Sunday, February 13, 2011

வயது வித்தியாசம் பாராமல் மலர்ந்த கள்ளக்காதல் தந்தையின் கள்ளக்காதலி கொலை! மகன் உள்பட 3 பேர் கைது


தந்தையின் கள்ளக்காதலியை கொலை செய்ததாக மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இளம்பெண் கொலை பெங்களூர் வீவர்ஸ் காலனியை சேர்ந்தவர் நாகரத்னம்மா (வயது 40). இவரது கணவர் வெங்கடேஷ். ஆந்திராவை சேர்ந்தவர்.

கணவன், மனைவி இருவரும் வீவர்ஸ் காலனியில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி நைஸ் ரோட்டில் நாகரத்னம்மா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஹலிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் நாகரத்னம்மா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. கள்ளக்காதல் நாகரத்மாவுக்கு 17 வயதாக இருந்தபோதே 55 வயதுகாரர் அந்தோனப்பா என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. அந்தோனப்பாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

அவருக்கு வினய் (22), ராமப்பா என்பவர்கள் உள்பட 3 பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும், நாகரத்னம்மாவும், அந்தோனப்பாவும் கள்ளத்தொடர்பை தொடர்ந்து உள்ளனர்.

இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவே நாகரத்னம்மாவை அவரது கணவர் வெங்கடேஷ், அந்தோனப்பாவின் மகன்கள் வினய், ராமப்பா ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் அந்தோனப்பா உடனான தனது காதலை நாகரத்னம்மா கைவிடவில்லை.

கழுத்தை நெரித்து கொலை இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி நாகரத்னம்மாவை அந்தோனப்பாவின் மகன் வினய் மற்றும் அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகியோர் வேனில் அழைத்து சென்று உள்ளனர். அந்தோனப்பா உடனான தொடர்பை கைவிட்டு விடும்படி வற்புறுத்தி உள்ளனர்.

ஆனாலும், அதற்கு நாகரத்னம்மா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வினய், நாகரத்னம்மாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிகிறது.

பின்னர் நாகரத்னம்மாவின் உடலை நைஸ் ரோட்டில் வீசி விட்டு, வினய், அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகிய 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

3 பேர் கைது இதையடுத்து, ஹுலிமாவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நாகரத்னம்மாவை கொலை செய்ததாக வினய், அவரது நண்பர்கள் பாஷா, நந்தா ஆகிய 3 பேரையும் கைது செய்து உள்ளனர்.

அவர்கள் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment