Tuesday, October 4, 2011

FaceBook தமிழ் இளைஞர்களின் அறியாமை ஓரினச்சேர்க்கைக்கு வித்திடுமா?


முகநூல் எனும் பேஸ்புக் தனது பக்கத்தில் பல கோடி மக்களைத் தன்வசப்படுத்தி வைத்திருக்கின்றது.

இதன் மூலம் கலாசாரச் சீரழிவுகளும் நாளுக்கு நாள் நடந்தேறிய வண்ணமும் உள்ளது. அதிலும் எமது தமிழ் இளையோரின் அறியாமை சில வேளைகளில் சிரிப்பை ஏற்படுத்தினாலும் கூட மறுபக்கத்தில் வேதனையையும் அளிக்கின்றது.

ஏனெனில் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று பேஸ்புக்கில் பல கணக்குகளை வைத்திருப்பதுடன் அதற்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டி அழகான இளம் யுவதி ஒருவரின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இதனைக் கண்ட மற்றொரு கணக்குக்குக் சொந்தக்காரரான ஆண், இது உண்மையிலே பெண் என நம்பி, தனது வீரகாசச் செயல்களைச் செய்கின்றார்.

அரட்டை அடிக்கும் போது தொலைபேசி இலக்கத்தைத் தருமாறு தொல்லை கொடுப்பதும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அரட்டை அடிப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எனவே இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பெண்ணின் பெயரில் கணக்கு வைத்திருக்கும் ஆண், அவருடன் ஆபாசமாகப் பேசி தனது ஏமாற்று வித்தையைக் காட்டி வருகின்றார்.

எப்படியிருக்கிறது எமது தமிழ் இளைஞர்களின் விளையாட்டுக்கள்.

எத்தனையோ தமிழ் மக்கள் ஒருநேர உணவுக்காகக் கையேந்தி நிற்கும் தற்கால சூழ்நிலையில் இவர்களின் திருவிளையாடல்கள் ஓரினச் சேர்க்கைக்கு அடித்தளம் இடுவதாக அமைகின்றது.

எனவே இவ்வாறான சமூக இணையத்தளங்கள் நல்ல விடயங்கள் சிலவற்றை எடுத்துக் கூறினாலும் கூட, தங்களின் வளர்ச்சிக்காக பெரும்பாலான சமூகச் சீரழிவுக்கான விடயங்களைத் தங்களிடத்தில் வைத்துக் கொண்டுள்ளனர்.

இதுவே இவ் இளைஞர்களின் திருவிளையாடல்களுக்கு மைதானமாக அமைகின்றது

No comments:

Post a Comment