Saturday, February 12, 2011

கொலைக்கருவியில் கலைப் படைப்பு! அமெரிக்கர் சாதனை (பட இணைப்பு)




அமெரிக்காவைச் சேர்ந்த வோல்டன் கிரீல் என்பவர் துப்பாக்கி ரவைகளைக் கொண்டு ஓவியங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.

அலுமினியம் தகட்டில் வரையப்பட்ட ஓவியங்களை துப்பாக்கியால் சுட்டு அவற்றுக்கு புதுத் தோற்றத்தை வழங்குகின்றார் இவர். தனது இந்தப் புதிய கலைக்கு “deweaponizing”. என்று இவர் பெயரும் இட்டுள்ளார்.



இவரின் தந்தையால் இவருக்குப் பரிசாக வழங்கப்பட்ட 22 கலிபர் ரைபிளைத் தான் இவர் இதற்குப் பயன்படுத்துகின்றார்.

துப்பாக்கியை அதன் அழிவுப் பாதையிலிருந்து அப்புறப்படுத்தி அதை ஆக்கபூர்வமான படைப்புக்களை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்கிறார் இவர்.

No comments:

Post a Comment