Monday, March 7, 2011
மீண்டும் ஹீரோவாக வடிவேலு
வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி.
இந்த படத்தில் நடிக்க முதலில் மறுத்தவர் சிம்பு தேவனின் தொடர் முயற்சிக்கு பிறகுதான் நடிக்கவே ஒப்புக் கொண்டார்.அப்படத்தின் மெகா மெகா வெற்றிக்கு பின் தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்துவிட்டார் அவர். அதன்பின் செவன்த் சேனல் நாராயணன் தயாரித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட வடிவேலு முழுக்க கதை விவாதத்தில் நுழைந்து கொண்டார்.
அப்படத்தின் இயக்குனர் தம்பி ராமய்யா சொன்ன சீன்களையெல்லாம் இது என்ன பங்காளி ஒரே மொக்கையா இருக்கு. இப்படி இருந்தா நல்லாயிருக்கும்ல என்று சொல்லியே சொல்லியே படத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார்.
அப்படத்தின் ரிசல்ட் என்ன என்பதை அப்புறம் புரிந்து கொண்டார்கள் எல்லாரும். ஆனால் பணம் போட்ட நாராயணன் அந்த கடனிலிருந்தே இன்னும் மீளவில்லை.
இப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது. இவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கவிருக்கும் உலகம் என்ற படத்தின் கதை விவாதத்தில் புகுந்துவிட்டாராம் வடிவேலு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment