Tuesday, January 31, 2012

நீச்சல் உடை அணிந்த தீபிகாவுடன் சைப் நடித்ததில் கோபமில்லை!! - கரீனா

நீச்சல் உடையில் தீபிகாவுடன் வெற்றுடம்புடன் சைப் நடித்ததில் கோபமில்லை என்றார் கரீனா. பாலிவுட் ஸ்டார் சைப் அலிகான், கரீனா கபூர் இணை பிரியாத காதலர்கள். விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரேஸ் 2 என்ற படத்தில் ஹீரோயின் தீபிகா படுகோன் நீச்சல் உடையில் நடிக்க அவரை வெற்றுடம்புடன் கட்டிப்பிடித்து சயீப் அலிகான் நடித்துள்ளார். இந்த காட்சி கரீனாவுக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கிறது என்று பாலிவுட்டில் கிசுகிசு பரவியது. இதுகுறித்து கரீனா கூறும்போது, சைப், தீபிகா காட்சியை விரும்பி பார்த்தேன். சூப்பராக இருந்தது. சைப் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார். அவர் வெற்றுடம்பில் எப்படி இருப்பார் என்பது ஏற்கனவே எனக்கு தெரியும். எங்கள் காதல் உறவு மிகவும் பாதுகாப்பாக உள்ளது. இப்போது இதற்குமேல் எதையும் கூற விரும்பவில்லை என்றார். சமீபத்தில் சைப் அளித்த ஒரு பேட்டியில், கரீனா என்னுடன் ஜோடியாக நடிக்கும்போதுதான் பொருத்தமாக இருக்கிறார். மற்ற கான் நடிகர்களுடன் அவர் பொருத்தமாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அணு குண்டு தயாரிப்பில் புலிகள்: அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டிய இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அணு குண்டுகள் தயாரிக்கின்றார்கள் என்று அஞ்சி இருக்கின்றது இலங்கை அரசு. சிவப்பு பாதரசம் என்கிற இரசாயனப் பொருள் மூலமாக அணு குண்டுகள் உட்பட பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நாசகார ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று விக்கி பீடியா கூறுகின்றது. இந்நிலையில் சிவப்பு பாதரசம் என்கிற இரசாயனப் பொருளை சேகரிக்கின்ற நடவடிக்கையில் புலிகள் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்றும் சிவப்பு பாதரசம் குறித்து கொழும்பு, கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களிடம் புலிகள் 2002 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் விசாரணை நடத்தி இருக்கின்றனர் என்றும் இலங்கை அரசுக்கு இரகசிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்து இருந்தன. அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களிடம் இருந்து பாதுகாப்புக் கொடுக்கின்ற கவச ஆடைகள் சம்பந்தப்பட்ட சர்வதேச மாநாடுகளில் புலிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றி இருக்கின்றனர் என்றும் குறிப்பாக லண்டனில் 2001 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி இடம்பெற்று இருந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்று இருந்தனர் என்றும் இலங்கை அறிந்து வைத்திருந்தது. மேற்சொன்ன லண்டன் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஒன்று அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களிடம் இருந்து பாதுகாப்புக் கொடுக்கின்ற கவச ஆடைகள் பற்றியது என இலங்கை அறிந்து இருந்தது. அத்துடன் அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட ஏராளமான புத்தகங்களை யுத்த நிறுத்த காலத்தில் இருந்து புலிகள் கொள்வனவு செய்திருந்தனர் என்றும் இலங்கை அரசு தெரிந்து வைத்திருந்தது. இந்நிலையில் புலிகளிடம் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நாசகார ஆயுதங்கள் இருக்கக் கூடும் என்று அமெரிக்காவுக்கு 2006 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி முறையிட்டு இருக்கின்றது.

Monday, January 30, 2012

என்னைப்பற்றி அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது! - அமலா பால்

திரைப்பட விழாக்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக வந்த வதந்திகளுக்கு நடிகை அமலா பால் பதிலளித்துள்ளார். நடிகை அமலாபால், சித்தார்த் ஜோடியாக நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது. நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் அமலாபால் கலந்து கொள்ளவில்லை. திட்டமிட்டு இவ்விழாவை புறக்கணித்ததாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அமலாபால் கூறியதாவது, என் மீது அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளும், வதந்திகளும் பரப்பப்படுகின்றன. காதலில் சொதப்புவது எப்படி? பட விழாவை புறக்கணித்ததாக குறை சொல்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எவ்வளவோ பட விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். நான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டுள்ளேன். எந்த கதாநாயகியும் என்னைப் போல் விழாக்களில் கலந்து கொண்டிருக்கமாட்டார்கள். தெய்வத்திருமகள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்தேன் என்றாலும் அப்படத்தை விளம்பரப்படுத்த பல ஊர்களுக்கு சென்றுள்ளேன். வேட்டை படத்தை விளம்பரம் செய்வதிலும் எனது பங்களிப்பு அதிகமாக இருந்ததுள்ளது. பல மாநிலங்கள் சென்று எனது படங்களை விளம்பரப்படுத்தியுள்ளேன். அதனால் என்னைப்பற்றி இதுபோல் அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அதிசயமான உண்மை: காதலியின் முன்னால் பத்து தலைகளுடன் தோன்றும் இராவணன்!!

பகவான் கிருஷ்ணரை எத்தனையோ பெண்கள் காதலித்தனர் என்று நாம் அறிகின்றோம். புராணங்கள், இதிகாஷங்கள் உட்பட இந்து சமய நூல்கள் பலவும் இதை சொல்லி நிற்கின்றன. ஆனால் இன்றைய கலியுகத்தில் அதுவும் இருபதாம் நூற்றாண்டில் இராவணனை காதலிக்கின்ற பெண் ஒருவரை அறிய முடிகின்றது. இது கட்டுக் கதையோ, கற்பனையோ அல்ல. உளவியல் அறிஞர்கள் பலரையும் திக்குமுக்காட வைத்திருக்கின்ற அதிசயமான உண்மை. இராவணன் மீது காதல் வசப்பட்டு உள்ளார் வங்காளப் பெண் ஒருவர். இவரது கனவில் காலை, மாலை எப்பொழுதும் இராவணன் பத்துத் தலைகளுடன் தோன்றுகின்றார் என்று காதல் மயக்கத்தோடு கூறுகின்றார். இராவணனைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தால் போதும் இராவணன் அழகிய பத்துத் தலைகளுடன் கண் முன் தோன்றி விடுகின்றார் என்கிறார். இவரது கண்களுக்கு ரோமியோவாக இராவணன் தெரிகின்றான். உளவியல் அறிஞர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள். மனிதர்கள் புரிந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.

தலைமைத்துவப் பயிற்சி என்று தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் படையினர்!!

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில், தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைக்கும் செயற்பாட்டை படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது, படித்த அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்க நடத்தப்படும், இராணுவச் சிப்பாயையும், காதலித்து அவருடன் ஓடிய பெண்ணையும் விருந்தினர்களாக அழைத்து மாணவர்கள் அவர்களை கௌரவிக்க வேண்டும் என படையினர் நிர்ப்பந்திப்பது, அநாகரிகமான செயல். இதனை தட்டிக் கேட்டால், வேலை பறிபோகும், அச்சுறுத்தப்படுவோம் என்பதனாலேயே பல கல்வி அதிகாரிகள் அங்கு நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை பார்த்தும் பார்க்காதவர்கள் போல் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள, பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிளி.மத்திய கல்லூரியில் இராணுவத்தினரின் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரின் பயற்சி வகுப்புக்கள் கடந்த 26ம் திகதி தொடக்கம் நடத்தப்பட்டு வருகின்றது. 5 நாட்கள் கொண்ட இந்த பயிற்சியில் 150 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயற்சிகளின்போது மாணவர்கள் தவறாக வழி நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக மத்திய கல்லூரி இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்தப்பட்டபோது, அங்கிருந்த பெண்ணொருவர், இராணுவச் சிப்பாயுடன் ஓடி திருமணம் முடித்துக் கொண்டார், இந்த இருவரையுமே பயிற்சி நெறியின் ஆரம்ப நாளுக்கு விருந்தினர்களாக அழைத்ததுடன், இவர்கள் ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவுக்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆண், மாணவர்களையும், பெண் மாணவிகளையும் ஒன்றாக சேர்ந்து ஆடுமாறும், கேட்கப்பட்டுள்ளனர். இதேபோல் முல்லைத்தீவில் இடம்பெறும் களியாட்ட நிகழ்வொன்றுக்கு இவர்களை அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இது எமது தமிழ் கலாச்சாரத்திற்கு பொருந்தாது என்பதுடன், இந்த செயற்பாடு மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும், எனவே இந்த விடயத்தில் பெற்றோர் அக்கறை காட்டவேண்டும் என்பதுடன், கல்வி அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாகவும், அது தொடர்பாக அறிந்தும், அறியாதவர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர். என அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில், இந்த செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், இந்த பயிற்சிப் பட்டறை இராணுவத்தினரின் முழுமையான ஏற்பாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியை இராணுவத்தினர் வழங்கவேண்டிய தேவை கிடையாது. மேலும் மாணவர்களிடத்தில் கலாச்சார சீரழிவுகளையும், இளவயதில் தேவையற்ற விடயங்களில் ஈடுபாடு காட்டும் தன்மையினையுமே அதிகரிக்கும், படைச்சிப்பாயுடன், ஒரு இளம் பெண் திருமணம் செய்து கொள்வது ஒரு முன்னுதாரணமாக செயலாக இருக்க முடியாது. இந்த நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறி போட்டிருக்கின்றீர்கள். இனிமேலாவது பெற்றோர் இந்த விடயத்தில் அக்கறை கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், மேலும் இந்த விடயத்தில் கல்வி அதிகாரிகள் பேச முடியாதவர்களாக இருப்பது வேதனையளிக்கின்றது. என்றார்.

பேரனால் கற்பழிக்கப்பட்ட பேத்தி! அதிர்ச்சியில் உறைந்தது யாழ்.மீசாலை!!

மீசாலைப் பகுதியில் பதின்ம வயதுடைய தனது பேர்த்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 65 வயதுடைய முதியவர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பதின்ம வயது மாணவியை சம்பவ தினத்தன்று மதுபோதையில் வந்த தாத்தா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், மறுநாள் இச் சம்பவம் தொடர்பில் மாணவி தனது ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் அம் மாணவியின் சிறியதாயர் ஒருவரைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன், இதனை அறிந்த சந்தேக நபரான தாத்தா நஞ்சருந்திய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே இவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இந்த 65 வயதுத் தாத்தாவைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, முல்லைத்தீவில் தாயை இழந்த இந்த மாணவியின் தந்தை வேறு திருமணம் செய்ததால் இவர் 65 வயதுடைய பேரனுடன் தங்கிப் படித்து வருகிறார் என்றும் இந்த நிலையிலேயே பேரன் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆபாசப் படங்களைக் காட்டி வன்புணர்வு புரிந்தார் என்றும் கூறப்படுகின்றது

நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் நெருக்கமாக இருக்கும் பிரபுதேவா!!

விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும்-நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். நயன்தாரா மீதுள்ள காதலால் தனது முதல்மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு எல்லாம் மாறினார். கடைசியாக தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் இருவரும் பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபுதேவா-நயன்தாராவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில், முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தாலும், அவரது குழந்தைகளை விட்டு பிரிய மனமில்லையாம். சமீபத்தில் கூட இதுதொடர்பாக நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே பிரச்னை உருவானது. மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நயன்தாராவுக்கு, பிரபுதேவாவின் மீதான கோபம் அதிகரித்துள்ளதாகவும், இதுவே இவர்களது காதலில் விரிசல் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது இருவரும் அமைதியாக பிரிவது என்று முடிவு எடுத்து, பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நயன்தாராவும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அவர் இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, January 29, 2012

நடுவீதியில் பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல்!! கிளி நொச்சி பரந்தன் சந்தியில் அராஜகம்!

பஸ் நடத்துனருக்கும் சிவல் உடையில் பயணித்த படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பயணிகளும் படையினரால் தாக்கப்பட்டனர். இதையடுத்து பஸ் சாரதி, நடத்துனர், படையினர் நால்வர் என 6 பேரைக் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பஸ்ஸில் பயணித்த பயணிகள் வீதியில் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் கிளி நொச்சி பரந்தன் சந்தியில் நடைபெற்றது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி தனியார் பஸ் வந்துகொண் டிருந்தது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நகரப் போக்கு வரத்துப் பொலிஸாரால் பஸ் மறிக்கப்பட்டது. மிதி பலகையில் பயணிகளை ஏற்றிய மைக்காக பஸ் நடத்துனரிடம் குற்றப் பணம் அறவிடப்பட்டது. பின்னர் பஸ் புறப்பட ஆயத்தமாகியதும் மிதி பலகையில் நின்ற பயணிகளை உள்ளே செல்லுமாறு பணித்தார் நடத்துனர். இதன் போது மிதி பலகையில் சிவில் உடையில் நின்ற படையினருக்கும் நடத்துனருக்கும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பாக மாறியது. சம்பவத்தை அறிந்து அருகில் நின்ற இராணுவத்தினர் சிலரும் வந்து சேர்ந்தனர். நடத்துனரும் பயணிகள் சிலரும் படையினரால் தாக்கப்பட்டனர். பயணிகள் தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி, நடத்துனரையும் இராணுவத்தினர் நால்வரையும் கைது செய்து கொண்டு சென்றனர். பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் நடு வீதியில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் வேறு பஸ்களில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தனர். இரவு வேளையில் திடீரெனப் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ்களில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வீடு வந்து சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. படையினரும் பொது மக்களும் மோதிக்கொள்ளும் இத் தகைய சம்பவங்கள் வன்னியில் அதிகம் நிகழ ஆரம்பித்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கும் பஸ் நடத்துனர் ஒருவருக்கும் இடையே கைகலப்பு இடம் பெற்றது. வேறு அசம்பாவிதங்கள் எவையும் நடை பெறவில்லை. இதனை அடுத்து அவர்களைக் கைது செய்து தாம் விசாரித்து வருவதாகவும் நேற்றிரவு கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் தெரிவித்தார்.

தன் ஒல்லியான உடழழகின் ரகசியத்தைக் கூறுகிறார் அமலா பால்!

தமிழ் திரை உலகின் அழகு நிலா அமலா பால். ஒல்லியான தேகம், வசீகரிக்கும் தோற்றம். இன்றைய இளைய தலைமுறை நடிகைகளிலேயே இளைஞர்கள் மட்டுமல்லாது கல்லூரி மாணவிகளிடமும் அதிக மதிப்பெண் பெற்று அழகு நிலாவாக திகழ்கிறார் அமலா பால். மைனாவில் பாவடை தாவணியில் ஆகட்டும், சமீபத்திய வேட்டையில் மாடர்ன் உடையில் கலக்கியது ஆகட்டும் அவரது உடலமைப்பிற்கு அனைத்துமே கச்சிதாமாக பொருந்தியது. அவரது உடல் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. அது குறித்து அவரே பகிர்ந்து கொண்டது. ஜங்க் புட் கூடாது பசிக்கிறது என்பதற்காக ஜங்க் புட் வகைகளை எந்த சூழ்நிலையிலும் தொடவே கூடாது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும், சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் இதுதான் என்னுடைய முதல் அட்வைஸ். குண்டான பெண்கள் கண்ட கண்ட ரசாயணங்கள் அடங்கிய மருந்துகளை உட்கொள்வதை விட ஆயுர்வேதா மருந்துகளை உட்கொள்ளவது அவசியம். நீச்சல் பயிற்சி மனதையும், உடலையும் லேசாக்குவது நீச்சல்தான். எத்தனை வேலை இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது நீந்துவது மிகவும் பிடித்தமானது. நோ டென்சன், கூல் சில வருடங்களுக்கு முன்வரை சரியான டென்சன் பார்ட்டி நான். அது முகத்தில் பிரதிபலித்து சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். இப்பொழுது இடியே விழுந்தாலும் டென்சன் பற்றி கவலைப்படாமல் கூலாக சுற்றிக்கொண்டிருப்பேன். அது அழகில் அப்படியே பிரதிபலிக்கிறது. அழகும் ஆரோக்கியமும் எப்பவுமே சிரிச்ச முகமா இருக்கணும். அழகும் ஆரோக்கியமும் மனசு சம்பந்தப்பட்டது. நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்துடும். எனவே எப்பவுமே மகிழ்ச்சியோட இருந்தா உடலும், மனசும் ஆரோக்கியமாகும். இதுவே என்னோட அழகு ரகசியம் என்று கூறிவிட்டு புன்னகை சிந்தினார் அமலாபால்.

ஜோடிக்கிளிகள் பிரிஞ்சு போச்சு! வரிசையில் அடுத்துவருவது யாரு?

காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருக்கிறார்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும். ஆனால் இங்கே என்னடா என்றால், ரெண்டு பேருக்கும் புட்டுகிச்சு என்று கிசுகிசு பரப்புகிறார்கள். அதுவே செய்தியாகவும் கசிவதால் அதையெல்லாம் படித்துவிட்டு, இந்த பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று நமுட்டு சிரிப்பு சிரிக்கிறதாம் ஜோடி. நயன்தாரா மீண்டும் நடிக்கப் போகிறார் என்று வெளிவரும் செய்திகளிலும் அவ்வளவு உண்மை இல்லையாம். அவரை தேடிச் சென்று அழைக்கிற சில இயக்குனர்களிடம், யோசிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். நேரில் வருகிறவர்களிடம் முகத்தில் அடித்த மாதிரி பதில் சொல்ல முடியாதல்லவா? அதனால்தான் இப்படி ஒரு பதில். எப்படி இருக்கிறது இப்போதைய நிலவரம்? பிரபுதேவா இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் ரவுடி ரத்தோர் படப்பிடிப்பு பதாமியில் நடந்து வருகிறது. அவ்வப்போது கிளம்பி பதாமிக்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா. சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கு திரும்பிவிடுகிறார். இந்த சந்திப்பும் மிக மிக சுமூகமாகவே இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, இவர்கள் இருவருமே சென்னையின் காஸ்ட்லி பகுதியான போர்ட் கிளப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும் தகவல். உண்மை இப்படியிருக்கும் போது எதற்காக திரும்ப திரும்ப இவர்களின் காதலை டெட்டால் ஊற்றி கழுவிக் கொண்டேயிருக்கிறது மீடியா என்பதுதான் புரியவே இல்லை!

சிறுவர்களின் உடற்பாகங்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் இலங்கை! அதி்ர்சித் தகவல் அம்பலம்!!

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வெறுபட்ட துஷ்பிரயோகச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தவண்ணமேயுள்ளன. அந்த வகையில் உடல் பாகங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வர்த்தகம் பற்றிய தகவல்களை சிங்கள பத்திரிகையொன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உடல் பாகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கைச் சிறுவர் சிறுமியர் பாரியளவில் இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான சிறுவர் சிறுமியர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், உயர் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் சிறுவர் சிறுமியர் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும், இவர்களில் பலர் இவ்வாறு உடல் பாகங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் முதல் 2010ம் ஆண்டு இறுதி வரையில் வடக்கில் 700 சிறுவர் சிறுமியர் காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உலகின் மிக அதிகளவில் சிறுவர் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்படும் நாடான இந்தியாவிற்கு சிறுவர் சிறுமியர் அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சமாதான தூதர் சொல்ஹெய்ம் மீது கொலையாளியை ஏவிய சிங்களவர்!

இலங்கை அரசு – தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் விசேட சமாதான தூதுவராக செயல்பட்டு வந்தபோது நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு சிங்கள கடும்போக்காளர்களால் பாரிய உயிராபத்து ஏற்பட்டு இருக்கின்றது. நோர்வேயின் பிரதான புலனாய்வு அமைப்பு இந்நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வந்து உள்ளது. எரிக் சொல்ஹெய்முக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்து வந்திருக்கின்றார் விமர்சகர் Falk Rune Rovik. இவர் ஒரு நோர்வே பிரஜை. படுகொலைக் குற்றத்துக்காக 1997 இல் சிறையில் போடப்பட்டவர். மன நல வள நிலையம் ஒன்றில் 10 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார். இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துகின்ற நோர்வேயின் முயற்சிக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் இவரை மிகவும் ஒரு ஆபத்தான பேர்வழியாக நோர்வே அதிகாரிகள் கண்டு வந்திருக்கின்றனர். இலங்கையில் பயங்கரவாதத்தை நிலைநாட்ட நோர்வே முயல்கின்றது என்று குற்றம் சாட்டி வந்திருக்கின்றார். கனடாவின் தலைநகர் ரோரன்ரோவுக்கு சென்று இக்குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்களுடன் பேசி இருக்கின்றார். சிங்கள கடும் போக்காளர்களிடம் இருந்து இவருக்கு பணம் கிடைக்கப் பெற்று வந்திருக்கின்றது என நோர்வேயின் பிரதான புலனாய்வு அமைப்பு நம்புகின்றது. அத்துடன் இவரை இலங்கை அரசு ஆதரித்து வந்திருக்கின்றது எனவும் விசுவாசிக்கின்றது. Falk Rune Rovik இன் விமர்சனங்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் வெளியாகி வந்திருப்பது இப்புலனாய்வு அமைப்பை உஷார்ப்படுத்தி இருந்தது. மொத்த்த்தில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துகின்ற நோர்வேயின் முயற்சிக்கும், எரிக் சொல்ஹெய்மின் உயிருக்கும் Falk Rune Rovik ஆல் உயிராபத்து காணப்படுகின்றது என புலனாய்வு அமைப்பு முடிவெடுத்து இருந்தது.

Friday, January 27, 2012

ஹிந்தி படத்தில் நடிக்கும் பிரபல புளூ பிலிம் நடிகை (வீடியோ இணைப்பு)

பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கும் ஜிஸ்ம் 2 படத்தில் முக்கியமான வேடம் எற்றுள்ளார் பிரபல புளூ பிலிம் நடிகையான சன்னி லியோன்.கனடாவில் பிறந்து செட்டிலாகிவிட்டவர் சன்னி லியோன். உலகின் டாப் செக்ஸ் பட நடிகையாகத் திகழ்கிறார். இதற்கென தனி வெப்சைட்டெல்லாம் வைத்து, தனது ஆபாசப் படங்கள், தான் நடித்த செக்ஸ் படங்களைப் பார்க்க டாலர்களில் கட்டணம் வசூலிக்கிறார். இப்போது இவருக்கு இந்தியாவிலிருந்து ஏகப்பட்ட வாய்ப்புகள்... நடிக்கத்தான்! ஏற்கெனவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அடுத்து மகேஷ் பட் இயக்கும் ஜிஸ்ம் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் இதை மறுத்து வந்தனர் படக்குழுவினர். இந்த நிலையில் ஜிஸ்ம் 2 பட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதில் மெல்லிய வெள்ளை ஈரத்துணி போர்த்திய ஒரு பெண்ணின் படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண் வேறு யாருமல்ல.... செக்ஸ் ஸ்டார் சன்னி வியோன்தான் என்று அறிவித்துள்ளார் இயக்குநர் மகேஷ்பட் இந்தப் படத்தில் அவர் பாலிவுட்டின் பிரபலமான மெஹபூபா... பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளாராம். ஷோலேயில் இந்தப் பாட்டுக்கு ஒரிஜினலாக நடனம் ஆடியிருந்தவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஹெலன் என்பது குறிப்பிடத்தக்கது!

அது சின்னதா இருக்குதேன்னு கவலையா? (காணொளி இணைப்பு)

பெண்மையின் அழகைப் பிரதிபலிக்கும் முக்கிய அம்சங்களில் அவளது மார்பக வளர்ச்சியும் ஒன்று. ஆனால் சுமார் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இன்றி அவதிப்படுவார்கள். சருமப் பிரச்சினை, கூந்தல் பிரச்சினை போன்று இதுவும் அழகு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினைதான் என்பது பல பெண்களுக்குப் புரிவதில்லை. மார்பக வளர்ச்சியைப் பாதிக்கும் காரணங்களையும், அவற்றைக் குணப்படுத்தும் முறைகளையும் இங்கே பார்ப்போம்„- மார்பக வளர்ச்சி பாதிக்க பரம் பரைத் தன்மையும், ஹhர்மோன் கோளாறுகளும் காரணங்களாக இருக்க லாம். பரம்பரைத் தன்மைக் கோளாறுகளை உடற்பயிற்சிகள், மசாஜ், உணவுக் கட்டுப் பாடு போன்றவற்றிலும் ஹார்மோன் கோளாறுகளை அதற்கான சிகிச்சையாலும் சாpயாக்கலாம். மார்பகங்கள் சிறுத்துக் காணப்படுவோர் வீட்டிலிருந்தபடியே செய்துகொள்ளக் கூடிய சில பயிற்சிகள் இதோ... கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி இருத்தல். நன்றாக நேராக நிமிர்ந்து சரியான நிலையில் உட்கார்ந்து கொண்டு மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் கழித்து வெளி யேற்றுதல். நன்றாக, நேராக நிமிர்ந்து சரியான நிலையில் உட்கார்ந்துகொண்டு மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் கழித்து வெளி யேற்றுதல். கைகள் இரண்டையும் ஸ்கிப்பிங் ஆடுவதுபோல மடக்காமல் சுழற்றுதல். இடுப்பில் கைகளை வைத்தபடி தலையை முன்னும், பின்னுமாகக் குனிதல். கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி தட்டுதல், அதேபால கீழே நீட்டித் தட்டுதல். கைகளை குவித்து வணக்கம் சொல்கிற மாதிhp சிறிது நேரம் உறுதியாக வைத்திருத்தல். மேற்கூறிய உடற்பயிற்சிகளை தினமும் பத்து முறைகள் செய்ய வேண்டும். உடற்பயிற்சிகளைத் தவிர மசாஜ; மூலமும் இப்பிரச்சினையை ஓரளவுக்குக் குணப்படுத்தலாம். தரமான பாலாடை கொண்டு கழுத்தின் மேல் பகுதியிலிருந்து தடவி மார் பகங்கள் வரை நான்கு விரல் களால் வட்டமாக மசாஜ் செய்யவும்.அதே மாதிரி வயிற்றின் கீழ்ப்பகுதியி லிருந்து மார்பகத்தின் மேல் பகுதி வரை வட்டமாக மசாஜ; செய்யவும். இவற்றையும் தினமும் குறைந்தது பத்து முறைகள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மசாஜ தவிர, தினமும் உணவில் நிறைய கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றையும், கொழுப்புச் சத்து அதிகமுள்ள பால், நெய் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மார்பக வளர்ச்சி அதிகமாக இருக்கும் பெண்கள் மசாஜ செய்யக் கூடாது. இவர்கள் உடலை வருத்தும்படியான உடற்பயிற்சிகளை, உதாரணத்திற்கு வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, நடப்பது, ஓடுவது போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். நீராவி சிகிச்சை மூலமும் பெருத்த மார்பகங்களை சிறிய தாக்க முயற்சி செய்யலாம். இதைத் தவிர பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலமும் அதிகப்படியான கொழுப்பை அகற்றி, அளவைக் குறைக்கலாம். இவர்கள் பால், நெய், வெண்ணெய், தயிர் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். வேக வைத்த காய் கறிகள், பழங்கள், கீரை, கொழுப்பு நீக்கிய பால், இளநீர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

Thursday, January 26, 2012

சாறியில் அழகாக இருந்தது அந்தக் காலம்! ஆபாசமாக இருப்பது இந்தக் காலம்!! (பட இணைப்பு)

தமிழ்ப் பெண்களுக்கான அடையாளச் சின்னமாகச் சாறி அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் சாறி அணிந்து வீதியில் செல்லும் பெண்களைப் பார்த்தால் கையெடுத்து வணங்க வேண்டும் என்ற மனோபாவம் வெளிப்படும். ஆனால் அதே சாறியை தற்காலப் பெண்கள் அணிகின்ற போது அது ஆபாசமாகக் காட்சியளிக்கின்றது. பெண்களும் அவ்வாறு ஆபாசமாக இருக்கட்டும் என்றே தமிழ்ப் பெண்களின் அடையாளச் சின்னமான சாறியை அணிந்து வருகின்றனர். அணியப்படுகின்ற ஆடை மாற்றப்படவில்லை. ஆனால் அணிகின்ற விதங்கள் மாறுகின்றன. இனிவரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கப் போகுதே ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

உடல் எடை குறையனுமா? மனசுல நினைக்கனுங்க….!

மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம். மனசுல நினைக்கனும் நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும். நமக்கான உணவு எது? நம்முடைய உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாம் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை விடுத்து சத்தான உணவுகளை, குறைந்த கலோரி உள்ள உணவுகளை உண்ணவேண்டும் அப்பொழுதுதான் உடல் எடை எளிதாக குறையும். பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. நார்ச்சத்துள்ள உணவுகள் உடல் எடை குறைய முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு. அதுவும் சத்தான ராகி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது பசி தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். தண்ணீர் குடிங்க உடல் எடையை குறைப்பதில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது. எனவே உணவுக்கு முன்னரே தண்ணீரை குடித்தால் பசி கட்டுப்படும் உணவும் குறைவாக எடுக்கும். இதனால் உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். தண்ணீரானது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். மெதுவா சாப்பிடுங்க உணவை நன்றாக அரைத்து மென்று உண்பது உடலுக்கு ஏற்றது. ஏனெனில் ஜீரணத்திற்குத் தேவையான என்சைம்கள் நாவில் இருந்துதான் கிடைக்கின்றன. எனவே சத்தான உணவுகளை அள்ளி விழுங்காமல் நன்றாக மென்று அரைத்து உண்பது அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையும் கட்டுப்படும். நொறுக்குத் தீனிக்கு பை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் நொறுக்குத் தீனிக்கு பை சொல்வது அவசியட். எனவே குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்து சுகர் ஃப்ரி சுயிங்கம் மெல்லுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். குறைந்த உப்பு, சர்க்கரைக்கு நோ தினமும் உபயோகிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை உடலின் கலோரியை அதிகரிக்கிறதாம். ஜூஸ், மில்க்ஷேக் போன்றவற்றிர்க்கு சர்க்கரை உபயோகிக்காமல் பருகுவது உடல் எடையை குறைக்கும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் உப்பின் அளவையும் குறைத்தே உபயோகிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனையாகும். உடற்பயிற்சி தேவை உடற்பயிற்சி என்றாலே ஜிம் போய்தான் செய்யவேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிமையான எக்ஸர்சைஸ்களை செய்யலாம். இதனால் உடலில் தேங்கும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படும். உடல் பருமனால் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்க நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம். அதனால் கலோரியும் எரிக்கப்படும், உடலும் சிக் என்று ஆகும். புரதம் அவசியம் உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம். அது உடலின் பலத்தை குறைத்துவிடும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம். ஏனெனில் அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.

நண்பன் படத்திற்கு புது பிரச்சனை!!

பாரி,பூரி, கக்கூஸ்காரி - பிரச்சனையிலிருந்து இன்னும் இயக்குநர் ஷங்கர் முழுவதும் வெளிவராமல் முழித்துக் கொண்டிருக்க, புது பிரச்சனை கிளம்பிக் கொண்டிருக்கிறது. விருமாண்டி சந்தானம் என்ற சத்யராஜ் கேரக்டர் வீட்டு வாசலில் இருக்கும் பெயர் பலகையை சிதைத்து அதில் மூத்திரம் போவது போன்று ஷாட் இருக்கிறது அது தான் பிரச்சினை. தேவர்களின் ஓரு பிரிவினர் பயபக்தியுடன் கும்பிடும் சாமி ‘‘விருமாண்டி’’ அதை எழுதி வைத்து அதில் டைட் ஷாட்டில் மூத்திரம் போவது எங்கள் சாமியை அவமதிப்பதாகும் என்று சிலர் குமுறுகிறார்கள்.? இதில் என்ன தப்பு என்று அவர்களிடம் கேட்க? திருப்பதி, வெங்கடாஜலபதி,அய்யப்பன், அல்லது ஏசுராஜா என்ற பெயரில் அந்த கேரக்டர் இருந்து டைட் ஷாட்டில் அதன் மீது மூத்திரம் போவது போல ஷங்கர் எடுத்திருப்பாரா? அவர் முதல் படமே ரிசர்வேசனுக்கு எதிராக இருந்தது. ஷங்கர் ஏதோ விஷமத்துடன் எடுத்திருக்கிறார், அதனால் அந்த ஷாட்டை உடனே நீக்க வேண்டும் என்றார்கள்… அடடே! அவர்கள் கேள்வியிலும் நியாயம் இருக்கிறதே என்று ஷங்கர் அணியில் சிலரிடம் கேட்டோம்,அவர்களோ, அது படத்தில் வரும் ஓரு கேரக்டர் பெயர் அவ்வளவே, படத்திற்கு சம்பந்தமில்லாத வகையில் நாங்கள் ஓன்றும் விருமாண்டி என்று எழதப்பட்ட கோவிலில் மூத்திரம் போவதாக காட்டவில்லையே? மேலும் அந்த பகுதியை சேர்ந்த வைரமுத்துவின் மகன் கார்க்கிதான் வசனம் எழுதியிருக்கிறார், அவர் knowledgeக்கு இந்த மாதிரியான சென்சிடிவ் விஷயங்கள் தெரியாதா என்ன? என்று பதில் சொல்ல! அடடே! இந்தப்பதிலும் சரியாகத்தான் இருக்கிறது.

