Thursday, October 6, 2011

35 நபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 13 வயதுச் சிறுமி!


பல தடவைகள் 35 நபர்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட 13 வயது சிறுமியொருவர் தொடர்பான தகவல் அவிசாவலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறு பாலியல் ரீதியில் இச் சிறுமியை துன்புறுத்தியதாக கூறப்படும் 8 சந்தேக நபர்கள் இதுவரையிலும் அவிசாவலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமிக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

அவிசாவலையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் ஏழைக் குடும்பத்தில் வசிக்கும் இச் சிறுமி சிறுவயதிலிருந்தே பல நபர்களால் பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக அடிமைப்படுத்தப்பட்ட இச் சிறுமி அவரது பாட்டியினால் பணத்திற்காக காமவெறியர்களுக்கு பல தடவை விற்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அச் சிறுமி பாலியல் வன்முறைக்கு பலியாகும் போது நடந்த கொலைச் சம்பவமொன்று தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளன.

No comments:

Post a Comment