Tuesday, August 30, 2011

ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்


நான் ஒரு தடவை முடிவு எடுத்துட்டடா, அந்த முடிவில் மாற மாட்டேன், மாற்றவும் முடியாது, என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.

மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விஜய்யின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

அதிலும் குறிப்பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய பேச்சுக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது.

விஜய் பேசுகையில் மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள்.

ஆனால் மதுரை மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட, அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள்.

பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள்ளத்தோடு இருப்பார்கள்.

நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது, ஏலே ஏலே என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து இருக்கும். இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பா உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான், என்று கூறினார்.

No comments:

Post a Comment