Thursday, February 24, 2011

இந்தியா எங்களை எளிதாக எடைபோட முடியாது : இங்கிலாந்து அணித் தலைவர்


உலக கிண்ண போட்டிகளில் வரும் ஞாயிறன்று இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நெதர்லாந்து அணிக்கு எதிராக தங்கள் அணி விளையாடியதைக் கண்டு....இந்தியா அணி தங்களை எளிதாக எடைபோட்டு ஏமாறுவார்கள் என்று தான் நம்புவதாக இங்கிலாந்து அணித் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார்.

"நேற்றைய எங்களது ஆட்டத்திற்குப் பிறகு இந்தியா எங்களை லேசாக எடைபோடும் என்று நம்புகிறேன்.

ஆனால் சிறந்த அணிகளுக்கு எதிராக நாங்கள் எங்கள் ஆட்டத்திறனை உயர்த்துவோம். இந்தியாவுடன் பெங்களூரில் விளையாடுவது குறித்து நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம். அங்கு சூழ்நிலை அபாரமாக இருக்கும் என்று நம்புகிறோம், இந்தியாவை வீழ்த்துவோம்." என்றார் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்.

நெதர்லாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ரயான் டென் டஸ்காதிக்கு மிகப்பெரிய புகழாரம் சூட்டினார் ஸ்ட்ராஸ்.

"அவர் நேற்று விளையாடிய ஆட்டத்திற்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். எஸ்ஸ்கெஸ் அணிக்கு அவர் இதனைச் செய்தபோது நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் உயர்மட்ட கிரிக்கெட்டில் இவ்வாறு ஆடுவது கடினம், ஆனால் அதனை அவர் மிகத் திறம்படவே செய்தார்." என்றார் ஸ்ட்ராஸ்.

நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் பவர் பிளேயை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிய ஸ்ட்ராஸ், பேட்டிங்கில் தொய்வில்லாமல் இருந்தது ஒரு நல்ல விஷயம் என்றார்.

No comments:

Post a Comment