Saturday, September 3, 2011

"முத்தக்காட்சியா": டைரக்டர்களை கலங்க வைக்கும் டாப்சீ


ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், கொமெடி என எல்லாம் கலந்து டைரக்டர் கண்ணன் இயக்கியுள்ள "வந்தான் வென்றான்" படத்தில் நாயகன் ஜீவாவுடன் நாயகியாக டாப்சீ நடித்துள்ளார்.

இந்த படத்தில் "அஞ்சனா" என்ற ரோலில் மில்லியனர் வீட்டு பெண்ணாக வருகிறேன். இந்த ரோலில் தமிழ் வசனத்தில் நான் நடிக்க ஆறு வாரம் பயிற்சி எடுத்து கொண்டேன். திரைக்கதைக்கு பொருத்தமான வகையில் நான் நடித்துள்ளேன். என்னுடன் இணைந்து புரபசனல் நடிகராக திறமையை காட்டி இதில் நடித்துள்ளார். எல்லோரிடமும் நட்பாக பழகும் நடிகர் அவர். தெலுங்கில் ஜீவா நடித்த "ரங்கம்" படத்தை பார்த்திட்டு மிரண்டு போனேன். அதில் அப்படி அட்டகாசமாக நடிச்சிருந்தார் என்கிறார் டாப்சீ.

ஹீரோவுடன் நெருங்கி, தாராளமாக நடிப்பீர்களா? படத்தில் முத்தக்காட்சியில் நடிக்க "ஓ.கே" சொல்வீங்களா?' என்று கிடுக்கு பிடி போடுகிறவர்களிடம் எரிச்சலை கொட்டித்தீர்த்துள்ளார் டாப்சீ.

"நோ..நோ..எனக்கு அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க பிடிக்காது. என்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களிடமும் நான் இதை சொல்லியிருக்கிறேன்" என்று கூறி டைரக்டர்களை டாப்சீ கலங்க வைத்துள்ளாராம்.

No comments:

Post a Comment