Wednesday, January 4, 2012

பேய் வீடு இருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் செக்ஸ் லீலை!!

சென்னை அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் பேய் வீடு இருட்டறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அமைந்தகரையில் ஸ்கைவாக்’ வணிக வளாகம் உள்ளது. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இங்குள்ள 3 வது மாடியில் நடத்தப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகளை கவரும் பேய் வீடு நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இருட்டு அறையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்கு அனுமதி கட்டணமாக ரூ.50 வசூலிக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு 2 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களது கணவன்மார்கள் வெளியில் நின்றிருந்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் இருவரிடமும், 2 வாலிபர்கள் செக்ஸ்’ குறும்பில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண்கள் இருவரும் சத்தம் போட்டபடி வெளியில் ஓடிவந்தனர். உடனே அந்த வாலிபர்கள் மீது தாக்குதல் நடந்துவிட்டது. பின்னர் இதுபற்றி அமைந்தகரை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகார் கூறப்பட்ட வாலிபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர் பெயர் சுரேந்திரன் (வயது 25). இன்னொருவர் ஹாரீஸ் (30). சுரேந்திரன் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவரும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்கள். இவர்களை மன்னித்துவிடும்படி, புகார் கொடுத்த பெண்மணிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் போலீசார், கோர்ட்டில் வேண்டுமானால் சமாதானமாக போங்கள், நாங்கள் எதுவும் செய்ய முடியாது’என்று கூறிவிட்டனர்.

No comments:

Post a Comment