Tuesday, December 20, 2011

இப்ப கொலைகாரன் இனி கொள்ளைக்காரன் எண்டு பேச்சு வரும்! அதையும் நம்பும் இந்த சனங்கள்!

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி அரிமா சங்க மாநாட்டில் கலந்து கொண்ட வைகைப்புயல் வடிவேலு தன்னைப் பற்றி தினமும் ஒரு செய்தி வந்து கொண்டிருப்பது குறித்து தான் பேசியபோது கூறினார்.

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இன்று நடந்த அரிமா சங்க மண்டல மாநாட்டில் வடிவேலு பேசியதாவது:

சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதற்கு வாய்ப்பு இல்லாமலோ அல்லது யாருடைய கட்டாயத்தின்பேரிலோ அல்ல. அது காலத்தின் கட்டாயம். இது நானாக எடுத்த முடிவு. எல்லோரையும் சிரிக்க வைக்கும் எனக்கும் சில பிரச்னைகள் உள்ளன.

பிரச்னைகளை வைத்துக் கொண்டு சினிமாவில் நடித்தால் அதை முகம் காட்டிக் கொடுத்துவிடும். எனவேதான் ஒதுங்கி இருக்கிறேன். ஆனாலும் என்னைப் பற்றி தினம் ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நான் கொலைசெய்துவிட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. இன்னும் கொஞ்ச நாளில் கொள்ளைக்காரன் என்றும் செய்தி வரும். என்று வடிவேலு பேசினார்.

No comments:

Post a Comment