Wednesday, February 1, 2012
நண்பன் போன்ற ரீமேக் படங்களை இனி இயக்க மாட்டேன்!!
''ரீமேக் படத்தை இயக்கியது புது அனுபவமாக இருந்தாலும் இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன்'' இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
என்னுடைய தயாரிப்பில் வெளிவந்த பல படங்கள் நன்றாக ஓடவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ள ஷங்கர், இதனால் பெரும் நஷ்டமடைந்தேன் என்றார்.
படம் தயாரித்து நானே என்னுடைய கையை சுட்டுக் கொண்டேன் என்றும் அதில் இருந்து சிறிதுசிறிதாக மீண்டு வருகிறேன் என்றும் ஷங்கர் கூறினார்.
தற்போது நான் இயக்கிய நண்பன் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் இது இந்திப் படமான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்றும் அவர் தெரிவித்தார்.
நண்பன் படத்தில் விஜய் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தார் என்று கூறிய ஷங்கர், ரீமேக் படத்தை இயக்கியது புது அனுபவமாக இருந்தாலும் இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்றார்.
மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நண்பன் படத்துக்கு முன் ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்க இருந்ததாக கூறிய ஷங்கர், அந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என வெளிவந்த செய்திகள் பொய்யானது என்று கூறினார்-. மேலும், படத்திற்கு அஜீத் (அ) விக்ரம் ஹீரோவாக நடித்தால் நல்லாயிருக்கும் என்று ஷங்கர் கூறினார். இதனையடுத்து படத்தின் அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment