Monday, January 30, 2012
பேரனால் கற்பழிக்கப்பட்ட பேத்தி! அதிர்ச்சியில் உறைந்தது யாழ்.மீசாலை!!
மீசாலைப் பகுதியில் பதின்ம வயதுடைய தனது பேர்த்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 65 வயதுடைய முதியவர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட பதின்ம வயது மாணவியை சம்பவ தினத்தன்று மதுபோதையில் வந்த தாத்தா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், மறுநாள் இச் சம்பவம் தொடர்பில் மாணவி தனது ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் அம் மாணவியின் சிறியதாயர் ஒருவரைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன், இதனை அறிந்த சந்தேக நபரான தாத்தா நஞ்சருந்திய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனவே இவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இந்த 65 வயதுத் தாத்தாவைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, முல்லைத்தீவில் தாயை இழந்த இந்த மாணவியின் தந்தை வேறு திருமணம் செய்ததால் இவர் 65 வயதுடைய பேரனுடன் தங்கிப் படித்து வருகிறார் என்றும் இந்த நிலையிலேயே பேரன் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆபாசப் படங்களைக் காட்டி வன்புணர்வு புரிந்தார் என்றும் கூறப்படுகின்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment