Friday, January 22, 2016

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் ஊடாக இந்தியா போய்வர வீசா தேவை இல்லை


89UK1

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் ஊடாக இந்தியா போய்வர வீசா தேவை இல்லை என்று இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் என்ற போர்வையில் பல இலட்சம் படகுகளில் அத்துமீறி நுழைந்து கடத்தல் வியாபாரம் செய்கின்றனர். 

இந்தியாவில் இருந்து உடுப்புகள், பாகிஸ்தானில் இருந்து போதைவஸ்து, கம்போடியா, மியன்மார், மலேசியா ஊடாக வாகன உதிரிப்பாகங்கள் வரை வடமராட்சி கிழக்கு கரைக்கு கடல் ஊடாக கடத்தப்பட்டு பின்னர் மணல் லொறிகளில் மணல் கடத்துவதாக கடத்தபட்டு இலங்கையின் அனைத்து பகுதிக்கும் பயணிகள் பேரூந்துகளில் கடத்தப்படுகிறது.

இத்தகைய செயலை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மனு சமர்ப்பித்துள்ளது.

எல்லை தாண்டி சட்டத்திற்குப் புறம்பாக தொழில் செய்யும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் தனது மனுவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.தாம் 1979ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான சட்டத்தின் படி இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் இதுவரையில் இந்திய மீனவர்கள் தண்டிக்கப்பட்டமையினால் அவர்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை என்பதுடன் அவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்தவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் கூறியதை போன்று 1979ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்திய மீனவர்களுக்கு பதிப்புகள் அதிகமாகும் நிலையில் அவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment