Saturday, December 10, 2011
யாழில் 15 வயதுச் சிறுமி 1 மாதகாலம் பாலியல் வல்லுறவு ! 21 வயது இளைஞன் கைது!!
திருமணம் செய்வதாக 15 வயதுச் சிறுமியை ஏமாற்றி ஒரு மாதகாலம் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு தனக்கு இந்தப் பெண் வேண்டாம் என அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்த 21 வயது இளைஞனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்கு மூலத்தை பதிவுசெய்யுமாறு யாழ் நீதிவான் ஆ.ஆனந்தராஜா இன்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தனது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை குறித்த நகருக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனை அடுத்து பொலிஸாரின் தேடுதலில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு யாழ் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
குறித்த இளைஞனை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறும் சிறுமியை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி பாதுகாப்பாக சிறுவர் பராமரிப்பு நிலையதத்pல் ஒப்படைக்குமாறு யாழ் நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment