Tuesday, August 30, 2011

நான் அழகாகவும் அம்சமாகவும் இருப்பதற்கு "தண்ணி" தான் காரணம் - அனுஷ்கா


ரெண்டு படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அருந்ததீ படம் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். நான் அழகாக இருப்பதற்கு காரணம் தினமும் ‌யோகா செய்வதாலும், கூடவே நிறைய தண்ணீர் குடிப்பதுமே காரணம் என்று கூறுகிறார் நடிகை அனுஷ்கா.

இதுதவிர நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அழகிற்கான ரகசியத்தை கூறியிருக்கிறார். இதுகுறித்த அனுஷ்கா கூறியதாவது, நான் அழகாக இருப்பதாகவும், உங்கள் அழகின் ரகசியம் என்ன என்றும் நிறைய பேர் கேட்கின்றனர். அழகுக்கு என்று நான் பிரத்யேகமாக எதுவும் செய்வதில்லை.
முதலில் அழகை விட ஆரோக்கியம் தான் சிறந்தது என்று அனைவரும் உணர வேண்டும். ஆரோக்கியத்துக்காக தினமும் காலையில் யோகா செய்கிறேன். அத்துடன் நிறைய தண்ணீரும் குடிக்கிறேன். யோகா உடம்பை கட்டுகோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தண்ணீர் குடிப்பதால் தோல் அழகாகிறது.

இவைதான் எனது அழகு ரகசியங்கள். சினிமாவில் பிசியாக இருக்கும் நீங்கள், விளம்பர படத்தில் நடிப்பது தேவையா என்கின்றனர். வருடத்துக்கு 2 அல்லது மூன்று படங்களில் தான் நடிக்க முடியும். ஆனால் விளம்பர படங்கள் அடிக்கடி டெலிவிஷனில் வருவதால் தினமும் ரசிகர்களை நெருங்கலாம். விளம்பர படத்தில் நடிக்க நேரமும் குறைவு பணமும் கிடைக்கிறது. எனவேதான் விளம்பர படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

No comments:

Post a Comment