குருநாகல் பகுதியில் எண்பத்தியேழு வயதான பாட்டியொருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் பலாத்கார முயற்சி காரணமாக பாட்டியும், அதனுடன் தொடர்புடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.
பாலியல் பலாத்கார முயற்சியின் போது பிரஸ்தாப இளைஞனால் பாட்டியின் தலை நிலத்தில் மோதப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக பாட்டி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இளைஞன் தப்பிச் சென்றிருந்தார்.
பாட்டியின் பக்கத்து வீட்டு வாலிபனே யாரும் இல்லாத சமயமாகப் பார்த்து வீட்டுக்குள் நுழைந்து பலாத்கார முயற்சியை மேற்கொண்டிருந்தார். இளைஞனுக்கு இருபத்தியெட்டு வயது என்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
அவ்வாறான நிலையில் பிரதேசத்தின் காட்டுப் பகுதியொன்றில் பிரஸ்தாப இளைஞனின் சடலம் மரமொன்றில் தூக்குப் போட்டுத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விபரீதமான முயற்சி காரணமாக இருவரின் உயிர்களையும் இழக்க நேரிட்டுள்ள இந்தத் துரதிருஷ்டவசமான சம்பவம் குருநாகல் மாவட்டத்தின் அளவ்வை பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment