Friday, January 22, 2016

வடக்கு முதல்வருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்



வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் எனக்கோரி தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்.வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞன் முதலமைச்சர் மீது அவதூறு பேசாதீர்கள், முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் என்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவந்தார். 

இந்நிலையில் மாலை 6 மணிக்கு மக்களிடம் தண்ணீர் பெற்று குடித்து உண்ணா விரதப்போராட்டத்தை முடித்துள்ள நிலையில் குறித்த இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. 

இது குறித்து மேற்படி இளைஞனிடம் கேட்டபோது, 

தான் உண்ணா விரதப்போராட்டத்தை ஆரம்பித்தபோதும் புலனாய்வாளர்கள் தம்மிடம் விசாரித்ததாகவும், பின்னர் தனது வீட்டுக்கும் சென்று விசாரித்ததாக கூறுகின்றார். 

மேலும் தாம் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தே உண்ணாவிரதம் இருந்ததாக தெரிவித்த மேற்படி இளைஞன், புலனாய்வாளர்கள் விசாரிப்பதால் தமக்கு பயமாக உள்ளதாவும் கூறியுள்ளார். 


No comments:

Post a Comment