Wednesday, August 31, 2011

இந்தியர்கள் அல்லாத தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும்: சுப்ரமணிய சுவாமி


இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இரண்டாவதாகத் தான் தமிழர்கள். வைகோ தெலுங்கில் இருந்து வந்தவர்.

இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் கூறுகிறது.

தமிழர்களின் உணர்வுகள் இது என்றால் இந்தியர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

3 comments: