Tuesday, April 10, 2012
இளம் பெண்களை விலை மாதுத்தொழில் ஈடுபடுத்திய பிரபல நடிகை கைது
சினிமாவில் நடிக்க ஆசை காட்டி இளம் பெண்களை விலை மாதுத்தொழிலில் ஈடுபடுத்தியதாக தெலுங்கு நடிகை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, லவ்டிக்கெட், பிரியசகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விலை மாதுத்தொழிலில் தள்ளியதாக பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து பஞ்சாரா ஹில்ஸ் பொலிஸில் ஒரு பெண் தாரா சவுத்ரி மீது பரபரப்பான புகார் அளித்தார்.
அவர் கூறியதாவது, எனக்கு நடிகை தாரா சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை காட்டினார். அதை நம்பி சென்ற என்னை வலுக்கட்டாயமாக விலை மாதுத்தொழில் ஈடுபடுத்தினார்.
அவரிடம் இருந்து தப்பி வந்து இந்த புகாரை அளிக்கிறேன் என்று அப்பெண் தெரிவித்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடமிருந்து மடிக்கணிணிகள், ரகசிய கமெரா, டைரி, பெட்டி நிறைய ஆணுறைகள், 8 செல்போன்கள், முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ராஜ சேகரரெட்டியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், 21 சிம்கார்டுகள் போன்றவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அவரது டைரியில் அரசியல் பிரபலங்களின் போன் நம்பர்கள் இருந்தன. மேலும் ஒரு ஓடியோ கேசட்டில் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு பேரம் பேசியது பதிவாகி இருந்தது.
தாரா சவுத்ரியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது ஆந்திரா, கர்நாடகாவில் ஏராளமான பெண்களை விபசாரத்தில் தள்ளியிருப்பது தெரிய வந்துள்ளது.
சினிமா ஆசையில் வரும் பெண்களை மயக்கி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு இளம்பெண்களை விலை மாதுக்களாக ஈடுபடுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
தனது கைது குறித்து தாரா சவுத்ரி ஊடகங்களிடம் கூறியதாவது, தனக்கு சதி செய்து சிக்க வைத்து விட்டதாகவும் நிறைய நபர்களின் ஜாதகம் தன் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது சிறையில் இருக்கும் அவர், வெளியே வந்ததும் பல ரகசியங்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment