Tuesday, August 30, 2011

கிறீஸ் பூதம் இருந்தால் எனது தொலைபேசிக்கு அழைக்கவும்! மேர்வின்


நாட்டில் மர்மமனிதர்கள் அல்லது கிறீஸ் பூதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் தனது கைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுக்குமாறு பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சராக உள்ள தனக்கு இதுதொடர்பில் பாரிய கடப்பாடு இருப்பதாக மேர்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் தொடர்பாடல் என்பது கிறீஸ் பூதமும் உள்ளடங்கும். கிறீஸ் பூதம் தொடர்பில் சந்தேகம் நிலவினால் 0722287210 என்ற தனது கைத்தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இரவு 12 மணிக்கும் எடுக்கவும். கிறீஸ் பூதம் கிடைத்தால் சுற்றிவளைத்து பிடித்துக் கொள்ளுங்கள். அந்த இடத்திற்கு நான் வருவேன். முச்சந்திக்கு கொண்டுவந்து கட்டிவைப்பேன். அந்நாளில் எனக்கு சிறைவாசல் திறக்கும். கிறீஸ் பூதத்திற்கு சுடுகாட்டின் கதவு திறக்கும்” என்று மேர்வின் சில்வா முழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment