Wednesday, January 11, 2012

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்படவுள்ளது

யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகம் சகல பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்காக விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் வழங்கப்பட இருக்கின்றது என யாழ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தெரிவித்துள்ளார். நாளைய அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்சவின் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்தை நிறைவுபெறச் செய்வதற்கு மேலும் 4.8 மில்லியன் ரூபா ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறியின் நிதியில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிதி மூலம் சுற்றுமதில், பாதை அமைப்பு, உடை மாற்றும் இடம் ஆகியன அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட இருக்கின்றது. இப்பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய பாடசாலை மாணவர்களும் பயன்படுத்துவதற்கு ஏற்ப இந்நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நீச்சல் தடாகம் இருவாரங்களிற்குள் திறந்து வைக்கப்படவுள்ளதாக அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment