Saturday, March 12, 2011

பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபட்ட மருத்துவ தாதி இடைநிறுத்தம்!


பணத்துக்காக பாலியல் நடவடிக்கைகளுக்குத் தயார் என்று தன்னை விளம்பரப்படுத்திய மருத்துவ தாதி ஆறு மாதங்களுக்கு சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்.

35 வயதான எமா மார்ஸ்டன் என்ற தாதியே இவ்வாறு இடை நிறுத்தப் பட்டவராவார்.

திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தாயான இவர் லூஸிலவ் என்ற பெயரில் தன்னை விளம்பரப் படுத்தியுள்ளார்.

சக பாலியல் தொழிலாளி ஒருவர்தான் இவரைக் காட்டிக் கொடுத்துள்ளார். இவர் கார்டிப்பில் உள்ள விச்சேர்ச் ஆஸ்பத்திரியின் தாதியாவார். தான் சுகவீனமுற்றுள்ளதால் கடமைக்குச்
சமுகமளிக்க முடியாமல் இருப்பதாகக்
கூறிவிட்டுதான் இன்டர்நெட் வழியாக இவர் பாலியல் சேட்டைகள் மூலம் மணித்தியாலத்துக்கு 120 பவுண் உழைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தான் ஒரு மருத்துவத் தாதியாக இருந்துகொண்டே இந்தப் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக சக பாலியல் தொழிலாளிகளிடம் பெருமையாகக் கூறியுமுள்ளார்.

ஆனால் இவருடைய வருகையால் வருமானம் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் இவரைக் காட்டிக் கொடுத்துவிட்டார்.

தாதிமார் இவ்வாறு நடந்து கொள்வது அந்தத் தொழிலுக்கே இழுக்கானது என்று இவர் பற்றி விசாரணை நடத்தும் அதிகாரியொருவர் கூறினார்.

ஆனால் தனது செயலுக்காக வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மன்னிப்புக் கோரவோ இவர் மறுத்துவிட்டார்

No comments:

Post a Comment