Friday, January 22, 2016

மகிந்தவுக்கு வழங்க தயாரான பீகொக் மாளிகையில் தங்கம்...?



தொழிற்கட்சி தலைவரான ஏ.எஸ்.பி. லியனகே அவ்வப்போது பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார்.

லியனகே தனக்குச் சொந்தமான பீகொக் மாளிகையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க தயாரான போது அவர் மிகவும் பரப்ரப்பாக பேசப்படும் நபராக மாறினார்.

பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளம் வாஸ்து சாத்திரத்திற்கு அமைய பொருத்தமற்றது என்பதால், மகிந்த ராஜபக்ச தான் குடியேறுவதற்கு முன்னர், நீச்சல் குளத்தை மணல் போட்டு நிரப்பினார். எனினும் ராஜபக்சவுக்கு அந்த மாளிக்கையில் குடியேறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் மணல் போட்டு மூடப்பட்ட நீச்சல் குளத்தில் தங்கம் மற்றும் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் பேசப்பட்டது.

இது குறித்து லியனகே கடந்த 13 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் விசாரணை நடத்தி உண்மையை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த முறைப்பாட்டுக்கு இதுவரை சரியான பதில் கிடைக்காத நிலையில், லியனகே, நீச்சல் தடாகத்தை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஊடகவியலாளர்கள் நேற்று பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வலைவீச்சு


love

நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவிசாவளை பகுதியில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்தே, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

குறித்த பெண்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று, முச்சக்கரவண்டி சாரதியொருவரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து, பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலைப்பாடு குறித்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் போன்ற அமைப்புக்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.ஓரினச்சேர்க்கையாளர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கையில் போதுமான விதிகள் இருப்பதாகவும் அதையும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முறைமையொன்று இருப்பதாகவும் பொலிஸ் பிரிவின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் ஊடாக இந்தியா போய்வர வீசா தேவை இல்லை


89UK1

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் ஊடாக இந்தியா போய்வர வீசா தேவை இல்லை என்று இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் என்ற போர்வையில் பல இலட்சம் படகுகளில் அத்துமீறி நுழைந்து கடத்தல் வியாபாரம் செய்கின்றனர். 

இந்தியாவில் இருந்து உடுப்புகள், பாகிஸ்தானில் இருந்து போதைவஸ்து, கம்போடியா, மியன்மார், மலேசியா ஊடாக வாகன உதிரிப்பாகங்கள் வரை வடமராட்சி கிழக்கு கரைக்கு கடல் ஊடாக கடத்தப்பட்டு பின்னர் மணல் லொறிகளில் மணல் கடத்துவதாக கடத்தபட்டு இலங்கையின் அனைத்து பகுதிக்கும் பயணிகள் பேரூந்துகளில் கடத்தப்படுகிறது.

இத்தகைய செயலை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மனு சமர்ப்பித்துள்ளது.

எல்லை தாண்டி சட்டத்திற்குப் புறம்பாக தொழில் செய்யும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் தனது மனுவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.தாம் 1979ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான சட்டத்தின் படி இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் இதுவரையில் இந்திய மீனவர்கள் தண்டிக்கப்பட்டமையினால் அவர்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை என்பதுடன் அவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்தவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் கூறியதை போன்று 1979ஆம் ஆண்டின் சர்வதேச மீன்பிடி படகுகளுக்கான சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்திய மீனவர்களுக்கு பதிப்புகள் அதிகமாகும் நிலையில் அவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பம் தரிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை….!


mother

எல்-சல்வடோர் நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பினால் பரவும் நோய் நிலையொன்றினால் பிறக்கும் குழந்தைகள் , தீவிர குறைபாடுகளுடன் பிறப்பதை கருத்தில் கொண்டே அந்நாட்டு அதிகாரிகள் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரை கர்ப்பமாவதை தடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

‘சிகா’ எனப்படும் மேற்படி வைரஸ் தொற்றால் , பிறக்கும் குழந்தைகளின் மூளை முழுதாக வளர்ச்சியடைவது தடுக்கப்படுகின்றது.

குறித்த வைரஸ் பரவுவதை அடுத்து பல தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் பலவற்றிற்கான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரேசியல் மற்றும் கொலம்பிய ஆகியநாடுகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொலம்பியாவிலும் கர்ப்பம் தரிப்பதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளது. ஆனால் வெறும் 6-8 மாதங்களுக்கே அக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.