார் என்கிறார் மாத்தூர். ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?
26 டிசம்பர் அன்று எழுதிய கடிதத்தில் ராசா, நான் உங்களோடு தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதித்தது போல என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்க வேண்டும். மன்மோகனோடு விவாதித்த பிறகு ராசா முடிவெடுத்தார் என்றால், சிபிஐ மன்மோகனை ஒரு சாட்சியாகவாவது விசாரித்திருக்க வேண்டுமா வேண்டாமா ? ஆனால் மன்மோகன் கீழ் பணியாற்றும் சிபிஐக்கு, மன்மோகனை விசாரிக்க எப்படி தைரியம் வரும் ?

இவ்வாறு ராசா பிரதமருக்கு கடிதம் அனுப்பியவுடன் பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும் ? சட்ட அமைச்சகம் அமைச்சரவை குழுவுக்கு அனுப்பவும் என்று தெரிவித்த கருத்தை மீறி, நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது, அதனால் நான் அந்தக் கோப்பை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிரதமரும் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தில், உங்களின் 26.12.2007 நாளிட்ட கடிதத்தை வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார். அப்போது ராசா மன்மோகனோடு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விவாதித்ததை மறுக்கவில்லை என்றுதானே பொருள்.... ஏன் மவுனமானார் இந்த ஊமைச் சாமியார் ?

ஏன் இவ்வாறு எழுதுகிறார் என்று கேட்கிறீர்களா ? ராசா திமுகவின் அமைச்சராயிற்றே�.. மன்மோகன் பிரதமாராக இருக்க வேண்டாமா ? மன்மோகன் பிரதமர் பதவியில் நீடித்ததற்காகத் தான் இந்தியா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இழந்தது. அன்று மன்மோகன், அந்தக் கோப்பை ராசாவிடமிருந்து பறித்து, அமைச்சரவை குழுவுக்கோ, அல்லது தன்னிடமோ மாற்றியிருந்தால், இந்த நஷ்டம், ஊழல் விசாரணை இதெல்லாம் தேவையா ? கடந்த வாரம் பத்திரிக்கை ஆசிரியர்களோடு நடந்த சந்திப்பின் போது, மன்மோகனிடம், 2ஜி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப் பட்டன.

நீங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை இன்னும் கடினமாக கையாண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, �எது சரியான வழி என்று எனக்குத் தெரியவில்லை. சில விஷயங்களை (ஸ்பெக்ட்ரம்) தவிர்த்திருக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. 2ஜி விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நான் ராசாவிடம் ஏலம் விடலாம் என்று எழுதினேன். அவர் ட்ராய் ஏலம் விட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ட்ராய் அரசுக்கு ஆலோசனை வழங்கத் தானே இருக்கிறது என்பதால் அத்தோடு அதை விட்டு விட்டேன். நேர்மையாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படும் என்று ராசா கூறியதை நம்பினேன். என்னுடன் பணியாற்றும் ஒரு நபர் இது போல சொல்லும் போது அதை நம்பாமல் நான் எப்படி இருப்பது ? அதற்குப் பிறகு சிவிசியிடம் புகார் அளிக்கப் பட்டது. சிபிஐ விசாரணையை தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் சோதனையிடப் பட்டது� என்றார்.

இந்த விவகாரம் செய்தித் தாள்களில் தினந்தோறும் வெளி வந்ததே என்ற கேள்விக்கு, �செய்தித் தாள்களை வைத்து முடிவெடுப்பதாக இருந்தால், நான் அத்தனை விவகாரங்களையும் சிபிஐயிடம் தினந்தோறும் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும்� என்று இறுமாப்பாக பதிலளித்துள்ளார். ராசாவை நான் நம்பினேன் என்று மன்மோகன் சிங் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. இன்டெலிஜென்ஸ் ப்யூரோ என்னும், மத்திய உளவுத்துறை ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்து தினந்தோறும் பிரதமருக்கு அறிக்கை அளிக்கும். ராசாவை யார் சந்திக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார், யாரோடு பேசுகிறார், என்பதையெல்லாம் தினமும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்தன் விளைவே, ராசா 2.11.2007 அன்று தனக்கு கடிதம் எழுதிய விபரம் அறிந்த மன்மோகன், அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே முந்திக் கொண்டு ராசாவுக்கு கடிதம் எழுதியது. அதனால் ராசாவை நான் நம்பினேன் என்பதை ஏற்பதற்கில்லை.

பத்திரிக்கைகளை நான் நம்ப முடியாது என்ற மன்மோகனின் பேச்சு திமிர்த்தனமானது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், வெளி வந்ததும், இன்று ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருப்பதற்கும், 80 சதவிகித காரணம் பத்திரிக்கைகளே�. பயனீர் நாளேடு, டிசம்பர் 2008ல் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முதல் செய்தியை வெளியிடாமல் போயிருந்தால் இன்று ராசாவும் கனிமொழியும் சிறையில் இருந்திருப்பார்களா ? பத்திரிக்கைகள் என்ன பொறுப்பில்லாமல் எழுதுகிறார்களா என்ன ? அவ்வாறு எழுதினால் மன்மோகன் சிங் அரசு விட்டு விடுமா என்ன ?

மன்மோகன் சிங்கின் அடுத்த அயோக்கியத்தனம் இன்னும் மோசமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1ல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர். இவர் 9 மார்ச் 2006ல், இவர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் �காமன் வெல்த் விளையாட்டுக் போட்டிகளுக்காக 150 கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று செய்யப் பட்ட மதிப்பீடு 500 கோடியாக உயர்ந்துள்ளது. 250 கோடி என்று நிர்ணயிக்கப் பட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்காக செலவுகள், 900 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பீடு நம்ப முடியாத வண்ணம் உள்ளது. உடனடியாக என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்குவீர்களேயானால், விரிவாக எடுத்துரைக்கிறேன்� என்று எழுதுகிறார்.

மன்மோகன் என்ற ஊமைச் சாமியார் எதுவும் பேசவில்லை. 25 அக்டோபர் 2007ல் அடுத்த கடிதம் எழுதுகிறார் அய்யர். இந்தக் கடிதத்தில், �காமன் வெல்த் விளையாட்டுக்களில் பங்கேற்பது போன்ற முக்கால் அளவுக்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ராணுவ விளையாட்டுக்கள் 200 கோடி செலவில் நடந்து முடிந்தன. ஆனால், காமன் வெல்த் போட்டியை நடத்த 20 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவாகும் என்று நிர்ணயித்திருப்பது, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. சுரேஷ் கல்மாடியின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது� என்று எழுதினார். இதற்கும் இந்த ஊமைச் சாமியார் வாயைத் திறக்கவில்லை.

சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த ஊமைச் சாமியாரிடம், மணி சங்கரின் கடிதம் குறித்து கேட்கப் பட்டது. அதற்கு மன்மோகன் சிங் �மணி சங்கர் அய்யரின் கடிதம் தத்துவார்த்த ரீதியானது. சுரேஷ் கல்மாடி காமன் வெல்த் விளையாட்டுக்களை நடத்தக் கூடாது என்பது தொடர்பானது. மணி சங்கர் அய்யர் பல கடிதங்களை எழுதியிருக்கிறார். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் 2003ல் முந்தைய அரசாங்கத்தால் கையொப்பம் இடப்பட்டது.�

எப்பேர்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள். முந்தைய அரசாங்கம் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டால் என்ன ? அவர்களா 20 ஆயிரம் கோடியை கொள்ளையடித்தார்கள் ? சுரேஷ் கல்மாடி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஒன்றுமே தெரியாதது போல பசப்புவது இந்த ஊமையின் உச்சபட்ச குசும்பு. இந்த குசும்புகளைத் தவிர்த்து, மன்மோகனின் மற்றொரு சிறப்பு, அமெரிக்காவின் அடிமையாக இருப்பது. அமேரிக்காவின் காலை நக்குவது என்றால், மன்மோகனுக்கு அவ்வளவு பிடிக்கும். அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த மன்மோகன், இடது சாரிகள் இதன் காரணமாக ஆதரவை வாபஸ் பெற்ற போது, பல ஆயிரம் கோடிகளை எம்.பி.க்களுக்கு லஞ்சமாக கொடுத்து, அரசைக் காப்பாற்றி, அணு ஆயுத ஒப்பந்தத்தை செயல்படுத்தியவர் தானே இந்த மன்மோகன் ? இவர் என்ன மிஸ்டர் க்ளீன்�. ?

2004ல் நவம்பர் மாதத்தில், ப்ரான்ஸ் நாட்டில், பள்ளிக்குச் செல்லும், சீக்கிய மாணவர்கள் டர்பன் அணியக் கூடாது என்று உத்தரவு போட்ட போது, ப்ரான்ஸ் பிரதமரிடம் பேசி, உடனடியாக அந்தப் பிரச்சினையில் தலையிட்டவர் மன்மோகன் சிங். சீக்கியனின் மயிருக்காக துடித்த மன்மோகன், தமிழனின் உயிர் போன போது என்ன செய்தார் ? தமிழினத்தை அழித்தவனோடு கூட்டு சேர்ந்து அவனுக்கு ஆயுதம் வழங்கினார். இந்திய மீனவனை கொன்று குவிப்பவனோடு, கொஞ்சிக் குலவினார்.

கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான்.

கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான்.

thanz for ahirvu.com
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=102

Monday, August 8, 2011

சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு


"கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [International Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது.
கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief Minister Oommen Chandy] மற்றும் திரைப்படத்துறை அமைச்சரான கே.பி.கணேஸ் ஆகியோரின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சில மணித்தியாலங்களிற்கு முன்னர், புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இப்பட உருவாக்குநரான சோமீதரன் மிரட்டப்பட்டார்.

"கேராளவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட நான் முயற்சிப்பதாக ஊடகமொன்றில் வந்த செய்தியை அடுத்து நான் புலனாய்வு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டேன். நேற்று நான் தங்கியிருந்த இடத்திற்கு புலனாய்வு அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால் அந்த வேளையில் நான் அங்கிருக்கவில்லை. கைராலி திரையரங்கில் இருந்தேன். பின்னர் எனது திரைப்படத்தின் DVD யைத் தரும்படி அவர்கள் என்னைக் கேட்டார்கள்" என சிறிலங்காவின் வடபகுதியைச் சேர்ந்த உறுதி மிக்க திரைப்படத் உருவாக்குநரான சோமீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று நடைபெற்று முடிந்த திரைப்பட விழாவில் சோமீதரன் பாராட்டப்பட்டுள்ளார். பல்வேறு கடினமான சூழல்களைக் கடந்து இடர்களின் மத்தியில் தனது திரைப்படத்தை திறம்பட இவர் உருவாக்கியுள்ளார்.

இத்திரைப்பட விழாவில் இவரது பெயர் அறிவிக்கப்பட்ட போது தனது ஆசனத்தை விட்டு எழுந்து சிறிது தூரம் நடந்து சென்று பின் மீண்டும் நின்று தனது பெயர் தான் அறிவிக்கப்படுகின்றதா என உறுதிப்படுத்தியபோது சோமீதரன் மிகப் பெரும் ஆச்சரியம் அடைந்ததாகத் தெரிவித்தார்.

"அந்தக் கணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியாதுள்ளது. இங்கிருக்கும் மக்கள் எனது திரைப்படத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதே எனக்குக் கிடைத்த பாராட்டுதலுக்கான காரணமாகும். இந்தப் பாராட்டு என்பது வேறு எங்கும் நடந்திட முடியாது. தமிழ் நாட்டிலும் கூட" என சோமீதரன் தெரிவித்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக இழந்த தனது நண்பர்களையும் இவர் நினைவு கூர்ந்தார்.

"இது போருக்குப் பிந்திய காட்சிகள். இவற்றில் பெரும்பாலனவை அதிர்ச்சி தரக் கூடியவை. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமது வீடுகள், தொழில்கள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றை இழந்தனர். விவசாயம், மீன்பிடி போன்றவற்றை மேற்கொள்வதில் பெரும் தடைகள் காணப்படுகின்றன. சிங்களவர்கள் உட்பட சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுகின்ற அல்லது செயற்படுபவர்கள் அனைவரும் அழிக்கப்படுகிறார்கள்" என சோமீதரன் தெரிவித்தார்.

"சில மக்கள் ஐந்து தடவைகளுக்கும் மேல் இடம்பெயர்ந்து பல மாதங்கள் காடுகளில் ஒளிந்து வாழவேண்டியவர்களாகவும் இருந்தார்கள். எனது திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டதல்ல. மாறாக தமிழ் மக்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான காட்சிகள் அனைத்தும் யுத்தப் பாதிப்பிற்குள்ளான இடங்களில் வாழும் எனது நண்பர்களால் எடுக்கப்பட்டவையாகும். இவர்கள் இவற்றை எடுத்த பின்னர் அதற்குள்ளிருக்கும் நினைவக அட்டையை மட்டும் எடுத்துவிட்டு ஒளிப்படக் கருவிகளைத் தூர வீசிவிடுவார்கள். பின்னர் இந்த நினைவக அட்டைகள் பலரது கைகளுக்கு மாறி இறுதியில் என்னை வந்து சேரும்" என சோமீதரன் தெரிவித்தார்.

முதல் மூன்று மாதங்களும் இத்திரைப்படக் காட்சிகளை தன்னால் தொகுக்க முடியாதிருந்ததாக சோமீ குறிப்பிட்டார். "இக்காட்சிகளைப் பார்த்த பின்னர் எங்களால் அவற்றைத் தொகுக்க முடியவில்லை. எங்களால் உண்ணவோ அல்லது உறங்கவோ முடியவில்லை. முதலில் எம்மிடம் ஆறு மணித்தியாலக் காட்சிகள் இருந்தன. அவை பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானவை. இதில் 30 நிமிடக் காட்சிகளை மட்டுமே உபயோகப்படுத்தியுள்ளேன். ஏனைய ஐந்தரை மணி நேரக் காட்சிகள் அடங்கிய தொகுப்புக்கள் என்னிடம் உள்ளன" என சோமீ தெரிவித்தார்.

சோமீதரன் தனது திரைப்படத்திற்காக இராணுவக் காட்சிகள், ஐ.நாவின் செய்மதி வழி ஒளிப்படங்கள், வலையமைப்புகள் மூலம் நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட காட்சிகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளார்.

29 வயதான திரைப்படத் உருவாக்குநரான சோமீதரன், தனது ஆவணப்படத்திற்கு முல்லைத்தீவு பகுதியில் ஆடப்படும் வீரப்பெண்ணாக சித்தரிக்கப்படும் 'கண்ணகி கூத்தை' குறியீடாகவும் அடிப்படையாகவும் பயன்படுத்தி உள்ளார்.

அழுகுரல்கள், இடப்பெயர்வுகள், சாவுகள், இறந்த உடலங்கள், உதவியற்ற சிறார்களின் முகங்கள் போன்றவற்றை உள்ளடக்கி சோமீதரனால் உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு சகா ‘Mullaitivu Saga’ என்ற இத்திரைப்படமானது இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் உணர்வற்ற மனிதர்களைக் கூட உள்ளம் நெகிழ வைத்துவிடும்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக சோமீதரனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது ஆவணப்படமாக இது அமைந்துள்ளது. 47 நிமிட நேரத்திரைப்படமான 'முல்லைத்தீவு சகா' சில ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவை உள்ளடங்கலாகப் பல நாடுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற இவரது நண்பர்கள் தாம் வசிக்கும் நாடுகளுக்கு சோமீதரனை வரும்படி அழைக்கின்றார்கள்.

"நான் எனது தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லவே விரும்புகின்றேன். அது முடியாவிட்டால் இந்தியாவிலாவது எனது வாழ்வைத் தொடரவேண்டும் என நான் விரும்புகின்றேன். கேரளாவின் நில அமைப்பு மற்றும் ஓட்டு வீடுகள் போன்றன எனது தாய்நாட்டின் உணர்வையே எனக்கு ஏற்படுத்துகின்றது. உங்களுக்கு தெரியுமா, நாங்களும் அப்பம், பிட்டு போன்ற உணவுகளையே உண்கின்றோம்" என சோமீதரன் தெரிவித்துக் கொண்டார்.

செய்தி வழிமூலம்: Express News Service, The New Indian Express

ரயில் தடத்தில் விழுந்து உயிர் பிழைத்தவர்கள் (வீடியோ இணைப்பு)


குடிபோதையில் ரயில் வரும் வருவது தெரியாமல் தவறி விழுந்தவர்களை மக்கள் காப்பாற்றிய நேரடி காட்சியை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.



சீருடையில் பிரபாகரன் உணவகம்: படம் இணைப்பு !


இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் பெயரில் சாப்பாட்டுக் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது. தம்பி பிரபாகரன் உணவகம் என்பது இதன் பெயர். புலிகள் இயக்க சீருடையில் பிரபாகரன் கடையின் பெயர்ப் பலகையில் தோன்றுகின்றார். உறுமும் புலிச் சின்னமும் அருகில் காட்சி கொடுக்கின்றது.

தமிழ் நாட்டில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவு நிலையில் இது ஒரு அடுத்தகட்டமாகப் பார்க்கப்படுகிறது. தம்பி பிரபாகரன் என்று தேசியதலைவரை அனைவரும் அன்போடு அழைப்பது வழக்கம் !

தமிழ்ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு: வைகோ தலைமையில் டெல்லியில் 12 ம் திகதி அறப்போராட்டம்


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, உலகெங்கும் மனித உரிமை ஆர்வலர்களின் மனங்களில் அதிர்வு அலைகளை ஈழத்தமிழர் படுகொலை ஏற்படுத்தி விட்டது. தாய்த் தமிழகத்தில் இருந்து பதினெட்டுக்கல் தொலைவில், லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசால் மிகக்கொடூரமாக ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். உள்ளம் வெடித்துச் சிதறிய முத்துக்குமார் உள்ளிட்ட பதினேழு வீரத் தியாகிகள், தமிழகத்தில் தீக்குளித்து மடிந்தார்கள்.

கோடிக்கணக்கான தமிழர்கள் உள்ளம் விம்மி அழுதபோதும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கையின் முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களும், ஆயிரமாயிரம் கோடிப்பணமும் அள்ளித் தந்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முழுமையாக இயக்கி, மன்னிக்க முடியாத துரோகம் செய்தது. ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமை கவுன்சிலிலும் கொலைக்கார சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்து, இனக் கொலைக்குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததை இந்திய அரசு வெளிச்சம் போட்டுக் காட்டவும் தயங்கவில்லை.

ஈழத்தமிழர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் கொடூரமாக வதைத்து அழிக்கப்பட்ட கோரக்காட்சிகளை லண்டனின் சானல் 4 தொலைக்காட்சி, 2009 ம் ஆண்டு, ஆகஸ்டு மாதத்தில் இருந்தே தொடர்ந்து காணொளிகளாக வெளியிட்டு வருவதால், உலகில் பல்வேறு நாடுகளில் சிங்கள அரசுக்கு எதிராக கண்டனக் குரல் ஓங்கி வருகிறது.

இதுவரை சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இந்திய அரசு, தன் துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இப்போதாவது ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் கவுன்சிலிலும், சிங்கள அரசுக்கு எதிர் நிலையை எடுப்பதற்கு முன் வரவேண்டும் என்பதையும், இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ள சிங்கள ராணுவத்தையும், பொலிசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும் என்பதால், அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தவும், இதற்கு இந்தியாவில் கட்சி, மாநில எல்லைகளைத் கடந்த ஆதரவைத் திரட்டவும், ஆகஸ்ட் 12 ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தரில், என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை ம.தி.மு.க. நடத்த இருக்கின்றது.

இதில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான கழகத்தோழர்கள், தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள். இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை கழக நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தியும், டெல்லி மாநில ம.தி.மு.க. அமைப்பாளர் பழனிக்குமாரும் செய்து வருகிறார்கள்.

ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.