எப்போதும் தண்ணியுடன் இருப்பேன்! - ஓவியா

எப்போதும் தண்ணியுடன் இருப்பதுதான் என் அழகின் ரகசியம், என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட ஓவியாவுக்கு அடுத்தடுத்த படங்கள் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் சிறு கேரக்டரில் மட்டுமே வந்தார். தற்போது மெரினா படத்தில் நடித்து வரும் ஓவியா தனது அழகு ரசிகயம் பற்றி பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். தினமும் தேன் சாப்பிடுவேன். கேரளத்து மலைத் தக்காளியை முகத்துல பூசிப்பேன். இந்த இரண்டு விஷயத்தையும் தவறாமல் செய்வேன். தண்ணீர் அதிகம் குடிப்பேன். எப்போதும் ஹேண்ட் பேக்கில் தண்ணீர் பாட்டில் இருந்துகொண்டே இருக்கும். அப்படியே முகத்தையும் அடிக்கடி கழுவிக் கொள்வேன். அதுதான் என்னுடைய அழகின் ரகசியம். தண்ணீரை அதிகமா குடிக்க வேண்டும், முகத்தை அவ்வப்போது கழுவ வேண்டும். இந்த இரண்டையும் செய்யும்போது கண்டிப்பா ஓவியாவை நினைத்துக் கொள்ளுங்கள், என்று கூறியிருக்கிறார் ஓவியா. முகப்பு

சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் காணும் பெண்கள் !!

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக் கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக்ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைகளும் அலசப்பட்டன. அதன்படி.... மிகக் குறைவான செக்ஸ் ஆர்வம்„ குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது. செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த அனுபவம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. இதனால் பல பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை ரசிப்பிற்குதியதாக இல்லை. சாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைகிறது. திருமணமான புதிதில் தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்த சந்தோஷ தருணங்கள், இருவரையும் கிளர்ச் சியூட்டிய விஷயங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வது இப்பிரச் சினைக்குத் தீர்வாக அமையலாம். தம்பதியர் இருவரும் சேர்ந்து குளிப்பது, புதிய இடத்தில், சூழ்நிலையில் உறவு வைத்துக் கொள்வதும் இதற்குத் தீர்வாகும். இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக்கு சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகிய வற்றின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம். மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன்சலிங் மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப்படுத்தலாம். பிறப்புறுப்பு வறட்சி: இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும். குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம். உறவின் போது வல: உறவின் போது சில பெண்களுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களிலும் பட்டாணி அளவுக்குப் பெண்களுக்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு. இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான். இவை பாதிக்கப் படும் போது பிறப்புறுப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படுவதோடு சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை ஆன்டிபயாடிக் மருந்துகளின் மூலமோ, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமோ சரி செய்து விட முடியும். வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடைகிற போதா) சொன்னால் மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும். உறவே கொள்ள முடியாத நிலை: ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்களால் உறவில் ஈடுபட முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜனிஸ்மஸ் என்று பெயர். செக்ஸைப் பற்றிய பயம், கடந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்கள் சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம். செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை எப்படி hpலாக்ஸ் செய்வது என்று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண் மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும். உச்சக் கட்டத்தை அடைய முடியாமை: சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப்பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது. இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை. உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்றோ, அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை. உறவின் போது பெரும்பாலான பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம் போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறார்கள். இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிhpயான ஸ்பரிசம் தனக்குக் கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும். அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது. உச்சக் கட்டம் அடையவும் பெண்கள் மேல் நிலையில் இருந்து உறவு கொள்வது பலனளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Wednesday, January 25, 2012

நிர்வாணமாக நடிக்கும் தமிழ் நடிகை ?

மழைக்காலம் என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தீபன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நடிக்க அழைத்தபோது ஒரு நடிகையும் முன் வரவில்லையாம். ஏனென்று விசாரித்தால்தான் பொறி பறக்கிறது. ஓவியக் கல்லூரியில் நடக்கிறது கதை. சரி, அதனாலென்ன? பிரச்சனையே அதுதானாம். ஓவியக் கல்லூரியில் நிர்வாணமாக போஸ் கொடுப்பதற்கென்றே சில பெண்கள் இருப்பார்கள் அல்லவா? அந்த கேரக்டரில் நடிக்கதான் இந்த நடிகைகளுக்கு அழைப்பு விடுத்தார்களாம். கிராபிக்ஸ், டூப் என்று எவ்வளவோ ஒப்பேத்தல்கள் இருக்கும்போது இதில் நடிக்க அப்படியென்ன தயக்கம்? டூப்போ, டுபாக்கூரோ, யார் இந்த கேரக்டரில் நடிக்கிறார்களோ அவர்களைதானே நீலக் கண்ணோடு நோக்கும் இந்த சமூகம். அதனால் ஆளைவிடுங்க சாமி என்று ஓடியவர்கள்தான் அதிகம். அப்படியிருந்தும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறார் சரண்யா. காதல், பேராண்மை என்று சொற்ப படங்களில் நடித்திருந்தாலும், இவரது துணிச்சலான 'எஸ்'சுக்கே சம்பளத்தை அதிகமாக கொடுத்தாராம் இயக்குனர். இப்படி நிர்வாணமாக போஸ் கொடுத்தால் ஒரே நாளிலேயே உலக புகழ் அடையலாம் என்பதற்கு பெங்களூரிலே பூஜா காந்தி (பேர்ல பார்றா மகாத்மா) என்றொரு நடிகை முன்னுதாரணமாக இருக்கிறார். தமிழ்நாட்டில் சரண்யா போலிருக்கிறது.

மீண்டும் இந்தியன் தாத்தாவாகும் கமல் !!!

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். தற்போது நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் படு பிஸியாக இருக்கிறார். ரூ.100 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார். கமலே இயக்கி, நடித்து தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தன்னுடைய அடுத்தபடத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் கமல். விஸ்வரூபம் படத்திற்கு அடுத்தபடியாக தற்போது நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்கவுள்ளார் கமல். தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கும் இப்படத்தை கமலே இயக்கி, நடிக்க உள்ளார். இந்தியில் உருவாகும் படத்திற்கு "அமர் ஹெயின்" என்று பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து கமல் கூறுகையில், இந்தபடத்திற்கான கதையை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தயார் பண்ணிவிட்டேன். ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்க போதிய தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. விஸ்வரூபம் படத்தை முடித்த பின்னர் இப்படத்தை எடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனிடையே விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி சூட்டிங்கை கமல் முடித்துவிட்டாராம். இதனால் படத்தை மே மாதம் வெளியிட கமல் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கலவரம்! காயமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு! 2பேரின் நிலை கவலைக்கிடம்! (படங்கள் இணைப்பு)

புதிய மகசின் சிறைச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 4பேர் உட்பட 28பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த மோதல் சம்பவத்தின் போது சிறைச்சாலையிலுள்ள பதிவேடுகள் அறைஇ சிறைக்கைதிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் விசேட பொலிஸார்இ இராணுவத்தினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, புதிய மகசின் சிறைச்சாலைக்குள் சுமார் 1800 சிறைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், போதைப்பொருள் விவகாரங்களால் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களாவர். இவர்கள் மத்தியில் இப்பொழுதும் போதைப் பொருள் பாவனை இருந்து வருகிறது. கைதிகள் மத்தியில் போதைப் பொருட் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் முகமாக புதிய ஒழுங்குவிதிகளை சிறைச்சாலை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஒழுங்கு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11.10 மணியளவில் சிறைக்கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவர்களைக் கட்டுப்படுத்த முயற்சித்த அதிகாரிகள் மீது மேற்படி கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், மற்றும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் அதிகாரிகள் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் காணப்பட்ட பழமைவாய்ந்த கட்டிடமொன்று தற்போது உடைக்கப்பட்டு வருகின்றது. அக்கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்ட செங்கற்களால் மேற்படி சிறைக்கைதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். (அவ்வாறு அவர்கள் தாக்கிய செங்கற்களின் சிதைவுகள் சிறைச்சாலைக்கு வெளியே பிரதான வீதியிலும் சிதறிக்கிடப்பதைக் காணக்கூடியதாக இருந்தது) இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக விசேட பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் என சிறைச்சாலை வளாகத்துக்குள் குவிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் மீது சிறைக்கைதிகள் தாக்குதல்களை நடத்தினர். இந்நிலையில், சிறைக்கைதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பாதுகாப்பு தரப்பினரால் கண்ணீர்ப் புகைக்குண்டு பிரயோகமும் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. கண்ணீர்ப் புகைக்குண்டு பிரயோகத்தினால் சிறைக்கைதிகள் மாத்திரமன்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவத்தினால் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் உட்பட 28பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவத்தின் போது மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 180 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மோதலின் போது அவர்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்திலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். அத்துடன், பாதுகாப்பு தரப்பினரால் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Tuesday, January 24, 2012

நீண்ட காலத்திற்கு பிறகு விஜய் -நடித்த- நண்பன் படம் பற்றி அவர் சொல்லும்

நண்பன் படம் படு வேகமாகப் போய்க் கொண்டிருப்பது நண்பன் படக் குழுவை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு போயுள்ளது. இப்படிப்பட்ட படங்களில் விஜய் தொடர்ந்து நடித்தால் எப்படியிருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறுவதைப் பார்க்க முடிகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அத்தனைத் தரப்பினரும் நண்பனைப் பார்க்க அலை மோதுவதை தியேட்டர்களில் காண முடிகிறது. நண்பன் படம் வசூலில் அள்ளிக் கொண்டிருப்பதை தமிழ்த் திரையுலகமும் கூட சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜய். அப்போது அவர் கூறுகையில், நண்பன் படம் நல்லா போகுது. வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் தகவல் வருது. வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் 3 இடியட்ஸ் பார்த்த போது ரொம்ப பிடித்தது. அதனால் அதன் ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி கேரக்டர்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி அமைய வேண்டும். நண்பன் படத்தில் அது அமைந்தது. இதில் ஆக்ஷன், பன்ச் வசனம் இல்லை. பத்து பேரை அடித்து சண்டை போடுவது ஒரு வகை ஹீரோயிசமாக இருந்தாலும் நண்பன் பட கேரக்டர் வேறு விதமான ஹீரோயிசம். என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது நண்பன் படத்தில் நிறைவேறியது. என் படங்களில் பஞ்ச் வசனங்களை திணிக்க விரும்ப மாட்டேன். சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன். நண்பன் படத்தில் கதைக்கு தேவையாக இருந்ததால் இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். அதேசமயம், நேருக்கு நேராக முத்தம் கொடுக்கவில்லை. மாறாக சாய்த்துக் கொடுத்ததால், மூக்குடன் மூக்கு இடிக்கவில்லை. ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராக்கிங்குகளில் அவை நடப்பவை தான். படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் எனக்கு நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். தற்கால கல்வி முறையின் தவறுகள் படத்தில் சுட்டிக் காட்டிப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையிலும் ஆர்வம் இருக்கிறதோ அதில் அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது. அடுத்து துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன். இப்படம் வேறு பரிமானத்தில் இருக்கும். நண்பன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜய். சரி இந்திப் படத்தில் நடிப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய், ஏன் நல்லாத்தானே போய்ட்டிருக்கு என்று சிரித்தபடி கேட்டார்.

விஜய்யை அடிக்க தயங்கிய ஸ்ரீகாந்த்…!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள நண்பன் படம் மூலம், நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது என்றால் அதுமிகையல்ல. விஜய், ஜீவா ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தும் நண்பன் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நண்பன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய்யை, ஜீவாவும், ஸ்ரீகாந்தும் அடிப்பது போன்று ஒரு காட்சி. ஆனால் இந்த காட்சியில் நடிக்க தயங்கியதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஜீவாவும், நானும் விஜய்யை அடிப்பது போன்று காட்சி. ஆனால் இதில் நடிக்க நான் தயங்கினேன். பிறகு விஜய்யே வந்து தயங்காதீர்கள், இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அந்தகாட்சியில் நடித்தேன். விஜய் ‌சொன்னது போன்று பலரும் அந்தக்காட்சியை பாராட்டினார்கள். சூட்டிங்கில் மூவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். நண்பன் படம் மூன்று ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் மூவருக்கும் சமமான கேரக்டர் தான். இதனால் மூவரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அப்படி ஒரு கேரக்டரை அமைத்து கொடுத்த டைரக்டர் ஷங்கர் சாருக்கு நன்றி. ஷங்கர் சார் டைரக்டர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நடிகரும் கூட. அவர் எப்படி நடிக்க சொன்னாரோ, அதன்படி அப்படியே நடித்தேன் என்றார்.

Saturday, January 21, 2012

இறுதி யுத்தத்தில் படையினரும் சிங்கள முஸ்லிம் மக்களுமே கொல்லப்பட்டனராம்!

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை மறைத்து, இந்தப்போரில் சிறிலங்காப் படையினரும், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுமே கொல்லப்பட்டதாக கூறத் தொடங்கியுள்ளது. போரில் உயிரிழந்த குடிமக்கள் பாதுகாப்புப் படையினரின் நினைவாக மிகிந்தலையில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியை திறந்து வைத்து உரையாற்றியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மனிதாபிமானப் போரில் சிறிலங்காப் படையினரும், சிங்கள முஸ்லிம் பொதுமக்களுமே கொல்லப்பட்டதாக கூறியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்தப் போரில் கணிசமானளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அதிபர் ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணங்களை அவர் அப்பட்டமான முறையில் மூடி மறைத்துள்ளார். மிகிந்தலையில் சிறிலங்கா அதிபர் நிகழ்த்திய உரையில் கூறியுள்ளதாவது, "பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து துடைத்தெறிந்தாலும், நாம் பெற்றுக் கொண்ட வெற்றியை மீள அபகரித்துக் கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பாக அரசாங்கம் அவதானத்துடன் உள்ளது. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவம், காவல்துறையைப் போன்றே குடிமக்கள் பாதுகாப்புப் படையினரும் தமது உயிரை பணயம் வைத்துப் போராடினர். கெப்பிட்டிக்கொல்லாவயில் இடம்பெற்ற குரூரமான சம்பவம் நாம் மறக்க முடியாதது. சம்பவத்தைக் கேள்விப்பட்டு நாம் உடனடியாக இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் துக்கம் விசாரித்தோம். ஏனைய மக்களை ஆறுதல் படுத்துவதிலும் ஈடுபட்டோம். அதுவரை காலமும் குடிமக்கள் பாதுகாப்புப் படையினர் உதாசீனங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. நாம் அவர்களுக்கு சிறந்த பயிற்சியளித்தோம். அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களையும் பலமுள்ள படையினராக உருவாக்கினோம். அவர்களுக்கான பொறுப்பை பாதுகாப்புச் செயலாளர் ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்மூலம் கிராமங்களினதும், பிரதேசத்தினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன் கிராமங்களை விட்டுவிட்டு வெளியேற முற்பட்ட மக்களை தடுத்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும் அவர்கள் வழங்கினர். எல்லைக் கிராமங்களிலுள்ள மக்களை அங்கிருந்து துரத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டனர். அவர்களைத் தெற்குப் பக்கம் துரத்த எண்ணினர். எனினும், நாம் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்ததால் அவர்கள் அதனைத் தடுத்தனர். நாட்டை மீட்கும் வெற்றியின் பங்காளர்களாக சிவில் பாதுகாப்புப் படையினர் திகழ்கின்றனர். மனிதாபிமான நடவடிக்கையின் போது 525 குடிமக்கள் பாதுகாப்புப் படையினர் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அதேவேளை சிங்கள, முஸ்லிம் மக்களும் உயிரிழந்துள்ளனர். தாய்நாட்டை மீட்பதற்காகவே அவர்கள் இந்தத் தியாகத்தைச் செய்துள்ளனர். இந்த மண்ணில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் உலகின் சகல பகுதிகளிலும் பலமான வலையமைப்பின் மூலம் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. வெவ்வேறு போர்வையில் வெவ்வேறு விதங்களில் அவை இடம்பெற்று வருகின்றன. நாட்டையும் நாம் ஈட்டியுள்ள வெற்றியையும் சீர்குலைப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். புலம்பெயர் தமிழர் அமைப்பு என்ற பெயரில் இயங்குகின்றனர். நான் அந்தப் பெயரைக் கூடக் கூறுவதற்கு விரும்பவில்லை. அரந்தலாவை சம்பவம் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இலங்கையில் கால்வைக்காத, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிராத இரண்டாம் மூன்றாம் பரம்பரையினர் தவறாகத் திசைதிருப்பப்பட்டு தவறாக செயற்படுகிறார்கள். இவர்களுக்குப் பக்க பலமாகச் செயற்படும் அமைப்புக்கள் எமது வெற்றியை எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அபகரிக்கப் பார்க்கின்றன. இத்தகைய நிலையில் நாம் மிக அவதானமாகச் செயற்படவேண்டும். கவனமாக நிர்வாகம் செய்யவேண்டும். இதுதொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எமது படையினரும் காவல்துறையினரும் பெரும் தியாகங்களுடன் பெற்ற வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நாட்டை சீர்குலைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பில்லா2 Theme பாடலுக்காக அமெரிக்கா பறந்த யுவன் !

பில்லா 2 படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. படத்தில் மூன்று பாடல்களை முடித்து கொடுத்து இருக்கிறார் யுவன். தற்போது யுவன் சங்கர் ராஜா அமெரிக்காவிற்கு பறந்து இருக்கிறார். அங்கு தான் பில்லா 2 இயக்குனரான சக்ரி டோலெட்டியும் இருக்கிறார். இருவருமே அங்கு பில்லா 2 படத்தின் THEME பாடலை உருவாக்க இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் இணையத்தில் பில்லா 2 படத்தில் மூன்று பாடல்களை முடித்து விட்டேன். THEME பாடலுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அது போக இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ஜி.கே.மீடியா என்ற நிறுவனம் 5.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனின் பெரிய பலவீனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கும், இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கும் பொதுவாக காணப்பட்ட பலவீனங்களில் முக்கியமான ஒன்றை அமெரிக்கா அறிந்து வைத்து இருந்தது. பிரபாகரன் ஆனாலும் சரி ஜே. ஆர் ஆனாலும் சரி இருவரும் அவரவர் மக்களிடம் இருந்து ஒதுங்கி இருந்திருக்கின்றனர் என்று அமெரிக்கா கண்டு கொண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிகை THE SATURDAY REVIEW. இப்பத்திரிகைக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நல்ல உறவு இருந்து வந்து உள்ளது. இப்பத்திரிகையின் மூத்த ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர் லூயிஸ் போல். இவர் கொழும்புக்கு வந்திருந்த நாட்களில் 1987 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் திகதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் இவரை சந்தித்துப் பேசி இருக்கின்றனர். ஒபரேசன் லிபரேசன் தாக்குதலால் புலிகள் இயக்கம் எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கின்றார் போல். புலித் தலைவர் பிரபாகரனுக்கும், ஜனாதிபதி ஜே.ஆருக்கும் இடையிலான பெரிய பலவீனம் என்னவென்றால் அவரவர் மக்களிடம் இருந்து ஒதுங்கி தனித்து உள்ளனர் என்று போல் குறிப்பிட்டு உள்ளார். 1987 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைக்கப் பெற்று உள்ளன.

ஜெயலலிதா - சசிகலா நெருக்கத்தில் இருந்தது செக்ஸ்!

தமிழ் நாட்டின் இரும்புப் பெண் என்று ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர். துணைத் தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு ஜெயலலிதா குறித்து அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல் வெளியாகி உள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்றமையில் இரும்புக் கரங்களுடன் முதல்வர் ஜெயலலிதா நடந்து கொண்டார், ராஜிவ் காந்தி கொலையை தொடர்ந்து முதன் முதல் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட இவர் தமிழ் நாட்டில் வியாபித்து வெளிப்படையாக செயல்பட்டு வந்த புலிகள் இயக்கத்தை பூண்டோடு ஒழிக்க உத்தரவிட்டு இருக்கின்றார். தமிழ் நாட்டில் புலிகளை முடிக்க என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யுங்கள் - புலிகளைச் சார்ந்தவர்களை தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்க நீதிக்கு புறம்பான கொலைகளை மேற்கொண்டால்கூட பரவாயில்லை என்று இவர் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டு இருக்கின்றார். அப்பாதுகாப்பு உயரதிகாரியிடம் இருந்து இத்தகவல் துணைத் தூதரகத்துக்கு கிடைத்து உள்ளது என ஆவணத்தில் எழுதப்பட்டு உள்ளது. புலிகளுக்கு எதிரான இவரது அதிரடி நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான போதும் தமிழ் நாட்டில் இருந்து புலிகள் வெளியேறிச் செல்ல இந்நடவடிக்கைகள் காரணம் ஆயின. குற்றச் செயல்களுக்கு எதிராக இவரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் புலிகளுடன் மட்டும் நின்று விடவில்லை. 2004 ஆம் ஆண்டு முதல்வராக இவர் பதவியில் இருந்தபோதுதான் சந்தன கடத்தல் வீரப்பன் தமிழ்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். வீரப்பன் பல தசாப்த காலங்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் காட்டி வந்தவன். பொலிஸார் மற்றும் வன அதிகாரிகள் உட்பட நூற்றுக் கணக்கானோரை கொன்றவன் என்றும் ஆவணத்தில் உள்ளது. ஜெயலலிதா பற்றிய குறிப்பில் இவர் இரும்புப் பெண் என்பதற்கு அப்பால் மேல் நாட்டு ஸ்டைலிலான குட்டைப் பாவாடையை அணிந்து தமிழ் திரைப்படத்தில் முதன்முதல் தோன்றி இருந்த நடிகை. எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக மாத்திரம் அன்றி எம்.ஜி.ஆரின் வைப்பாட்டியாகவும் அறியப்படுபவர் என்றும் ஆவணத்தில் உள்ளது. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவில் செக்ஸ் சம்பந்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் இருவராலும் பகிரங்கமாக ஒருபோதும் வெளியுலகத்துக்கு ஒப்புக் கொள்ளப்படவோ, வெளிப்படுத்தப்படவோ இல்லை என்றும் ஆவணத்தில் உள்ளது. இந்திய அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் என்று இந்திரா காந்தி வர்ணிக்கப்பட்டார். அதே போல அ.தி.மு.கவில் ஒரே ஒரு ஆண் என்று ஜெயலலிதா வர்ணிக்கப்படுகின்றார் என்றும் ஆவணத்தில் உள்ளது. இவரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் என்கிற ஆணாக இருந்தாலும் அரசியலில் உச்சாணிக் கொப்பைத் தொட்டு ஒரு பெண்ணாக கம்பீரத்துடன் நின்று நிலைத்து வருகின்றார் என்றும் ஆவணத்தில் உள்ளது.

அடுத்த ஜென்மத்திலும் என் அன்பான செல்லக் கணவருடன் தான் வாழுவேன்! தற்கொலை செய்துகொண்ட போராளியின் மரண சாசனம்!!

சாவதற்கு நச்சு மருந்துப் போத்தல்கள் வாங்கக் கூடக் காசில்லாமல் தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள்…. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது. ஒரு கொள்கைக்காக போராடியவர்களின் பரிதாபகரமான நிலையே இது… போரால் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் தவித்து மன உளைச்சலுக்கு உள்ளாகும் போராளிகளின் இறுதி முடிவே இவ்வாறு அமைகின்றது. பொருளாதாரக் கட்டமைப்புக்கள் அடியோடு சிதைந்த பின்னர் அடுத்த வேளை சோற்றுக்கு ஏங்குபவர்களின் தவிர்க்க முடியாத இறுதி முடிவாகத் தான் தற்கொலைகள் அமைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒருகாலத்தில் போராளிகளாக இருந்த கணவன், மனைவியின் அதிர்ச்சியான முடிவைப் பாருங்கள். காலிழந்த கணவன், பொருளாதாரம் இல்லை, இனி வாழ்ந்து என்ன என்ற விரக்தி நிலை இருவரையும் மரணக் குழிக்குள் தள்ளி விட்டது. அண்ணனுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவியுடன் குருணல் எனப்படும் நஞ்சைச் சாப்பிட்டு உயிரைத் துறந்து விட்டார்கள் இந்த இணைபிரியாக் காதலர்கள். “அடுத்த ஜென்மத்திலும் என் அன்பான செல்லக் கணவருடன் தான் வாழுவேன்” இது தற்கொலை செய்வதற்கு முன் மனைவி எழுதிய உருக்கமான மரண சாசனத்திலிருந்த ஒரு வரி… பாருங்கள் தாயகத்தின் இன்றைய நிலைமையை..?? அடுத்த மாவீரர் தினத்தை லண்டனில இன்னும் பிரமாண்டமாய் எட்டு இடங்களில கொண்டாடுங்கோ.. கோடிக்கணக்கில செலவளிஞ்சாலும் பரவாயில்லை… அதுகள் நஞ்சு மருந்தைக் கூட கடன்பட்டுத்தான் வேண்டிக் குடிச்சிருப்பார்கள்.. வெளிநாடுகளில் இருந்து தமிழீழம் பேசுவோர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் பணத்தை சாமர்த்தியமாக பங்கு போடுவதில் தான் குறியாக உள்ளனர். உங்களுக்காக போராடியவர்களின் இன்றைய பரிதாபமான நிலையை கொஞ்சமாவது நினைத்துப் பாருங்கள். போரால் பாதிக்கப்பட்ட போராளிகளின் அன்றாட சாப்பாட்டுச் செலவுகளுக்கு, மருத்துவத் தேவைகளுக்கு தயவு செய்து உதவுங்கள். அவர்களின் மறுவாழ்வுக்கு பேச்சளவில் இல்லாமல் நீங்களே நேரடியாக அல்லது தாயகத்தில் உள்ள உங்களின் உறவுகள் மூலமாக உதவுங்கள். இனியும் இப்படியான அவலச் சாவுகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் நீங்கள் விழித்துக் கொள்ளா விட்டால் வரலாறு ஒருபோதும் உங்களை மன்னிக்காது.

Friday, January 20, 2012

இன்றைய இளசுகளின் கனவுக்கன்னி ரிச்சாவுடன் ஒரு நேர்காணல்! (சிறப்பு வீடியோ)

ஒன்றல்ல இரண்டல்ல..! தெலுங்கில் உருவான லீடர் படத்துக்கு மொத்தம் 800 புதுமுகங்கள்! அவர்களில் இருந்து சலித்து எடுக்கப் பட்டவர்தான் இந்த ரிச்சா கங்கோபாத்யாய்! பிறந்தது டெல்லியில்� அதன் பிறகு படித்தது வளர்ந்த்து எல்லாம் அமெரிக்காவின் நார்த்வில்லியில். சினிமாவுக்காகவே உங்களது பெற்றோர் உங்களை வளர்த்தார்களா? இல்லை இல்லை! அப்படி எந்த திட்டமிடலும் இல்லை. ஆனால் நான் ஒரு வாத்திய இசைக்கலைஞராக இன்னோரு பக்கத்தில் புகழ்பெற வேண்டும் என்று அப்பா விரும்பினார். இதனால் என்னை அப்பா அந்த்ரா என்ற செல்லபெயரில்தான் கூப்பிடுவார். அந்த்ரா என்ற பெங்காலிச் சொல்லுக்கு பல்லவி என்று அர்த்தம். என்னை சிறு வயதிலேயே வாய்ப்பாட்டும் வயலினும் கற்றுக்கொள்ள வைத்தார்கள். கலைத்துறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு வயலின் ஏற்படுத்தியது என்று சொல்லலாம்! ஆனால் 2007 -ல் அமெரிக்காவில் நடந்த இந்திய அழகிப் போட்டியில் வென்றதுதான் என்னோட எனக்கு டர்னிங் பாயின்ட். இந்த டைட்டிலை வென்ற பிறகு விளம்பரப் படங்களில் நடிக்க வரிசையாக வாய்ப்புகள் வந்தன. குறிப்பாக வாடிகா ஹேர் ஆயில், பீட்டர் இங்லாண்ட் விளம்பரங்களைப் பார்த்தே தெலுங்குப் படத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு வந்தது. டோலிவுட்டின் முக்கியமான சினிமா தாயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து அறிமுகமான ராணா டக்குபாயுடன் லீடர் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு என்னை தென்னிந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்தப் படத்துகாக 800 புதுமுகங்களுக்கு ஆடிஷன் செய்து இறுதியில் நான் தேர்வானதை பெருமையாக நினைக்கிறேன். அதன்பிறகு மிரபகே. மூன்றாவதாக பி.வாசு சாரின் நாகவள்ளி என்று தெலுங்கில் பிஸியானபோதுதான் மயக்கம் என்ன படத்துக்கு செல்வராகவன் அழைத்தார். நான் இயக்கும் தெலுங்குப் படத்தில், ராணாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க முடியுமா என்று கேட்டார் செல்வராகவன். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் டிராப்பாகி விட்டது. அந்தப் படத்துக்கான கால்ஷீட்டைதான் மயக்கம் என்ன படத்திற்கு கொடுத்தேன். என எதையும் மறைக்காதவர் போல பந்தா எதுவும் இல்லாமல் மஞ்சள் சேலையில் சிரித்தபடி பேசினார் ரிச்சா. ஆனால் ஒரு விஷயத்தை மறைத்து விட்டார்� அதையே நாம் கேள்வியாக வைத்தோம். உண்மையில் கமல் தற்போது இயக்கி வரும் விஸ்வரூபம் படத்துக்குத்தான் நீங்கள் முதல் தேர்வு செய்யப்பட்டீர்கள் என்று செய்திகள் வெளியானதே?விஸ்வரூபத்தில் எனது கேரக்டர் என்ன என்பதை செல்வராகவன் சொன்னார். அவர்தான் என்னை கமல் சாரிடம் அறிமுகப்படுத்தவும் செய்தார். கமலுடன் நடிப்பதை எபோதுமே லைப் டைம் ஆஃபராக நினைப்பேன். அனால் விஸ்வரூபம் கேரக்டரில் நடித்தால் எனது சினிமா கேரியர் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று உள்மனம் சொன்னது. அதனால் நேர்மையாக எனது எண்ணத்தை சொல்லி விட்டேன். இது தொடக்க கட்டத்திலேயே நடந்தது. இதில் மறைக்க எதுவுமில்லை! மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய இரண்டு படங்களிலும் இவ்வளவு திறமையான நடிப்பை வெளிகாட்டியிருக்கிறீர்களே ! இத்தனை நடிப்புத்திறன் எப்படி? கல்லூரியில் மூன்றான்றுகள் தொடர்ந்து இங்லீஷ் தியேட்டரில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அதன்பிறகு அமெரிக்காவில் இருந்து வாய்ப்புகள் தேடி மும்பை வந்ததும், பாலிவுட்டின் அற்புதமான நடிகர்களில் ஒருவரான அனுபம் கெர் நடத்தி வரும் ஆக்டர்ஸ் பிரிபேர் நடிப்புப் பயிற்சியில் பங்குபெற்றேன். அது நல்ல அனுபவமாக அமைந்தது. ஆனால் இந்த பயிற்சியை விட, தற்போது நான் அதிகம் நம்புவது, நடிப்பை நம்மிடமிருந்து வெளியே எடுக்கும் இயக்குனர்களின் திறமையை! செல்வராகவன் ஒரு காட்சிக்கு கூட நடித்துக் காட்ட வில்லை. காட்சியின் மூடை உருவாக்கி, நம்மிடமிருந்து நடிப்பை எடுத்து விடுவதில் திறமையான இயக்குனர். மயக்கம் என்ன படத்தில் எனக்கு கிடைத்திருக்கும் எல்லா பாராட்டுகளுக்கும் செல்வராகவன்தான் காரணம். அதேபோல ஒஸ்தி ஒரு கமர்ஷியல் படம் என்பதால் அதில் அழகாக என்னை காட்டிக்கொள்வதில் ஈடுபாடு காட்டினேன். அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ்! குஷ்பூ, மீனா, சிம்ரன் வரிசையில் ரிச்சாவுக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கிறது. தமிழ் சினிமாவால் அவரைத் தவிர்க்க முடியாது என்று செல்வராகவன் உங்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தார். ஆனால் மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு உங்களுக்கு வாய்ப்புகள் வந்ததாக தெரியவில்லையே? வாய்ப்புகள் வரவில்லை என்று யார் சொன்னது?! இதுவரை சுமார் 25 கதைகள் கேட்டிருகிறேன். எல்லாமே என்னை கிளாமர் ஹீரோயினாக டைப் காஸ்ட் செய்யத் துடிப்பவை. அதனால் தவிர்த்து விட்டேன். என்றாலும் கிளாமரோடு எனது நடிப்புத் திறமைக்கும் தீனி போடும் இரண்டு வாய்ப்புகளை தமிழில் தேர்வு செய்திருகிறேன். அவை இரண்டுமே இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப் படலாம். அதற்கு முன்பு தற்போது என தாய் மொழியான பெங்காளியில் ஒரு படம் ஒப்புகொண்டிருகிறேன். இது விக்ரமார்குடு தெலுங்குப் படத்தின் பெங்காளி ரீமேக். இது தவிர வராதி என்ற தெலுங்குப் படத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும். இதில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறேன். இந்த இரண்டு படங்களும் முடியவே ஆகஸ்ட் ஆகிவிடும். கிளாமர் கதாபாத்திரங்கள்தான் உங்களுக்கு பொருந்தும் என்று நினைக்கிறீகளா? நிச்சயமாக இல்லை. எனக்கு நீச்சல் உடையோ பிகினியோ சரியாக வராது. ஆனால் இன்று இந்திய சினிமாவில் முத்தக் காட்சிகள் சர்வசாதரணமாகிவிட்டன. கதைக்கு மிக மிக அவசியம் என்றால் முத்தக் காட்சியில் நடிக்கத் தயார். ஆனால் பிகினிக்கு நோ! சுசி.கணேசன் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கும் திருட்டுப் பயலே இந்திப் படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு விலகினீர்களாமே? தவறு என்னுடையது அல்ல. படத்தை சப்டைட்டிலுடன் எனக்கு டி போட்டுக் காட்டினார் இயக்குனர். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தெலுங்கில் தற்போது நடித்து வரும் வராதி படத்துக்கு கொடுத்த தேதிகள், அவர்கள் கேட்கும் கால்ஷீட்டுடன் கிளாஷ் ஆகிறது. ஆனால் தெலுங்குப் படத்தை முடித்து விட்டு வரும் வரை காத்திருக்க முடியாது என்றார்கள். கால்ஷீட் பிரச்சனை மட்டும் வந்துவிடகூடாது என்று நினைப்பவள் நான். அவர்கள் வேண்டாம். என்று சொன்ன பிறகே பெங்காளிப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன். என் மீது எந்தத் தவறும் இல்லை. மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்கும் திட்டமிருகிறதா? தெரிந்துதான் கேட்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. 2013-ல் மீண்டும் செல்வா படத்தில் நடிக்கும் திட்டமிருகிறது. அவர் சொன்ன கதை என் கனவுகளில் வந்து கொண்டிருகிறது. தமிழின் மிக பிரமாண்டமான ஃபேண்டஸிப் படமாக அது இருக்கும்!

நான் அமைதியா இருந்தா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் !

சினிமாவில் நான் தொடர்ந்து நடிப்பேன். அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். அதற்காகத்தான் இத்தனை நாள் இடைவெளி, என்று கூறினார் வடிவேலு. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வடிவேலு பிரச்சாரம் செய்தபோது, விதிமுறை மீறல் நடந்ததாக தேர்தல் ஆணையம் வடிவேலு மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் நேற்று நத்தம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் வடிவேலு. விசாரணை முடிந்து, வெளியில் வந்த நடிகர் வடிவேலு நிருபர்களிடம் பேசுகையில், "நானாகத்தான் சினிமாவுக்கு ஒரு இடைவெளி கொடுத்துள்ளேன். தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன். புதிய படத்தில் ஒன்றில் நான் கதாநாயகனாக நடிக்க உள்ளேன். அதற்காக நல்ல கதை கிடைத்து உள்ளது. தொடர்ந்து நான் மக்களை சிரிக்க வைக்க வருவேன். அரசியல் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை," நான் அமைதியா இருந்தா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்றார். அதிமுகவில் சேரப்போகிறீர்களாமே என்று ஒருவர் கேட்டபோது, வெளியில் ஆயிரம் பேசிக்கிருவாங்க... அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டிருக்க முடியுமாண்ணே, என்று கேட்டுவிட்டு கிளம்பினார் வடிவேலு. வடிவேலுவை பார்க்க ஏராளமான மக்கள் நீதிமன்றம் முன்பு திரண்டுவிட்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகை குஷ்பு மீதும் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சில தினங்களுக்கு முன்புதான் குஷ்பு இந்த நீதிமன்றத்துக்கு வந்து போனார்.

பெண்களின் தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதிகளை அழகாக்க!

பெண்களுக்கு அதிகப்படியாக கொழுப்பு சேரும் இடம், தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதி தான்! `குழி விழுந்த', `மேடு பள்ளமான' தோற்றத்தை தரும். இந்த கொழுப்புக்கு பெயர் தான் செலுலைட். எதனால் செலுலைட் உருவாகிறது? எண்ணையில் பொரித்த உணவு, மது, கஃபைன் ( காபியில் உள்ளது) சர்க்கரை ஆகியவை செலுலைட் உருவாக முக்கிய காரணம். அத்தோடு, ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவது, பரம்பரையாக வருவது, உடற்பயிற்சி அதிகம் இல்லாதது, இவற்றாலும் செலுலைட் உருவாகிறது. செலுலைட்டை ஒழிப்பது எப்படி? செலுலைட்டை ஒழிக்க இரண்டு வழிகள் உண்டு. 1. இயற்கை வழி: உடற்பயிற்சி வருவதற்கு முன் காப்பது நல்லது, என்பதை மறந்து விடாதீர்கள். கொழுப்புச் சத்து உள்ள உணவை சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்தால் பயனில்லை. உடற்பயிற்சியால் தற்போது இருக்கும் செலுலைட்டை தான் குறைக்க முடியும். உணவு கட்டுப்பாட்டால் தான் செலுலைட் உருவாகுவதை தடுக்கலாம். எடை குறைக்க பத்து நாள் பட்டினி கிடந்தால் பயனில்லை. இந்த வகையான டயடிங் உங்கள் தசைகளை குறைத்து உங்களை பலவீனமாக்கும். கொழுப்பு அப்படியே தங்கிவிடும். வறுத்த, பொரித்த உணவுப் பொருட்கள், நெய், அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடுவது குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது 1/2 மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தால் தான் பயனளிக்கும் தண்ணீர் குடிப்பது குறைந்தாலும் செலுலைட் உருவாகும். அதனால் தினமும் 10௧2 டம்ப்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. பிரஷ்:- நம் முன்னோர்கள் தேங்காய் நாறால் உடலை தேய்த்து குளிப்பது வழக்கம். இது எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் நாறை, உடலை தேய்க்கும் பிரஷ் போல் உபயோகிக்கவும். பிளாஸ்டிக் பிரஷை விட இது பன்மடங்கு சிறந்தது. செயற்கை முறை:- லைபோcஅக்சன் :- இந்த முறையில் ஒரு சின்ன டியூப்பை கொழுப்பு இருக்கும் இடத்தில் விட்டு, கொழுப்பு உறிஞ்சப்படுகிறது. இதனால் கொழுப்பு குறைந்தாலும் வளவளப்பான தோற்றத்தை அந்த இடம் இழந்து விடுகின்றது. அது மட்டுமல்லாமல் இதில் அதிகமாக வலி ஏற்படும். ஒரு மாதம் வரை தழும்புகள் நீடிக்கும். சுவையான குறிப்பு:- இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகின்றது. ஆனால் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்க வேண்டாம்! ஆண்களைப் போல் நமக்கு வழுக்கை ஏற்படுவது இல்லையே என்று நினைத்து சந்தோஷப் படி வேண்டியது தான்!

இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! (அதிர்ச்சிக் காணொளி இணைப்பு)

இந்தியன் ஆமி அமைதிப்படை என்ற பெயரில் ஈழமண்ணில் வந்து செய்த அட்டகாசங்கள் உலகறியும். கொலைகள், கற்பழிப்புக்கள், சித்திரவதைகள் என்று இலங்கை ஆமியை மிஞ்சிய செயற்பாடுகளாக ஒருகாலத்தில் அவை இருந்தன. அப்படியான காட்டுமிராண்டித்தனமான இந்தியன் ஆமி செய்யும் சித்திரவதைகள் அடங்கிய அதிர்சிக்காணொளி ஒன்று இன்றைய தினம் வெளியாகியுள்ளது. ஆண் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து உதைக்கும் காட்சிகளே இவை... இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்சிகள் கிராமவாசி ஒருவரால் தான் எடுக்கப்பட்டுள்ளது. கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டார். குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 இராணுவத்தினர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 16 ஆம் திகதியே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியன் ஆமியின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆசிய மனித உரிமை ஆணையம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. குறித்த காட்சிகள் அடங்கிய Youtube வீடியோவுக்குக் கீழ் வாசகர் ஒருவர் எழுதிய கருத்து அனைவரையும் யோசிக்க வைப்பதாக உள்ளது. அந்தக் கருத்து அப்படியே வாசகர்களுக்காக, "பாரத தேசத்து தமிழ் நாட்டு மக்களிற்கு... முதலில் உங்களை சுற்றியும் சுத்தம் செய்யவும்... அதன் பிறகு அண்டைய நாட்டிற்காக கருப்பு கொடி பிடிப்பதும், நடிகர் நடிகைகளுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பதும், தீ குளிப்பதும் சிறந்தது."

Thursday, January 19, 2012

பரவ வயதின் பின் ஆணும் பெண்ணும் தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டும்!

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது. இயற்கையை வென்றது யார் தான்...?அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும் .உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்.

பெண்களின் காம உணர்வுகளை அதிகரிக்கும் தியானம்!

தியானம் செய்வது பெண்களின் காம உணர்வுகளை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ப்ரௌவ்ன் பல்கலைக்கழகம் ஒன்று 44 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது அந்த ஆய்வில் பங்கேற்ற 44 மாணவர்களில் 30 பேர் பெண்கள். 12 வாரங்களுக்கு தியானம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது அமைதி, உற்சாகமான, பாலுணர்வை தூண்டும் படங்களை காண்பிக்கப்பட்டது. அப்போது தியானப்பயிற்சி செய்த பெண்கள், ஏராளமானோர் எளிதில் உணர்ச்சி வசப்பட்டனர். மேலும் தியானம் பயிற்சி செய்த பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே தியானம் மேற்கொள்ளும் பெண்களின் கவனச்சிதறல் ஏற்படாமல் இருந்ததும் தெரியவந்ததாக டெய்லி மெயில் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு உளவியல் பற்றிய தகவல்களை வெளியிடும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, January 18, 2012

லண்டனில் பிரபாகரன்! பிரான்ஸில் புலிக்கொடி! புலம்பெயர் தமிழர்களின் தபால்தலை போராட்டம்! ஜூனியர் விகடன்

விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்... சுதந்திரத் தமிழீழப் போராட்டம் முடிந்தேபோனது என்று சிங்களவர்கள் கொக்கரித்தாலும்... புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.நா. வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழீழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், “ஐ ஹேவ் ட்ரீம்” என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். திருகோணமலையில் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு அமெரிக்காவில் தபால் தலை வெளியானது. கனடாவில், “தமிழ் இனப் படுகொலை” என்ற குறியீட்டுடன் தபால் தலை வெளியானது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பிரபாகரனின் தபால் தலையை வெளியிட்டு, மீண்டும் இலங்கைக்குக் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். 'எப்படி இது சாத்தியமானது?என்று, இங்கிலாந்தில் தபால் தலையைக் கொண்டு வந்த பரமேஸ்வரனிடம் பேசினோம். இவர், 2009-ம் ஆண்டு ஈழப்போரின்போது லண்டனில் உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டத்தின் வளர்ந்த பல நாடுகளில், அந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில், அவர்களுக்கு விருப்பமான தபால்தலையை வெளியிட அனுமதி உள்ளது. அந்த விதிமுறைகளின்படியே நான், எங்களது தேசியத் தலைவர் பிரபாகரனின் தபால் தலையை வெளியிட முயற்சி எடுத்தேன். இதற்காக முதலில் றோயல் மெயில் என்ற இங்கிலாந்து தபால் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். நமது கோரிக்கையை அவர்கள் நியாயமானது என்று கருதி ஏற்றுக்கொண்டால் மட்டுமே தபால்தலை வெளியிட அனுமதி கொடுப்பார்கள். பிரபாகரனின் தபால்தலை வெளியிட நான் விடுத்த விண்ணப்பத்தை றோயல் மெயில் ஏற்றுக்கொண்டு, முதல்தரத் தபால்தலையாக வெளியிட்டது. இந்தத் தபால்தலையை உபயோகித்து, அனைத்து வெளிநாடுகளுக்கும் தபால் அனுப்ப முடியும். இது எங்களுடைய தமிழ் மக்களின் வெற்றி... எங்கள் நாடு விடுதலை அடையும் வரை எங்கள் போராட்டம் பல்வேறு வகைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கும்'' என்றார் நம்பிக்கையோடு. பிரபாகரன் தபால்தலை வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு, தமிழீழக் கொடி, தமிழீழ தேசிய மலர் என்று 11 தமிழீழச் சின்னங்களை தாங்கிய தபால் தலைகள் பிரான்ஸில் வெளியாகி இருக்கின்றன. “முள்ளிவாய்க்காலும் முத்துக்குமாரும் முடிவல்ல...” என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வார்த்தைகள் நிஜமாகி வருகிறது! ஜூனியர் விகடன்

Tuesday, January 17, 2012

‘கொல வெறியை’ காட்சிப்படுத்த ரூ. 2 கோடி

உலக மெங்கும் புகழ்பெற்ற கொலைவெறி பாடலை 2 கோடி ரூபாய் செலவு செய்து காட்சிப்படுத்தியுள்ளனர். பாடல் செய்த சாதனை படத்தில் தெரியுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கும் படம் ’3′. ஐஸ்வர்யா தனுஷ் முதன் முறையாக இயக்கி இருக்கும் படம் இது. அனிருத் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘ஒய் திஸ் கொலவெறி ‘ பாடல் மூலமாக தான் 3 படத்திற்கு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ‘கொலவெறி’ பாடலுக்கு கிடைத்த எதிர்ப்பார்ப்பால் இப்பாடலை எப்படி காட்சிப்படுத்துவது என்பதை ஆலோசித்து வந்தார்கள் ’3′ படக்குழுவினர். இந்நிலையில் இப்பாடலை காட்சிப்படுத்துவதற்கு படத்தின் ஸ்பான்ஸர்கள் ’3′ படத்தின் தயாரிப்பு தரப்புக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்களாம்.

ராஜிவ் காந்தியிடம் இலஞ்சம் வாங்கிய பிரபா!

இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் பெரும் தொகை இலட்ச ரூபாவை இலஞ்சமாக பெற்று இருக்கின்றார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு பிரபாகரனை இணங்க வைக்கின்றமைக்கு ராஜிவ் இற்கு வேறு வழி தெரிந்து இருக்கவில்லை. மாதாந்தம் ஐந்து மில்லியன் இந்திய ரூபாய் வழங்கப்படும் என்று இணக்கம் காணப்பட்டு இருக்கின்றது. ஜூலை மாத இறுதியில் ஒரு தொகைப் பணம் கையளிக்கப்பட்டும் இருக்கின்றது. இந்திய தூதுவராக இருந்த டி.என். டிக்ஸிற், புலிகளின் சென்னைப் பேச்சாளர் ஆகியோரை மேற்கோள் காட்டி அந்நாட்களில் இத்தகவல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்து இருந்தது. மேற்சொன்ன விடயங்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு இரகசிய அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டும் உள்ளது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. தமிழ் - முஸ்லிம் மக்களின் இணைந்து தாயகப் பிரதேசமாக வடக்கு - கிழக்கு ஏற்று, தமிழை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளூடாக அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்த இவ்வொப்பந்தம் ஏற்பாடு செய்தது.

கான்போன் கலாசாரத்தால் கர்ப்பவதியாகும் யாழ்ப்பாணத்துக் குமாரிகள்!

யாழ்.மாவட்டத்தில் இளவயதில் கர்ப்பவதியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமானதாக அமைவது கையடக்கத் தொலைபேசியின் பாவனை அதிகரிப்பாகவே இருக்கின்றது. சாதாரணமாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள அத்தனை உறுப்பினர்களும் தமக்கென தனித்தனித் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை இந்த கான்போன் போதைக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகின்றனர். இதனை விட பாடசாலை செல்லும் மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை கான் பைக்குள் கான்போன் இல்லாமல் வெளியில் சென்றதில்லை. அந்தளவுக்கு அதன் புழக்கம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கின்றது. இதனால்தான் இளவயதுக் கர்ப்பம் அதிகரித்த மாவட்டமாக யாழ்.மாவட்டம் தேர்த்தெடுக்கப்பட்டுள்ளது. நவீன மயமாதல் என்ற கொள்கைக்குள் சிக்கி அதனை துஸ்பிரயோகம் செய்கின்றனர் யாழ்ப்பாணத்து இளம் பெண்கள். தொலைபேசியில் அழைப்பவர் எவராக இருந்தாலும் நெருங்கிய பழக்கம் கொண்டவர்களுடன் உரையாடுவதுபோல் உரையாடுவது, பின் அவர்களை பிறிதொரு இடத்தில் சந்திப்பது எனத் தொடர்கின்றது இவர்களின் கான்போன் சிநேகிதம். பிற்பாடு குழந்தையே குழந்தை பெற்றது என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரும். இதுதான் எங்களுடைய கலாசாரமாக மாறிவிட்டது. அடிக்கடி யாழ்ப்பாணத்துக் கலாசாரத்தையும், பெண்களையும் செய்தியாக எழுதி எழுதிக் கேவலப்படுத்துகின்றோம் என கலாசாரத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் சிலர் எழுதி வருகின்றனர். இருந்தும் எமது கலாசாரத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடவில்லை. எனவே பெற்றோர்களாகிய நீங்கள், பிள்ளைகளின் வயதை அறிந்து, உங்கள் குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தொலைபேசியைக் கொள்வனவு செய்து கொடுங்கள். இல்லையேல் நிலைமை படுமோசமாகிவிடும். நீங்கள் தூக்கிக் கொண்டு செல்லும் உங்கள் குழந்தை தான்னுடைய குழந்தையைத் தூக்கிக் கொண்டு போகும் நிலைமை உருவாகி விடும். இத்தனையும் தடுக்கும் வல்லமை கொண்டவர்கள் பெற்றோர்கள். எனவே உங்களின் பிள்ளைகள் தொடர்பில் நீங்கள் நன்கு அறிந்திருங்கள், செயற்படுங்கள்.

புலிகள் அமெரிக்காவை தாக்க இருந்தனரா? கலைந்தது மர்மம், கண்டுபிடிக்கப்பட்டது உண்மை!

அமெரிக்காவுக்கு தாக்குதல் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட பெண் தற்கொலைப் போராளி என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்ட துஸியந்தினி கனகசபாபதிப்பிள்ளை உண்மையில் ஒரு ஊடகவியலாளர் ஆவார். இவர் பி.பி.சியின் ஊழியர். பி.பி.சியின் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹரிசனின் உதவியாளர். அமெரிக்க தூதரகம் தொடர் புலனாய்வு விசாரணைகளின் பின் இத்தகவல்களை கண்டு பிடித்துக் கொண்டது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த துஷியந்தினி கனகாபாபதிப்பிள்ளை புலிகளால் அனுப்பப்பட்டு இருக்கின்றார் என்று தூதரகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்த அன்ரன் மோசஸ் என்பவரை நேரில் சென்று தூதரக அதிகாரிகள் விசாரித்து இருக்கின்றனர். அக்கடிதத்தை அவர் அனுப்பி இருக்கவில்லை என்று அன்ரன் சாதித்து இருந்தார். ஆனால் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த விடயங்கள் எல்லாம் அவருக்கு தெரிந்து இருந்தன. துஷியுடனான காதல் தோல்வி அடைந்த நிலையில் இதயம் உடைந்து போய் இருக்கின்றார் என்று தெரிவித்து இருக்கின்றார். காதல் நிறைவேறாமையால் ஏற்பட்ட கவலை, வெறுப்பு, பொறாமை ஆகியவற்றால் அன்ரன் இக்கடிதத்தை எழுதியிருக்கின்றார், கடிதத்தில் சொல்லப்பட்டு இருந்த விடயங்கள் பெரும்பாலும் பொய் என்று தூதரக அதிகாரிகளுக்கு தென்பட்டது. பி.பி.சியின் ஹரிசனுடன் தொடர்பு கொண்டு கேட்டிருக்கின்றனர். துஸி பி.பி.சியைச் சேர்ந்தவர்தான் என்றும் கலிபோர்னியாவில் அமெரிக்க புலனாய்வாளர்களால் விசாரிக்கப்பட்டார் என்றும் அன்ரன் என்பவர் நீண்ட காலமாக துஸிக்கு இவ்வாறான துன்பங்களை கொடுத்து வருகின்றார் என்று ஹரிசன் கூறி இருக்கின்றார். துஸிக்கும் புலிகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்று இலங்கைப் புலனாய்வாளர்களிடம் தூதரகம் வினவியும் இருக்கின்றது. கடைசியாக அன்ரனால் அனுப்பப்பட்ட கடிதம் பொய்யான தகவல்களை கொண்டது என்கிற முடிவுக்கு வந்தது. இவ்விபரங்கள் இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்துஅமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு இருந்தன. தற்போது விக்கிலீக்ஸ் மூலம் இவ்விடயங்கள் பகிரங்கமாகி விட்டன.