Thursday, December 22, 2011
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா
தமிழ் திரையுலகில் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் மங்காத்தா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகன் சூர்யா நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கீரின் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதுகுறித்து வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது, எனது அடுத்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு புதுவித சந்தோஷத்தை தரும். சூர்யாவிடம் ஒரு கதை கூறினேன். அவருக்கு அக்கதை பிடித்து இருந்தது.
தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன். இதுவரை வெளிவந்த பாலிவுட் திரைப்படங்கள் அனைத்துமே சாதாரண காணொளி கருவியில் எடுத்துவிட்டு அதனை முப்பரிமாணம்(3D) வடிவத்திற்கு மாற்றுவார்கள்.
ஆனால் எனது படத்தினை இயக்கும் போதே அதனை முப்பரிமாண காணொளி கருவியில் படம்பிடிக்க இருக்கிறோம். இதற்காக வெளிநாட்டில் இருந்து பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.
என்னுடைய முந்தைய படங்களை போலவே யுவன் இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். வேறு யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. எதிர்வருகிற 2012ல் இதற்கான முறையான அறிவுப்பு வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment