Wednesday, December 7, 2011

மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையான மங்களநேசன்! தூக்கி எறிந்தது ஈ.பி.டி.பி!!


யாழ் மாநகர மாநகர சபை மற்றும் ஈபிடிபி கட்சியின் உறுப்பினரான மனுவல் மங்களநேசன் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான முறையிலும் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டமையினால் அவரை ஈபிடிபி கட்சி பணிகளில் இருந்து தற்காலிகமாக நிறுத்துவதாக அதன் உயர்மட்டம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் ஈபிடிபி தலைமை அலுவலகதத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரனால் (கமல்) ஊடகங்களுக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவல் மங்களநேசன் என்பவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதில் அவர் பெண்கள் விடயத்தில் பலகில்லடி எனவும் யாழ் மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகசத்தரிடம் தவறாக நடக்க முற்பட்டதாலும் அதேவேளை மதுவுக்கு அடிமையான ஒருவர் என்பதினாலும் இவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

மங்களநேசனின் தவறான நடவடிக்கைக்காக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஈபிடிபி யாழ் அமைப்பாளர் கமல் தெரிவித்தார்.

இதேவேளை தான் அமைச்சர் டக்ளஸ், யாழ்.மாநகர மேயரின் ஊழல்களை வெளியிடுவேன் என அறிவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஈபிடிபி இல்லாவிட்டால் ஜக்கிய மக்கள் சுகந்திரக் கட்சியில் நான் இணைவேன் என மங்களநேசன் தெரிவித்தார்.

அத்தோடு டக்ளஸ் மற்றும் மேயரின் பல கோடி ஊழல்களை எதிர்வரும் காலங்களில் ஆதாரங்களுடன் வெளியிடவுள்ளதாகவும் மங்கள நேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment