Monday, June 27, 2011

சீனமக்களின் கை நடனம் (வீடியோ இணைப்பு)

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !


உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்புச் செய்யும் கருவியை உருவாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிறமொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனால் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அடிக்கும் சொல்லை அது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்களையும் அது மாற்றுகிறது.

அதாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ இல்லை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ இனி நாம் சுலபமாக மொழிபெயர்க்கலாம். ஆங்கில இணையம் ஒன்றில் நீங்கள் ஒரு செய்தியை வாசிக்கிறீர்கள், விளங்கவில்லை என்றால் அச் செய்தியை அப்படியே காப்பி பண்ணி கூகுள் மொழிபெயர்ப்பில் இட்டால் உடனடியாக அது அதனை தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் இதனை ஒரு பரீட்சாத்தமகவே விட்டுள்ளது. பல லட்சம் தமிழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, சில ஆங்கிலச் சொற்களுக்கும், சில தமிழ் சொற்களுக்கு சரியான அர்த்தங்களை அவர்கள் எழுதுவார்கள். அதை திருத்தும் வசதிகளும் இருக்கிறது. திருத்தப்படும் வசனங்களும் சொற்களும் நாளடைவில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது முழுமையைப் பெறும்.

திருத்தும் வசனங்களும் சொற்களும் சேமிக்கப்படுவதால், இன்னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு பூரணமன நிலைபெற்ற கருவியாக உருமாற உள்ளது. அதற்கு நீங்களும் உதவலாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் பாவிக்கும் பல சொற்களுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. கூடுதலாக தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவிக்கும் சொற்களை இடுகைசெய்கின்றனர். எனவே பண்டைய தமிழ் மாறாது.. பிறமொழிக் கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த்தத்தை கூகுள் கருவியில் சேமிக்கவேண்டும் என மனிதன் இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்துள்ளது.

அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடையமாகும். தமிழீழத்துக்காகப் போராடும் நாம்.. தமிழுக்காவும் போராடவேண்டும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது என்பதே

Thursday, June 16, 2011

எல்லாம் முடிந்து விட்டது என்று இருப்பவர்களை மீண்டும் எழவைக்கும் பாடல் (வீடியோ இணைப்பு)

(வீடியோ இணைப்பு)

ஜெயலலிதாவினால் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது: நடிகர் ரஜனிகாந்த் புகழலாராம்!


"முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார்.

தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார்.

அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார்.

அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.

அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார்.

வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார்.

ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

விஸ்வமடுவில் புலிகளின் முதல் உலங்குவானூர்தி (வீடியோ இணைப்பு)

(வீடியோ இணைப்பு)

இலங்கையின் படுகொலைக் களம் சனல்4 வெளியிட்டுள்ள திரைப்படம் (வீடியோ இணைப்பு)

(வீடியோ இணைப்பு)

சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ''இலங்கையின் படுகொலைக் களம்'' என்னும் தலைப்பில் ஓரு ஆவணத் திரைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளது.


இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ள, பிரிட்டன் செய்தி சனல் 4 ஆவணப் படமாக்கி நேற்று வெளிவிட்டது.

'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...இதுபோன்ற கொடூரமான செயல்களை செய்த சிங்களப் படைகளினதும் அவர்களை ஏவிய இலங்கை அரசாங்கத்தினதும் ஈனச் செயல்களை படம்பிடித்து சனல் 4, ஐ.நா வரை காட்டிய போதிலும் அதனை பொய் என்கிறது இலங்கை அரசு.

Tuesday, June 7, 2011

செவ்வாய் கிரகம் அழிந்தது அணு ஆயுத யுத்தத்தினால் புதிய சர்ச்சையில் நம்பவே முடியவில்லை ஆனாலும் செய்தியை பாருங்கள்

நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையிலேயே வியக்க வைக்கும் தகவல்கள் கொண்டது இந்த கட்டுரை.

இதிலே கூறப்பட்டு இருக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வெகு வேகமாக நமது பூமியும், செவ்வாய்க் கிரகம் போலே ஆகிவிடும் போல் தெரிகிறது. படித்துப் பாருங்கள். ஒரு இரண்டு வருடம் முன்பே , இணையத்தில் வெளியாகி உள்ள கட்டுரை இது. சமீபத்தில் பார்க்க நேர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?

வழக்கமாக நம் மூளையில் பதியப்பட்ட தகவல்களின்படி, ‘இல்லை’ என்பதே நம் பதிலாக இருக்கும்.

ஆனால் இதெல்லாம் நடந்தது .... என்று சொல்கிறார்கள் போரிஸ்காவின் பெற்றோர்.

சிலருக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வரும். அந்த மாதிரி , இந்த பையனுக்கு பூர்வ ஜென்ம வாசனை வந்து, நான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த பையன் என்று கூறி, அதன் பிறகு விஞ்ஞான உலகையே அவனது தகவல்களால் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறான்.

