Wednesday, December 26, 2012

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பாரத ரத்னா விருது வழங்குமாறு சுப்பிரமணிய சுவாமி பிரதமரிடம் கோரிக்கை!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று தமிழ்நாடு, கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறான கோரிக்கையை அவர் முன்வைத்தார். உலக பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக இந்த விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படைவீரருக்கு இந்தியாவில் வைத்து பயிற்சி வழங்கப்படுவதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைதி திரும்பியுள்ள இலங்கையில் இந்திய மாணவர்கள் சென்று கல்விகற்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment