Monday, August 8, 2011

நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வருபவர்களை கண்டித்து சீடர்கள் 250 பேர் உண்ணாவிரதம்


நித்தியானந்தா - ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியானது சில பத்திரிகைகளில் ஆபாச படங்கள் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தா சீடர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். பொலிசிலும் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நித்தியானந்தா பற்றி அவதூறு பரப்பி வரும் தொலைக்காட்சி, பத்திரிகைகளை கண்டித்து இன்று இந்து தர்ம சக்தி இயக்கம் சார்பில் காயிதே மில்லத் மணிமண்டபம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நித்தியானந்தா பீட தமிழக தலைவர் நித்யா சதானந்தா தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் நித்தியானந்தா சீடர்கள் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆபாச குறுந்தகடுகளை வெளியிட்ட லெனினை கைது செய்ய கோரி உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது

No comments:

Post a Comment