Friday, January 22, 2016

மகிந்தவுக்கு வழங்க தயாரான பீகொக் மாளிகையில் தங்கம்...?



தொழிற்கட்சி தலைவரான ஏ.எஸ்.பி. லியனகே அவ்வப்போது பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார்.

லியனகே தனக்குச் சொந்தமான பீகொக் மாளிகையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க தயாரான போது அவர் மிகவும் பரப்ரப்பாக பேசப்படும் நபராக மாறினார்.

பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளம் வாஸ்து சாத்திரத்திற்கு அமைய பொருத்தமற்றது என்பதால், மகிந்த ராஜபக்ச தான் குடியேறுவதற்கு முன்னர், நீச்சல் குளத்தை மணல் போட்டு நிரப்பினார். எனினும் ராஜபக்சவுக்கு அந்த மாளிக்கையில் குடியேறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் மணல் போட்டு மூடப்பட்ட நீச்சல் குளத்தில் தங்கம் மற்றும் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் பேசப்பட்டது.

இது குறித்து லியனகே கடந்த 13 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் விசாரணை நடத்தி உண்மையை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த முறைப்பாட்டுக்கு இதுவரை சரியான பதில் கிடைக்காத நிலையில், லியனகே, நீச்சல் தடாகத்தை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஊடகவியலாளர்கள் நேற்று பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment