Friday, February 18, 2011

ராகுல் காந்தி இலங்கைக்கெதிராக போர்ப்பிரகடனம்?


இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பாக எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது.

ராகுல் காந்தியின் இலங்கைக்கான விஜயத்தின் போது அவருடன் இன்னும் பத்து முக்கியஸ்தர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அறியப்படுகின்றது. அவர்கள் இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இலங்கை அரசின் உயர்மட்டத்தினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையே இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், அயல் நாடுகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்பதாக கண்டித்திருந்தார்.

தவிரவும் இந்தியாவின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை மீனவர்கள் எண்பத்தி ஐந்து போ் இன்னும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment