Wednesday, December 26, 2012
ஒடும் காரில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்: டெல்லியில் மேலும் ஒரு சம்பவம்
டெல்லியில் ஓடும் காரில் தலித் சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை அவரது வீட்டில் இருந்து 4 பேர் கடந்த 15ம் திகதி டெல்லிக்கு கடத்தி வந்து காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அவரை மீண்டும் பைசாபாத் கொண்டு சென்று பேருந்து நிறுத்தத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஜம்முவின் புறநகரான அம்குரோடாவில் கடந்த சனிக்கிழமை இரவு 18 வயது பெண்ணை ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் இருவரும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர்.
குற்றவாளிகள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இதுபோன்று நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் பாலியல் பலாத்காரப் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொலிஸ் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
ஏற்கனவே ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment