Saturday, October 22, 2011

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினாரல் கொல்லப்பட்டவர்களின் 24வது ஆண்டு இன்று

இந்திய இராணுவத்திரால் 1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் என 68ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 24வருடங்கள்.

இப் படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , திருமதி பா.வடிவேல், செல்வி இ. மங்கயற்கரசி, செல்வி மு. லீலாவதி, திரு கே.செல்வராசா, திரு கே. கிருஸ்ணராஜா, திரு மு. துரைராசா, திரு எம். சண்முகலிங்கம், திரு வி. வரதராசன், திரு கே. வேதாரணியம், திரு யோன்பீற்றர், திரு இசுகுமார், திரு க. சிவயோகநாதன், திரு கே. சிவராசா, திரு கோ. உரித்திரன், திரு க. மார்க்கண்டு, திரு இ. இரத்தினராசா. திரு க. நவரத்தினம் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் இந்திய இராணுவத்தினருடைய மிலேச்சத்தனமான தாக்குதலில் பலியான போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் இருபத்தொருவர்.

நோயாளிகளின் நலனுக்காக தம் உயிரைத் தியாகம் செய்த சுடர்களது 24வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்றது.இங்கு வைத்தியசாலையினர், படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Thursday, October 13, 2011

கோடி கொடுத்தாலும் மசியாத ரஜினி, கமல்


முன்பெல்லாம் விளம்பரப் படங்களில் மொடல்கள் தான் நடிப்பார்கள் அந்த காலம் மலையேறிவிட்டது.

தற்போது திரை நட்சத்திரங்கள் தான் விளம்பர உலகை ஆண்டு வருகின்றனர். பிரபலமான திரை நடச்த்திரங்களை வைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தினால் அது மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்.

ஆனால் கோடி, கோடியாய் பணம் கொடுக்க விளம்பர நிறுவனங்கள் தயாராக இருந்தும் விளம்பரஙகளில் நடிக்க சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமீர் கான், விஜய், தல அஜீத், சூர்யா, கார்த்தி, அனுஷ்கா, சினேகா, தமன்னா, த்ரிஷா, மாதவன், மனோரமா ஆச்சி, சுகன்யா, சுஹாசினி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே விளம்பரப் படங்களில் நடித்து வருகிறது. திரையுலகில் அதுவும் ரசிகர்களின் மனதில் எப்பொழுதும் உயர்வான இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன்.

அவர்கள் இருவரையும் எப்படியாவது விளம்பரப் படங்களில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்துள்ளனர். கோடி, கோடியாய் தருகிறோம் என்றெல்லாம் கூறினார்கள். இதற்கெல்லாம் மயங்கிவிடுபவர்களா அவர்கள். கோடி கோடியாய் கொடுத்தாலும் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்கள்.

Tuesday, October 11, 2011

யா/விக்னேஸ்வர கல்லூரி அதிபர் அதிபர் திரு வே.சிவசிதம்பரம் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறோம்


எமது பாடசாலையின் விருத்திக்காக அயராது உழைக்கும் அதிபர் திரு வே.சிவசிதம்பரம் அவர்கள் வடமராட்சியின் சிறந்த அதிபராக ஜனாதிபதி அவர்களால் ஆசிரியர் பிரதீபா பிரபா விருது 2001‍ வழங்கி கெளரவிக்கப்படுவதையிட்டு பாராட்டி மகிழ்வதுடன் அவர் இன்னும் பல சிறப்புகள் பெற்று பல்லாண்டு வாழ தழிழ்நட்பு [tamilnadpu.blogspot.com] இணையம் சார்பாக‌ வாழ்த்துகின்றோம்.

Thursday, October 6, 2011

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு! ஊடகவியலாளர்களுக்கு கதவடைப்பு!!


யாழ்.பல்கலைக் கழகத்தின் வரலாற்றில் பென் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுக் கடமையை பேராசிரியரும் செல்வியுமான வசந்தி அரசரெட்ணம் செய்துள்ளார்.

அந்த வரலாற்றுக் கடமையானது இன்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தின் 27வது பொதுப்பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவைப் பதிவு செய்வதற்கும் நிகழ்வுகளை பற்றிய குறிப்புகளை எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்க முடியாது என அறிவித்தல் விடுத்துள்ளார்.

யாழ்.கல்விச் சமூகத்தின் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு ஏன் அனுமதி வழங்க வில்லை என அவரிடம் வினாவியபோது தொடர்புகளைத் துண்டித்துள்ளார்.

பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் யாழ்.பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இன்னமும் ஒரு வருடம் கூட ஆகவில்லை ஆனால் அவர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் மதித்து நடப்பதாக தெரியவில்லை.

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுப்புக்கு என்ன காரணம் என்பதை ஊடக நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களுக்கு இருக்கிறது என்பதை அவர் நினைவில் கொள்ளவேண்டும்.

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த கத்துரு சிங்காவுடனும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியுடனும் நின்று புகைப்பட ஊடகவியலளர்களுக்கு போஸ் கொடுக்கும் நீங்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வியைக் கற்று அதன் முக்கிய நிகழ்வுகளை மாணவர்கள் பதிவு செய்வதற்கும் ஊடகவியலாளர்கள் பதிவு செய்வதற்கும் அனுமதி மறுத்திருப்பது எந்த வகையில் நியாயமானது.

எந்த அரசியல் பின்னணியில் நீங்கள் கடமையாற்றுகின்றீர்கள் என்பது நீங்கள் உபவேந்தராக யாழ்.பல்கலைக் கழகத்திற்கு தெரிவானது முதல் இன்று வரை யாழ்.கல்விச் சமூகத்திற்கு தெளிவாக தெரிகிறது.

எதிர்காலத்தில் அரசியல் பாதையில் பயணிப்பதற்கு இப்பவே தயார் செய்கின்றீர்கள் போல தமிழ் மக்களுக்கு தென்படுகிறது உண்மைகள் எப்பவும் மூடுமந்திரங்களாக இருக்கமுடியாது என்ற உண்மையைக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

எதையாவது கிளப்பிவிட்டு படத்தை ஓட வைக்கிற சமார்த்தியம் தமிழ் சினிமாவில் அதிகம்!


ஒரு படத்தை ஒடவைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணத்தை தேட முடியாது.எதையாவது கிளப்பிவிட்டு அப்படத்தை பற்றி பேச வைக்கிற சமார்த்தியம் அநேகமாக தமிழ் சினிமாவில்தான் அதிகம்.

ஒரு குறிப்பிட்ட நட்சத்திர ஜோடிகளுக்கு இடையே நிஜமாகவே லவ் என்ற விஷயம் அந்த படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் வரும். இதை தயாரிப்பாளர்களோ, அல்லது அப்படத்தின் இயக்குனர்களோ, அவ்வளவு ஏன் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளோ கூட கிளப்பிவிடுவார்கள்.

இந்த விஷயம் பத்திரிகைகளில் சில வாரங்கள் செய்தியாகவும் கிசுகிசுவாகவும் நீடிக்கும். அதற்குள் படமும் கலெக்ஷனை நிரப்பிக் கொள்ளும். அப்புறம் எல்லாம் மறந்து அவரவர் வேலையை அவரவர் பார்ப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் இதில் ஏமாந்து போவது அப்பாவி ரசிகர்கள்தான்.

தற்போது மீடியாவில் அதிகம் அடிபட்டுக் கொண்டிருப்பது விஜய்யும் வேலாயுதமும்தான். ஆனால் இப்படத்தின் டைரக்டர் ஜெயம் ராஜா பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இப்படத்தில் நடித்திருக்கும் கதாநாயகிகளான ஜெனிலியாவுக்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் படப்பிடிப்பில் நடிப்பில் நல்ல போட்டி இருந்தது என்றெல்லாம் கூறி பத்திரிகைகளில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் இன்று அதுபற்றி பேசியிருக்கும் ஜெனிலியா சொன்ன விஷயங்கள் அத்தனையும் ஜெயம் ராஜாவின் பேட்டிக்கு எதிர்வினை. நானும் ஹன்சிகா மோத்வானியும் நல்ல நண்பர்கள். வேலாயுதம் படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார்.

நான் நகரத்து பெண்ணாக நடித்திருக்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி எனக்கும் அவருக்கும் போட்டி என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறி ஒரேயடியாக கவிழ்த்துவிட்டார் ராஜாவை.

வேலாயுதம் வெற்றி பெறுமா? ட்றெயிலர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு எப்படி?


நீண்டதொரு இடைவெளிக்குப்பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் விஜய் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புடனும் தீபாவளியன்று வெளிவர இருக்கும் வேலாயுதம் வெற்றி பெறுமா?

நிச்சயமாக முன்னைய விஜய் படங்களை போல் அல்லாது வேலாயுதம் சிறப்பாக வரும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே வந்து ஹிட்டாகிய பாடல்களும், நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வேலாயுதம் ட்றெயிலரும் படம் தோற்கும் என்று கூறிய பலருக்கும் வேலாயுதம் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் எல்லோரும் விஜயின் சிக்ஸ் பக் பற்றியே பேச்சு. அது ஊசி, கிராபிக்ஸ் என்று சிலர் கூறினாலும் நிச்சயம் அப்படி கூறுபவர்களுக்கும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம் ட்றெயிலர் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.. அதாவது இந்தளவு ஆக்‌ஷனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே.

இதற்கு எடுத்துக்காட்டாக காவலனுக்கு முன்னர் வந்த ஐந்து படங்களின் தோல்வியை கூறினாலும் அவற்றின் தோல்விக்கு ஆக்‌ஷன் மட்டுமே காரணமாகாது.

குருவி போன்ற அதீத, மக்கள் நம்பமுடியாத, லாஜிக் இல்லாத ஆக்‌ஷனும், ஓவர் பஞ்ச் வசனங்களுமே அவற்றின் தோல்விக்கு காரணமாக இருந்தன.

அதை விட அவற்றில் கதை குறைவாகவும் , சில நல்ல கதைகள் கூட விஜய்க்காக மாற்றப்பட்டு சிதைக்கப்பட்டும் வந்திருந்தன.அதனாலேயே சில படங்கள் விஜய் ரசிகர்களாலேயே ஏற்கப்படாமல் போயின.

வேலாயுதத்துக்கும் இதே நிலையா என்று பார்த்தால்.. இருக்கலாம் அல்லது வெற்றி பெறலாம். ஆனால் நிச்சயம் ஆக்‌ஷன் தோல்விக்கான காரணமாக இருக்கப்போவதில்லை.

படத்தின் கதை சிறப்பாக வருமிடத்து நிச்சயம் வேலாயுதம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. வேலாயுதம் படத்தின் கதை தெலுங்கு ஆசாத்தின் தழுவல்.

ஆனால் இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏற்கனெவே ராஜா கூறியிருந்தார்.

அதனால் கதையும் சிறப்பாக வரும் என்று நம்பலாம். விஜயின் அதீத பில்ட் அப்புகள், ஓவர் பஞ்ச் வசனங்கள் தவிர்க்கப்படுமிடத்து வேலாயுதம் பெரிய வெற்றிதான்.

இன்னொரு விடயம் கில்லியில் கூட பஞ்ச் வசனங்கள் இருந்தாலும் வேகமான திரைக்கதையாலும், திணிக்கப்பட்ட பஞ்ச் வசனங்களாக இல்லாமல் தேவையான இடங்களில் மாத்திரம் பயன்படுத்தியதாலும் அது விஜய் ரசிகர்களால் மாத்திரமன்றி ஏனையவர்களாலும் ஏற்கப்பட்டிருந்தது.

எது எப்படியோ.. வரும் 25 ஆம் திகதி முடிவு தெரிந்துவிடும்

ஆனால் நான் உட்பட ( ஹி ஹி ) விஜய் ரசிகர்களுக்கு வேலாயுதம் மிகப்பெரிய விருந்தாகவே இருக்கப்போகிறது. காரணம் 10 மாதத்திற்கு பின்னர் வரும் விஜய் படம் என்பதாலும், காவலனில் அமைதியான விஜயை பார்த்துவிட்டு அதிரடியான விஜயை பார்க்கப்போவதாலும், நிச்சயமான என் போன்ற விஜய் ரசிகர்களுக்கு இது பெரும் விருந்துதான்.

35 நபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 13 வயதுச் சிறுமி!


பல தடவைகள் 35 நபர்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட 13 வயது சிறுமியொருவர் தொடர்பான தகவல் அவிசாவலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறு பாலியல் ரீதியில் இச் சிறுமியை துன்புறுத்தியதாக கூறப்படும் 8 சந்தேக நபர்கள் இதுவரையிலும் அவிசாவலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமிக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

அவிசாவலையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் ஏழைக் குடும்பத்தில் வசிக்கும் இச் சிறுமி சிறுவயதிலிருந்தே பல நபர்களால் பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக அடிமைப்படுத்தப்பட்ட இச் சிறுமி அவரது பாட்டியினால் பணத்திற்காக காமவெறியர்களுக்கு பல தடவை விற்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அச் சிறுமி பாலியல் வன்முறைக்கு பலியாகும் போது நடந்த கொலைச் சம்பவமொன்று தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளன.

ஷங்கர் இயக்க, அஜீத் நடிக்க இந்தியன் -2? என்ன சொல்கிறார் ஏஎம் ரத்னம்?


பில்லா 2 நடித்துக் கொண்டிருக்கும் அஜீத்தின் அடுத்தபடம் அநேகமாக இந்தியன் 2 ஆக இருக்கலாம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாராம்.

இந்தியன் படத்தின் இறுதியில், அதன் அடுத்த பாகம் வரப்போவதை இயக்குநர் ஷங்கர் சூசகமாக குறிப்பிட்டிருப்பார். இந்தப் படத்தை தயாரித்த ஏஎம் ரத்னம்தான், அடுத்து அஜீத்தை வைத்து படம் தயாரிக்கிறார்.

அதேபோல, பாய்ஸ் சமயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டாலும், ரத்னத்துக்கு இன்னொரு படம் பண்ணித் தருவதாக இயக்குநர் ஷங்கரும் உறுதி தந்திருந்தார்.

எனவே இதுவரை நடக்காமல் இருந்த அஜீத் - ஷங்கர் காம்பினேஷனை இந்த முறை சாத்தியமாக்கிவிடலாம் என ரத்னம் முயற்சிப்பதாகவும், அது இந்தியன் -2 ஆக மலரலாம் என்றும் தகவல் பரபரக்கிறது.

அன்னா ஹஸாரே விவகாரம் படுபாப்புலராக உள்ள இந்த நேரத்தில் இந்தியன் 2 எடுப்பது வியாபாரத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதால் இந்த பேச்சு.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்தை தொடர்பு கொண்டு விசாரித்தோம். "பேசிக்கிட்டிருக்கோம்," என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவரை, இந்தியன் -2 உண்மையா என்று மட்டும் சொல்லுங்க என்றோம்.

"எதுவும் நடக்கலாம். இந்தியன்- 2 கூட நல்லாதான் இருக்குல்ல," என்றார் அப்பாவியாய்.

கமல்ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா நடித்து வெளியான தமிழில் புதிய புரட்சி படைத்த படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தா வேடம் வெகு பிரபலமானது.

இப்படத்தில் லஞ்சம், ஊழலை எதிர்த்துப் போராடும் இந்தியன் தாத்தா வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது நினைவிருக்கலாம்.

எல்லாம் சரி, கமல்ஹாசன் தரித்த வேடத்தை தாங்கும் அளவுக்கு அஜீத்துக்கு பலம் இருக்கிறதா?

Tuesday, October 4, 2011

இரக்க மனமுடையோரே இதையும் கொஞ்சம் பாருங்கள் (படங்கள் இணைப்பு)







இரக்க மனமுடையோரே இதையும் கொஞ்சம் பாருங்கள் (படங்கள் இணைப்பு)


தொடர்புகளுக்கு
0094774529815 ராணி

உலகமே தெரியாமல் எங்களை இருளுக்குள் தள்ளியவர்களின் பரிசில்கள் எமக்கு ஏன்?


ஞாயிற்றுக்கிழமை யாழ்.படைகளின் தலைமையகதத்தில் நடைபெற்ற கா.பொ சாதாரண மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.எங்களை வலுக்கட்டாயமான எமது பாடசாலை ஆசிரியர்கள் அழைத்து வந்துள்ளனர். நாங்கள் இரண்டு கண்களும் தெரியாது இரு கைகளையும் கொடிய யுத்ததினால் இழந்துள்ளோம்.

எங்களின் வாழ்க்கையை சூனியமாக்கியவனின் கைகளினால் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர்தான் வருகிறது.

தங்களின் உணர்வுகனை இந்த நவீன் பாடசாலை ஆசிரியர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை. இராணுவத்தினரின் கௌரவிப்புக்கு தங்களை வலுக்கட்டாயமாக கூட்டி வந்ததாக குறைகூறுகின்றனர் இந்த மூன்று மாணவர்கள்.

எங்களை உலகமே தெரியாமல் இருளுக்குள் தள்ளியவர்களின் பரிசில்கள் எமக்கு ஏன்? என கண்கலங்கினார் நவீன் பாடசாலை மாணவன்.

நிச்சயமாக நவின் பாடசாலை ஆசிரியர்கள் அவர்களின் விருப்பங்களை கேட்டுவிட்டு இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் அது நவீன் பாடசாலை ஆசிரியர்களின் தப்பு.





சேலையில் யார் அழகு?- வித்யா, மஹி இடையே போட்டி!


பாலிவுட்டில் அவ்வப்போது ஹீரோயின்களுக்குள் திடீர் போட்டிகள் கிளம்புவதுண்டு. அந்தவகையில் இப்போது வித்யா பாலனுக்கும், மஹி கில்லுக்கும் இடையே ஒரு சேலைப் போட்டி கிளம்பியுள்ளதாம்.

தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் கலக்கலான கிளாமருடன் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் வித்யா பாலன். அதேபோல சாஹேப் பீவி ஆர் கேங்ஸ்டர் என்ற புதிய படத்தில் நடித்திருப்பவர் மஹி கில். இருவருமே இப்படத்தில் ஒரு கவர்ச்சிகரமான காட்சியில் வருகிறார்கள். இருவருமே அதில் சேலையில் வருகின்றனர்.


இதை வைத்து சேலையில் யார் அதிக கவர்ச்சியுடன் இருப்பது என்று கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டது பாலிவுட். வித்யாதான் செம கவர்ச்சி என்று ஒரு தரப்பும், மஹிதான் மயக்குகிறார் என்று இன்னொரு தரப்புமாக வாதப் பிரதிவாதிங்கள் சூடாகியுள்ளனவாம்.

ரசிகர்களுக்கோ இரண்டு பேருமே கலக்கலாகத்தான் இருக்கிறார்கள் என்று இருவருக்குமே தங்களது வாக்குகளை மானாவாரியாக செலுத்தி வருகிறார்கள்.

மஹி கில் கவர்ச்சிக்குப் பெயர் போனவர் என்பது நினைவிருக்கலாம். அதிலும், சாஹேப் படத்தில் தாறுமாறான கவர்ச்சிக் காட்சிகளில் கலக்கியுள்ளார். ஆனால் வித்யா பாலன் இப்போதுதான் உச்சகட்ட கிளாமர் கடலில் நீந்த ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.அரச ஊழியரின் கள்ளத் தொடர்பு அம்பலம்! மனைவிக்கு உதவிய தொலைபேசி!!


வடமராட்ச்சிப் பகுதியைச்சேர்ந்த 40வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலைசெய்ய முயன்று அவரது உறவினர்களால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தற்கொலைக்கு முயன்ற காரணம் மிகவும் வேடிக்கையானது. என்னவெனில் இவர் ஒரு அரச பணியாளர்.

வடமராட்சி பகுதியிலே பணியாற்றும் இவர் பெண்களுடன் பழகுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். விடுமுறை தினங்களிலும் கடமையில் ஈடுபடுபவர்.

அன்றைய தினமும் விடுமுறை. இவர் அலுவலகத்திற்கு செல்வதற்காக குளியல் அறையில் இருந்தவேளை இவரது தொலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது.

இதை பார்த்த மனைவி அலுவலக ஆண் உதவியாளர் ஏற்படுத்திய அழைப்பினை கண்டு தொலைபேசியை அழுத்தி அவுட் மைக்கில் வைத்த வண்ணம் கணவனிடம் வழங்கியிருந்தார்.

கணவனும் அதை உணராது கலோ என்றதும் எதிர்முனையிலிருந்த ஆண் “அண்ணா அண்ணி வந்துட்டா நீங்கள் ஏன் தாமதம்” எனக் கேட்டது தான்.

அன்றிலிருந்து அப்பாவியாக இருந்த மனைவி முடுக்கிவிட்டார் கணவர் மேல் சித்திரைவதைகளை. இதை தாங்கமுடியாமலே கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தொலைபேசி சிலவேளைகளில் தொல்லைபேசியாக மாறுவதற்கு இதுவும் ஓர் உதாரணம்

FaceBook தமிழ் இளைஞர்களின் அறியாமை ஓரினச்சேர்க்கைக்கு வித்திடுமா?


முகநூல் எனும் பேஸ்புக் தனது பக்கத்தில் பல கோடி மக்களைத் தன்வசப்படுத்தி வைத்திருக்கின்றது.

இதன் மூலம் கலாசாரச் சீரழிவுகளும் நாளுக்கு நாள் நடந்தேறிய வண்ணமும் உள்ளது. அதிலும் எமது தமிழ் இளையோரின் அறியாமை சில வேளைகளில் சிரிப்பை ஏற்படுத்தினாலும் கூட மறுபக்கத்தில் வேதனையையும் அளிக்கின்றது.

ஏனெனில் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று பேஸ்புக்கில் பல கணக்குகளை வைத்திருப்பதுடன் அதற்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டி அழகான இளம் யுவதி ஒருவரின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இதனைக் கண்ட மற்றொரு கணக்குக்குக் சொந்தக்காரரான ஆண், இது உண்மையிலே பெண் என நம்பி, தனது வீரகாசச் செயல்களைச் செய்கின்றார்.

அரட்டை அடிக்கும் போது தொலைபேசி இலக்கத்தைத் தருமாறு தொல்லை கொடுப்பதும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அரட்டை அடிப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எனவே இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பெண்ணின் பெயரில் கணக்கு வைத்திருக்கும் ஆண், அவருடன் ஆபாசமாகப் பேசி தனது ஏமாற்று வித்தையைக் காட்டி வருகின்றார்.

எப்படியிருக்கிறது எமது தமிழ் இளைஞர்களின் விளையாட்டுக்கள்.

எத்தனையோ தமிழ் மக்கள் ஒருநேர உணவுக்காகக் கையேந்தி நிற்கும் தற்கால சூழ்நிலையில் இவர்களின் திருவிளையாடல்கள் ஓரினச் சேர்க்கைக்கு அடித்தளம் இடுவதாக அமைகின்றது.

எனவே இவ்வாறான சமூக இணையத்தளங்கள் நல்ல விடயங்கள் சிலவற்றை எடுத்துக் கூறினாலும் கூட, தங்களின் வளர்ச்சிக்காக பெரும்பாலான சமூகச் சீரழிவுக்கான விடயங்களைத் தங்களிடத்தில் வைத்துக் கொண்டுள்ளனர்.

இதுவே இவ் இளைஞர்களின் திருவிளையாடல்களுக்கு மைதானமாக அமைகின்றது

16 வயதில் தந்தையாகும் மாணவன்! அதிர்ச்சியில் உறையும் யாழ்.சமூகம்!!


இலங்கை அரசாங்கத்தால் திருமண வயதெல்லையை 15 வயதாகக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தும் காரணம் எதுவுமின்றி அதனை அரசு செய்யாது விட்டு விட்டது.

ஆனால் யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகள் அரசாங்கம் கொண்டு வரும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்திக் காட்டி அதிலும் வெற்றியும் கண்டுள்ளனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவனால் பெண்ணொருவர் கர்ப்பவதியாகியுள்ளார்.

இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வாபுரம் பகுதியில் 17 வயதுப் பெண் ஒருவர் 16 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவனால் கர்ப்பம் தரித்துள்ளார்.

8 மாதக் கர்ப்பிணியாகவுள்ள பெண்ணை அவரது சகோதரி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தங்கையின் கர்ப்பம் தொடர்பில் தெரியாததுபோல், அவரின் வயிறு மற்றும் உடம்பு பெருத்து வருவதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.

அதன் பின் வைத்தியசாலையின் வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் உண்மை தெரியவரவே அவர் கர்ப்பிணி என மகப்பேற்றுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வக்கீலுக்கும் வைத்தியருக்கும் பொய் சொல்லக் கூடாது என்று இந்தச் சகோதரிக்குத் தெரியாமல் போனது கவலைதான்.

இருந்தும் கர்ப்பத்திற்குக் காரணமானவர் யார் என வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணை செய்தபோதும் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளாத கர்ப்பவதி, தமது உறவினர்களிடம் அதனை விளக்கிக் கூறியுள்ளார்.

அதில், 16 வயதுப் பாடசாலை மாணவன் என்பதும் இவ்விருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

16, 17 வயதுப் பெற்றோருக்கு 8 மாதக் கரு காத்திருக்கிறது கருவறையில்.