Saturday, March 5, 2011

மிரட்டிய சுனைனா: கட் சொல்ல மறந்த டைரக்டர்




டைரக்டர் பேரரசு இயக்கும் 'திருத்தணி' படத்தில் சாக்லேட் ஹீரோவான பரத், தன் உடல் எடையை கூட்டி, முறுக்கேற்றி, கட்டுமஸ்தான நாயகனாக காட்சியளிக்கிறார்.


நாயகியாக சுனைனா பரத்துடன் இணைந்து நடித்துள்ளார். சுனைனாவும் இதில் சீரியசாக நடிப்பில் வெளுத்து கட்டியிருக்காராம்.



காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களுக்கு பின் இப்படத்தில் உணர்ச்சிப்பூர்வமான ரோலில் நடித்து சூட்டிங் ஸ்பாட்டை நெகிழ வைத்துள்ளார்.

காமெடி கலாட்டா வேறு. அருந்ததி கெட்டப்பில் சுனைனா வரும் காட்சிகளில் நடை, உடை, பாவனை, பேச்சு மூலம் மிரட்டியுள்ளார். டைரக்டர் பேரரசும் சுனைனா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் போது அசந்து போய், 'கட்' சொல்ல மறந்திட்டார் என்கிறது திருத்தணி படக்குழு.

No comments:

Post a Comment