Wednesday, November 30, 2011

கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!


செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கசம் எனப்படும் உச்சநிலையை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இது மன நிலை சம்பந்தப்பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரமமான காரியம் இல்லை.அப்படியும் முடியாவிட்டால் மருத்துவ, தெரபி முறைகள் கைவசம் நிறையவே உள்ளன.

தற்போது ஆர்கசம் அடைவதில் ஏற்படும் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். கவனச் சிதறல்தான் ஆர்கசத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.

மேலும் செக்ஸ் உறவு குறித்த எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டிருக்கும்போதும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதில்லையாம்.

'என்னத்த' என்ற எண்ணத்துடன் செக்ஸ் உறவில் நுழைந்தால் நிச்சயம் ஆர்கசத்தை அடைவது சிரமம் என்கிறது இந்த ஆய்வு. இப்படிப்பட்ட எதிர்மறை சிந்தனைகள், கவனச் சிதறல்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கவனச் சிதறல் இல்லாமல், மனம் ஒருமுகப்பட்டு, செக்ஸ் உணர்வை அனுபவித்து, லயித்து ஈடுபடும் பெண்களுக்கு ஆர்கசம் மிக எளிதாக ஏற்படுகிறதாம்.

நான்கு பெண்களில் ஒருவருக்கு மாதம் ஒருமுறையாவது ஆர்கசத்தை எட்டுவதில் சிரமம் ஏற்படுகிறதாம். செக்ஸில் நாட்டமின்மை பிரச்சினைக்கு அடுத்து பெண்கள் அதிகம் சந்திக்கும் 2வது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை இந்த ஆர்கசத்தை அடைவதில் சந்திக்கும் சிக்கல் என்கிறார்கள் செக்ஸ் மருத்துவ நிபுணர்கள்.

இந்த ஆய்வுக்காக செக்ஸ் உறவில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயது வரையிலான 191 பெண்களை உட்படுத்தினர். செக்ஸின்போது அவர்கள் ஆர்கசத்தை அடைந்தது குறித்தும், அப்போது எந்த சிந்தனையில் இருந்தனர் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

செக்ஸ் மோசமான ஒன்று என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும், செக்ஸ் உறவின்போது ஆர்கசம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான செக்ஸ் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

Tuesday, November 29, 2011

புலிகள் தலைவரின் புகைப்படத்துடன் மட்டக்களப்பில் மாணவன் கைது!


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தைத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் மாணவர் ஒருவரைப் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர்.

மட்டக்களப்பு அரசடித்தீவைச் சேர்ந்த குறித்த மாணவன் இவ்வாண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதியவராவார்.

நேற்று மாலை மட்டக்களப்புக் காத்தான்குடிப் பகுதிக்கு சென்ற வேளையில் குறித்த மாணவனைக் கைது செய்த பொலிஸார், இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஐர்செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லட்சுமி ராயை இனிவருங்காலங்களில் பிறந்த மேனியாகவும் பார்க்கலாம் (முன்பதிவுக்கு முந்துங்கள்)


நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

Sunday, November 27, 2011

இந்திய மண்ணே உண் துரோகத்தால் அழிந்த ஈழத்தை,மாவீரர் நாள் கார்த்திகை 27





அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் அழகாக தோற்றமளிப்பர்: ஆய்வில் தகவல்

தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர்.

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது.

அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களை விட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரியவந்தது.

அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் அழகாக தோற்றமளித்தது. மேலும் வார இறுதியில் 2 பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறாக சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.

Saturday, November 26, 2011

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் ரிவியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ


ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் ரிவியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன.

நியூசிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

தரையிலிருந்து 25 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயம் மின்சாரக் கேபிள்களில் அதன் சுழலும் சக்கரங்கள் மாட்டிக் கொண்டதால் தான் மேற்படி விபத்து நடந்துள்ளது.

இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே


இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்கள் செக்ஸை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

பழங்காலத்தில் இந்தியப்பெண்கள் நிலம் நோக்கி நடப்பவர்களாகவும், கணவனைத் தவிர பிற ஆடவர்களின் முகம் பார்க்காதவர்களாகவும் இருந்தனர்.

அடுப்பங்கரையும், வீடுமே அவர்களுக்கு உலகம் என்று இருந்தது. பாலியல் குறித்து பேசுவது கூட பாபம் என்று நினைத்திருந்தனர்.

ஆனால் இன்றைய இந்திய பெண்களோ தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். எங்கேயும், எப்போதும் தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள்.

அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும், பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கம்ப்யூட்டரே கண்கண்ட தெய்வம்! ஆனால் இங்கிலாந்துப் பெண்கள் இதற்கு தலைகீழாக மாறிவிட்டனர். கணவனுடன் உறவில் ஈடுபடுவதை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதையே விரும்புவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

கம்யூட்டர் விளையாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ருசிகர தகவல் தெரியவந்துள்ளது. தங்கள் துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விட விடிய விடிய கம்ப்யூட்டரில் கேம் விளையாடவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள்.

செக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவருக்கு அது சரியான நீளமாம்!! (பட, காணொளி இணைப்பு)


பிரித்தானியாவிலேயே இவருக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறதாம். ஆம், இவரின் பாதம் தான் பிரித்தானியாவிலேயே மிக நீளமானதாம். இவரின் பாதத்தின் நீளம் 21 என்ற அளவில் இருக்கிறது.

பிரித்தானியாவில் சாதாரண மனிதனின் சராசரி பாத நீளம் 9 . இவருக்கு காலனி வாங்குவது மிகக் கடினமானது. இவர் அதற்காக 50 ஸ்டேர்லிங் பவுன்களைச் செலவளிக்கிறாராம்.

இவரின் பெயர் Carl Griffiths . 19 வயது தான் ஆகின்றது. இவர் பெண்கள் மத்தியில் அதிக பிரபல்யமாம்.

தான் 20 பெண்களுடன் ஒன்றாக இருந்ததாக மனம் திறந்த வாக்கு மூலமும் கொடுத்துள்ளார் இந்த பிரித்தானியர்.

‘ராஜீவ் காந்தி ஒரு துரோகி’ - தயாரிப்பாளர் புகழேந்தி


இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக சர்வதேசத்திற்கு பொய் கூறிவரும் சிங்கள தலைவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கான கருவியே உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் என்கிறார் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி மேலும் தெரிவிக்கையில்,

புனிதவதி என்ற அந்தச் சிறுமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரிகளின் அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், இந்தியாவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்,

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த வேளையில் பிரபாகரனிடமிருந்து ஆயதங்களை வாங்கிவிட்டு பிரபாகரனையும் தமிழர்களையும் கொல்வதற்கு எதிரிகளுக்கு ஆயுதங்களை கொடுக்கவில்லையா? என கேள்வியெழுப்பியுள்ளார்

“நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம் என்ற கேள்விக்கே இடமில்லை. எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் முழுப்பாதுகாப்பை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” என்று மிகவும் தெளிவாக ஒரு குழந்தைக்கு புரிகிற மொழியில் பிரபாகரன் பேசியதாக உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கூறிய பிரபாகரனை முதுகில் குத்தி ரஜீவ்காந்தி துரோகம் செய்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்ட போது, தமிழ்மக்களை இந்தியா போய் காப்பாற்றியதா? தாக்குதல்களைத்தான் நிறுத்தினார்களா? அவர்களது நோக்கம் என்னவாக இருந்தது?

பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைத்து 20ஆவது நாள் பிரபாகரனை தீர்த்துக் கட்ட எதிரிகளுக்கு சொல்லியது யார்?

இந்தத்துரோகத்திற்கு யார் பதில் சொல்வது? இந்த துரோகத்திற்கு யார் பின்னணியில் இருந்தது. எல்லாம் ராஜீவ் காந்தியின் வழிகாட்டலிலே என தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் புகழேந்தி.

இலங்கையின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கொல்லப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்தார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Wednesday, November 23, 2011

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு


சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.

பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இதற்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட கணக்கை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.

பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அந்த விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.

அந்த விண்டோவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).

மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.

அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.

உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச்சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச்சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.

அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.

இப்பொழுது புதிய கடவுச்சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.

மாவீரர் தினத்தை குழப்பும் ‘கணக்கு மா அதிபர்கள்’!- ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்


‘காகத்திற்கு கனவிலும் ஏதோ நினைவு’ என்பார்கள். சிலர் பிறந்த காலநேரமோ என்னவோ அவர்களுக்கு சர்ச்சை, பிரச்சனை இல்லாவிடில் அவர்களது வாழ்க்கையில் நிம்மதி கிடையாது.

இவர்களுக்கு உலகில் தெரியாத விடயங்கள் ஒன்றும் இல்லை. மேதாவி போல் நடிப்பதும், நாரதர் போல் காண்பிப்பதும் இவர்களது சிறந்த பணி. பாவங்கள், சட்டியில் இருந்தால் தானே ஆகப்பையில் வருவதற்கு.

இப்பொழுது மாவீரர் தினம் நடைபெறும் காலம். இதை காடையரும் மேதாவிபோல் நடிப்பவர்களும் தமக்கு ஏற்ற முறையில் பாவிக்கிறார்கள். இந்த கில்லாடிகளினால் பிரச்சினைகள், சர்ச்சைகள் தினமும் அதிகரிக்கப்பட்டு அதில் இன்பம் அடைகிறார்கள்.

இந்த காடையிருடன் தொடர்பில் உள்ளவர்கள் ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். கானல் நீரான இவர்களிடம், இதுவரையில் நீங்கள் கூறிய விடயங்கள் யாவும், ஏற்கனவே காடையர்களின் நாடாக்களில் பதிவு செய்யப்படப்பட்டுள்ளது. என்று இந்த காடையரை நீங்கள் எட்ட வைக்க எண்ணுகிறார்களோ, அன்று உங்கள் சம்பாஷணையிலிந்து பதிவு செய்யப்பட்ட நாடாக்கள் யாவும் சந்திக்கு வந்து நீங்கள் ‘பிளாக் மெயில்’ செய்யப்படுவீர்கள்.

யாரும் விளக்கம் கொடுக்கவில்லை?

ஏன் இன்னுமொரு மாவீரர் தினம் நடைபெற வேண்டும் என்பதற்கு இன்றுவரை யாரும் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையை கூறுங்கள், இராண்டாவது மாவீரர் தினம் நடத்துவது பற்றி உங்களுக்கு அடிப்படையாக யார் இந்த ஊக்கத்தை, ஆலோசனையை கொடுத்தார்கள்? ஏன் இந்த வீண் வம்பு.

அநாமதேயமாக வெளியாகும் துண்டுகளில், இரண்டாவது மாவீரர் தினத்தை செய்யவுள்ளவர்கள் பற்றி பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே உள்ளன என்பதை யாவரும் அறிவார்கள். இக் குற்றச்சாட்டுகளை இதுவரையில் யார் யார் பெரிதாக எடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் நவம்பர் 27ம் திகதி இரண்டாவது மாவீரர் தினம் உலகில் நடைபெற்றால், இரண்டாவது மாவீரர் செய்பவர்கள் பற்றி நிச்சயம் தமிழீழ மக்கள், விசேடமாக புலம்பெயர் வாழ் மக்கள் ஓர் திடமான முடிவை கொள்வார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

தயவு செய்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில், தவறான பிழையான ஆலோசனைகள், வழிகாட்டல் மூலம் ஈழத் தமிழ் மக்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் எந்த செயலையும் செய்யாதீர்கள்.

கானல் நீரான காடையரை நம்பி, நவம்பர் 27ம் திகதி இரண்டாவது மாவீரர் தினத்தை செய்ய முனையாதீர்கள். இந்த காடையரை பற்றி சில குறிப்புகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கூடுதலான சந்தர்ப்பங்களில் தேசியத் தலைவர், தமிழ் செல்வன், காஸ்ரோ எனப்படும் மணிவண்ணன் போன்ற முக்கிய தளபதிகள் தம்முடன் கலந்தலோசித்து தான் சகல வெளிநாட்டு கிளைகளுடனான செயற்பாடுகளை நடத்தியது போல் கதை விடுகிறார்கள். இந்த பெயர்வழிகள் அம்புலிமாமா, கல்கி போன்ற சஞ்சிகைகளுக்கு நல்ல கற்பனை கதைகள் எழுதி பரிசு பெறக்கூடியவர்கள். என்ன செய்வது, ‘பேய்காட்டப்படுபவன் இருக்கும் வரை பேய்காட்டுகிறவனும் இருப்பான்’ என்பது முதுமொழி.

‘கணக்கு மா அதிபர்கள்’ (Auditor General)

கணக்கே தெரியாத இவர்கள், தண்டிக்கப்பட்ட நாள் - 1990ம் ஆண்டு முதல் தாம் கடற்கரை தாளங்காயாகி விட்டதனால், தங்களை தாங்களே தமிழீழ மக்களின் ‘கணக்கு மா அதிபராக’ (Auditor General) நியமித்து, அன்றிலிருந்து இன்றுவரை தமது உண்மையான பெயரை மறைத்து, பொய்யான பெயருடன் விதண்டாவாதம் கதைப்பது தான் இவர்களது தொழில்.

தமது உண்மையான பெயரை யாரும் அறிந்தால், தம்மை பற்றிய உண்மைகளை அறிந்து விடுவார்கள் என்ற காரணத்திற்காக, பொய் பெயரில் வாழ்பவர்கள் தான் இக் காடையர்கள்.

இதேவேளை இந்த காடையர் கூட்டம் கணக்கு விடயத்தில் நேர்மையானவர்களும் அல்ல. சில உதாரணத்தை இங்கு தருகிறேன்.

1990ன் பிற்பகுதியில் இந்த காடையரும் மேதாவிபோல் நடிப்பவர்களும், ஓர் தமிழ் நாட்டின் பாதிரியாருடன் இணைந்து, ஐரேப்பாவில் ஓர் ஊடகம் மூலமாக சேர்த்த நிதி யாவும் விமானம் நிலையம் ஒன்றில் தொலைந்ததாக கதைவிட்டார்கள். இதற்கு யார் பொறுப்பு? எங்கே இப் பணம்? இதற்கு கணக்கு காட்டப் போவது யார்? இது மக்கள் பணம் இல்லையா?

(2) அடுத்து ஐரோப்பாவில் ஓர் ஊடகம் நடத்துவதற்கு பெருந்தொகையான பணம் தேவை. இப்படியான நிலையில் சாதாரண வேலை பார்ப்பவர்கள், எப்படியாக ஊடகத்தை ஆரம்பித்து நீண்ட காலமாக நடத்த முடியும்?

இதற்கு யார் நிதி வழங்குகிறார்கள்? இதற்கு யார் கணக்கு காட்டப் போகிறார்கள்? பிதற்றாமல் உண்மையை கூறுங்கள்.

தமது ஊடகம் நடத்துவதற்கு கடைத்தெருவில் வியாபாரிகளிடம் விளம்பரப் பிச்சையும் எடுக்கிறார்கள்? இது பொதுமக்கள் பணம் இல்லையா? இதற்கு கணக்கு எங்கே?

இவர்களது ஊடகத்தில் எத்தனை முழுநேர, பகுதிநேர ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்? இவர்கள் யாவரும் காற்றை குடித்து வாழ்கிறார்களா? இல்லை கொடுப்பனவு கொடுக்கிறீர்களா? அப்படியானால் யாரிடமிருந்து உங்களுக்கு பணம் வருகிறது? பொதுமக்களிடம் தண்டல் செய்த பணத்திலிருந்தே இந்த காடையர்களின் ஊடகமும் நடைபெறுகிறது என்பது தான் உண்மை.

மற்றவர்களிடம் கணக்கு கேட்பதற்கு முன்னர், உங்களிடம் உள்ள பொதுமக்களின் பணத்திற்கு முதலில் கணக்கு சொல்லுங்கள்.

காடையரும் மேதாவிபோல் நடிப்பவர்களும் தமது ஊடகத்தை ஆரம்பிப்பதற்கு, தாம் வாழும் நாட்டில் அனுமதி கேட்ட பொழுது, உங்கள் ஊடகம் ‘தமிழீழ விடுதலை புலிகளுக்கு’ பிரச்சார வேலை செய்யப் போகிறதுவென குற்றச் சாட்டப்பட்ட பொழுது, லண்டனில் உள்ள ஓர் நபர் மூலம், தாம் வாழும் நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவராலயத்திலிருந்து ‘தாம் தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் இல்லையென்று’, கடிதம் பெற்று கொடுத்து தான் தமது ஊடகத்திற்கு அனுமதியை பெற்றார்கள்.

ஆகையால் இவர்கள் மாவீரர் தினத்தை குழப்பி சிறிலங்கா அரசிற்கு துணை போவது புதுமையான விடயம் அல்ல.

‘காற்றுக் குடித்து வாழும் கடையர்கள்' தமக்கு பிடிக்காத சகலரும் மக்கள் பணத்தில், கொடுப்பனவில் வாழ்கிறார்கள் என்பது பற்றி கூடுதாலாக அலட்டுவது வழக்கம். காரணம் ‘குற்றம் உள்ள மனம் குறுகுறுக்கும்' என்பது போல், 1989ம் தம்மை முழுநேர உறுப்பினராக்கி தமக்கு கொடுப்பனவு கொடுக்கப்படவில்லை என்பதால், தாம் வாழும் நாட்டில் ஊரையே குழப்பியவர்கள் தான் இவர்கள். ஓர் விடுதலைப் போராட்டத்திற்கு உண்மையில் பிரயோசனமாவர்கள் என்றால், அதுவும் அன்று மனிதவலு குறைந்த நேரத்தில் இவர்கள் துரத்தப்பட்டிருக்க மாட்டார்கள்!

அது மட்டுமல்ல, இந்த காடையரின் உடன்பிறப்புக்கள் தான் மக்கள் பணத்தில், கொடுப்பனவில் பல தசாப்தங்களாக வாழ்ந்தார்கள், திருமணம் செய்தார்கள், பிள்ளைகளும் பெற்றார்கள்.

இவர்களின் உறவினர் தான் தமது சுயநலத்திற்காக, தமக்கு அகதி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, முழுப்பொய்கள் அடங்கிய பத்திரிகை செவ்வி ஒன்றை கொடுத்து தம்மை நிலைபடுத்திக் கொண்டவர்கள்.

இந்த காடையர்களுக்கு துணிச்சலிருந்தால் இவைபற்றி இவர்களது கள்ளுத் தவறணை அலட்டலில், வாசகர்களுக்கு விளக்கம் கொடுப்பார்களா?

ஏற்கனவே தொப்பி அளவானவர்கள் போட்டுள்ளார்கள், இதையும் விரும்பினால் போட்டுக் கொள்ளுங்கள்.

இரண்டாவது மாவீரர் தினத்திற்குள் மறைந்து நின்று, மற்றவர்கள் மீது சக்கைகள் எறிகிறீர்கள். ஆனல் நீங்கள் கண்ணாடி அறையில் இருக்கிறீர்கள் என்பதை மட்டும் மறந்துவீட்டீர்கள்.

உங்கள் ஊடகத்தின் பெயரைச் சொல்லி உங்களுக்கு ஓர் அங்கீகாரம் தரவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? தொடர்ந்து சக்கைகள் எறியுங்கள் கூடிய விரைவில் பொதுமக்கள் அங்கீகாரம் தருவார்கள்.

இக் காடையர்கள், முன்பு ஒரு பத்திரிகையாளருக்கு சில நிபந்தனைகளை முன்வைத்து, ஒரு நாட்டின் காவல்துறையினர் செய்ய எண்ணாத விடயங்களை எல்லாம் செய்தார்கள் என்பதை யாவரும் அறிவோம். உலகில் பித்தலாட்டங்களுக்கு ஒரு பொழுதும் இடமில்லை. தீக் கோழி வாழ்க்கை நீண்ட காலம் நீடியாது.

நான் ஒருபொழுதும் இரட்டைவேடம் போடவேண்டிய அவசியமில்லை!

என்னை பல புதிய பழைய பெயர்வழிகள் சந்தித்து உரையாடுவது வழக்கம். அதற்காக என்னுடன் யாரும் இரண்டு மாவீரர் தினம் தாம் நடத்தவிருப்பதாக கூறியதே இல்லை. ஆனால் புதியவர்கள் பலரிடம், மக்களுக்கு முன் காட்சியளிக்க தயங்கிய பல கடற்கரை தாளங்காய்களுக்கும், விலாசமற்றவர்களுக்கும் நல்ல அங்கீகாரம் கொடுத்திருக்கிறீர்களென்று பல தடவை கூறியுள்ளேன்.

இரண்டாவது மாவீரர் தினத்தை செய்ய தூண்டுவதனால், ஈழத் தழிழரின் மானம் காற்றில் பறக்கப் போகிறது என்பதை அறிவதற்கு காடையர்களிற்கு அறிவு போதுமா?.

முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த உயிர்கள், பொருளாதாரத்தை விட மேலாக நாம் ஒன்றையும் ஒற்றுமையின் அடிப்படையில் இழக்க மாட்டோம். மண்டபத்திற்கு பணம் செலுத்தியதற்காகவும், பூ மாலைகள் பூக்களுக்கு பணம் கொடுத்தற்காக கட்டாயம் இரண்டாவது மாவீரர் தினம் நடைபெற வேண்டுமென்றால் இது அர்த்தமற்ற கதை.

சிங்கள தேசம் வெற்றிக் களிப்பில் மிதக்கப் போகிறது. தயவு செய்து கிணற்றுத் தவளை போல் சிந்தியாது, தமிழீழ மக்களின் வாழ்வில் ஓர் நீண்ட பார்வை வேண்டும்.

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
tchrfrance@hotmail.com
(ஈழமுரசு, பாரிஸ், பிரான்ஸ்)

Saturday, November 19, 2011

1993ம் ஆண்டு எடுத்த தனது நிர்வாணப் படத்தை £16,000 விற்ற மாடல்


இதுவரை காலமும் வெளிவராத தனது பழைய நிர்வாணப் படத்தை வெளியிட்டு புகழையும் பணத்தையும் தேடியுள்ளார் பிரபல நடிகை Kate Moss.

1993 ம் ஆண்டு காலப்பகுதியில் விளம்பர கம்பனி ஒன்றிற்காக நிர்வாண போஸ் ஒன்றைக் கொடுத்திருந்தார். அது அக்காலத்தில் பெரிதாக பேசப்படவில்லை.

காலப்போக்கில் காற்றோடு கரைந்துவிட்டது இப்போது 18 வருடங்கள் கழிந்த நிலையில் அதற்கு இவளவு மவுசு கிடைக்குமென இவர் எதிர்பாத்திருக்கவில்லை.

37 வயதான Moss திருமணமானவர். நான்கு வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற நிர்வாணப் படமொன்று £54,000 இற்கு விற்கப்பட்டது அது அளவில் பெரியதும் 25 வருடங்கள் பழமையானதும் கூட.

மேலைத்தேய நாடுகளில் பழைய நிர்வாணப்படங்கள் மற்றும் ஓவியங்களுக்கு நல்ல கிராக்கி நிலவுகிறது. அதற்குதான் இப்போதே வெள்ளைக்கார பெண்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்து வைக்கிறார்கள் போலும். இன்னொரு 30 வருடங்களில் நல்ல விலை போகும்.

இணையத்தில் தனது நிர்வாண படங்களை வெளியிட்ட இளம் பெண்ணுக்கு கடும் எதிர்ப்பு


இணையத்தில் தனது நிர்வாண படங்களை இளம்பெண் வெளியிட்டுள்ளதற்கு எகிப்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

எகிப்தில் கருத்துகளை வெளியிடும் உரிமை உள்பட பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி பெண்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கெய்ரோ பல்கலைக்கழக மாணவி அலியா மக்டா எல்மாடி, இன்டர்நெட் பிளாக்கில் தனது நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு மதவாதிகளும், முற்போக்காளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் கலை கண்ணோட்டத்துடன் கூட நிர்வாண படங்கள் வெளிவருவதை விரும்புவதில்லை. பொது இடங்களில் செல்லும் பெண்கள், முகத்தை மறைத்தபடி செல்ல வேண்டும். கைகள், கால்கள் தெரியும்படி ஆடை அணிய கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் மாணவி தனது நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வரும் 28ம் திகதி எகிப்து நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கிறது.

இதில் பழமைவாத கட்சிகளை தோற்கடிக்கும் முயற்சியாகவே நிர்வாண படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் இந்த படங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று முற்போக்காளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எகிப்தில் வன்முறை, இனமோதல், பாலியல் சித்ரவதை, மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நிர்வாண படங்கள் வெளியிட்டேன் என்று அலியா தனது பிளாக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

பிளாக்கில் படங்கள் வெளியான ஒரு வாரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அதை பார்த்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் போர்ச் சுற்றுலாக்கள்!

யாழ்ப்பாணம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அதனைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு தென்னிலங்கைச் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்துக்குப் படை எடுத்து வருகின்றனர்.

இலங்கையில் பிறந்தவர்கள் அந் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க விரும்புவது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்கள மக்கள் வீதிகளில் நின்று அதில் பயணிப்போருக்கு இடையூறாக தமது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

இதற்காக எந்தப் போக்குவரத்துப் பொலிஸாரும் நடவடிக்கை எடுப்பதும் இல்லை, வழக்குப் பதிவு செய்து நீதிமன்றம் கொண்டு செல்வதும் இல்லை.

இதற்குக் காரணம் என்ன? ஒரே இனம் என்பதாகும். ஆனால் தென்பகுதியைத் தமிழ் மக்கள் சுற்றிப் பார்க்கச் செல்லுமிடத்து, அங்கு அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிலவேளைகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்தில் போக்குவரத்துச் சட்டதிட்டங்களை மதிக்காமல் வாகனம் செலுத்தியதாக ஒரு நாளுக்கு எத்தனையோ தமிழ் மக்கள் நீதிமன்றத்தில் தண்டப் பணம் செலுத்துகின்றனர்.

ஆனால் இதுவரைக்கும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஒரு சிங்களவரேனும் தண்டப்பணம் செலுத்தியிருக்கின்றாரா?

அதேநேரம் தமிழர்களின் வாகனமும், சிங்களவர்களின் வாகனமும் விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் குற்றத்துக்கு அப்பால் சென்று தமிழ் வாகனச் சாரதி சட்டத்திற்கு முறையற்ற விதத்தில் சிங்கள ஆயுததாரிகளால் தண்டிக்கப்படுகின்றனர்.

இவற்றுக்கு மேலாக யாழ்ப்பாணம் வருகின்ற சிங்கள மக்கள் நடந்து கொள்ளும் விதம், நாங்கள் ஆட்சி செய்யும் நாடு, பெரும்பான்மையின மக்கள் நாங்கள்தான் என்ற பெருமிதத்தோடு நடந்து கொள்வதுடன், தமிழர்கள் சிறுபான்மையினம், அவர்கள் இலங்கையில் வாழலாமே தவிர உரிமை கேட்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டித் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது அனைத்தும் மீண்டும் ஒரு போர்ச் சூழலை இலங்கையில் உருவாக்குவதற்கான அத்திபாரமாக, அறிகுறியாகவே இருக்கும்.

எனவே, யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலாவாக வரும் தென்னிலங்கை மக்கள் உங்கள் சுற்றுலாக்களைப் போர்ச் சுற்றுலாக்களாக மாற்றாதீர்கள்.

தமிழ் மக்கள் அநாதைகள், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இனம் என நினைத்து அவர்களை அடிமைப்படுத்த எத்தனிக்காதீர்கள்.

அது உங்களுக்கும், எங்கள் நாட்டுக்கும், அதன் எதிர்கால அபிவிருத்திக்கும் ஆரோக்கியமானதாக அமையாது.

அதேநேரம் யாழ்ப்பாணத்துக்குச் சிங்கள மக்கள் வந்து போகும் அதே சுதந்திரத்தைத் தென்பகுதிக்கு வரும் தமிழ் மக்களும் அனுபவிப்பதை உரிய தரப்புக்கள் உறுதிப்படுத்திக் கொள்வதும் காலத்தின் தேவையாகும்.

Sunday, November 6, 2011

என்ன ஒரு அழகு தேவதை!


உலகத்தில் அழகான பெண்கள் ஏஞ்சலினா ஜோலியும் ஐஸ்வர்யாராயும் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் அழகிய பிரபலங்கள் மட்டும் தான்.

அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் இருக்கின்றது என்று பொதுவாக கூறுவர்.

என் கண்களும் மூளையும் இணைந்தே என் முக அழகை மெருகூட்டுகின்றது என்று கூறுகிறார் Fathima Kulsum Zohar Godabari.

இவர் வேறு யாரும் அல்ல சவூதி அரேபியாவின் வருங்கால இளவரசி.

சில நாட்களுக்கு முன்னர் niqab போட்டு முகத்தை மறைக்காத அவரது படங்கள் இணையத்தில் வெளியாகின.

அவரது அழகிய முகமும், சாம்பல்நிறக் கண்கள், கூர்மையான புருவம், அழகிய சீரான பல் வரிசை, சிவந்த உதடு போன்றன மிக மிக அழகாக இருக்கின்றன.

அவரது முகம் ஒரு இயற்கை அதிசயம் போல உள்ளது. ஒருவேளை இவர் தான் உலக அழகியாக இருக்கக் கூடும்.

உண்மையில் பிரம்மனின் விசேட படைப்பு தான் இந்த அழகு தேவதை...