யார் இந்த போரிஸ்கா?

ரஷ்யாவில், சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 12 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.

இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர்.

இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே ‘தானாக’ பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.

சில நேரங்களில், சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ்.

தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான். மேலும், செவ்வாய் கிரக வாசியாக இருந்தபோது, பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான்.

லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்தபோது, ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ், லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால், எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான்.

பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ், மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளதுபோலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.

போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை ‘இண்டிகா குழந்தைகள்’ என்றும் அழைக்கின்றனர்.

மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2009 மற்றும் 2012 காலகட்டங்களில் மிகப் பெரும் இரண்டு அழிவுகளை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான்.

செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக, தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை என்றும் பாதுகாப்பான கவச அறைகளில் அவர்கள் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ், அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்பவர்கள் என்றும் கூறுகிறான்.

பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான்.

விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராஃப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான்.

இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.

போரிஸ்காவைப் பொறுத்தவரை “கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்” என்கிறான்.

போரிஸ்காவின் கூற்றுகளின் படி, நாம் வாழும் இப்பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள ஆயத்தமாகி வருவது போலத் தெரிகிறது.

நான் கண்ட வரலாறு காணாத சோகம் கதையல்ல அனுபவம்.............




ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் நாங்கள் அனுபவித்த துன்பங்கள்.............

12.08.2008 புத்துவெட்டுவானில் எங்களுக்கு அருகில் ஷெல் வீழ்ந்து வெடித்தஹில் எல்லோரும் இடம் பெயரத் தொடங்கிவிட்டார்கள்.எங்களருகில் தம்பி விக்கியும் இல்லை அவனை தொடர்பு கொள்ளவும் முடியாத இக்கட்டான நிலை.அப்பாவிடம் கடிதம் கொடுத்து பின் நான் நேரில் சென்று விக்கியை விடுப்பில் விடுமாறு கேட்டு பின் இரவு 12மணியளவில் தம்பி விக்கி உழவு இயந்திரம் ஒன்று கொண்டு வந்தான்.
அடுத்த நாள் நாங்கள் இடம் பெயர்ந்து கனகாம்பிகை குளத்திற்கு வந்து சேர்ந்தோம்.நல்ல மாமரச் சோலை.இரண்டு நாள் மரத்தடியில் எங்கள் பொழுது கழிந்தது.வீடு போட்டுக் கொண்டிருக்கும் போதே நல்ல மழை இயற்கையும் எம்மை விட்டு வைக்கவில்லை.
விக்கி எங்களுடன் 10 நாள் வந்து நின்றான்.பின்
விக்கி போகும் போது 6000 ரூபாவிற்கு மணிக்கூடு வாங்கி கொடுத்தென்.ஒரு நாள் திடீரென இரவு 10மணி இருக்கும் விக்கி வந்து எங்களை எழுப்பி வட்டக்கச்சியில் இருந்து வருவதாக சொன்னன்.அம்மா மா குழைத்து தேத்தண்ணியும் வைப்பம் என்று நினைக்கும் போது கிபீர் பயங்கர இறைச்சலுடன் வந்து பரா குண்டு போட்டான் அதிட வெளிச்சம் இரவை பகல் போலக்கியது.நாங்கள் ஒரு நாளும் காணாத விடயம் அது.
அந்த நேரம் அம்மா லாம்பு வெளிச்சத்துக்கு இங்கயும் குண்டு போடுவான் என்று சொல்லி லாம்பை நூக்க சொன்னா.பின் அப்பா பங்கருக்குள்ள நின்று பீடி குடிக்க அந்த வெளிச்ச்ம் அவனுக்கு தெரிஞ்சால் குண்டு இங்க தான் போடுவான் எண்டு அப்பாவை பீடி குடிக்க வேண்டாம் என்று சொன்னா.இத்தனைக்கும் நாங்கள் இருந்த இடம் சோலைக்காணி இதை எல்லாம் பார்த்த விக்கிக்கும் எனக்கும் மாமாவுக்கும் சிரிப்பு ந்றல் அடக்க முடியாத சிரிப்பு அதை சொல்ல முடியாது...பின் 1/2 மணி நேரத்துக்கு பின் கிபீர் போய்விட்டது.அதற்கு பின் அம்மா விக்கிக்கு கொடுக்கிறதை கொடுத்து விக்கியும் பொய்விட்டன்.
மறு நாள் ரூபன் மாமா இறந்துட்டார் என்ற செய்தி எங்களுக்கு தாங்க முடியாமல் இருந்தது.ஆனால் விக்கி மாமாவின் மரண சடங்கைல் கலந்து கொள்ள முடியவில்லை.அது அவனுக்கு சரியான கவலை ஒரு நாளும் சிந்திக்காத சிந்தனை அன்றுதான் வந்ததாக எனக்கு கூறினான்.
நான் இதையெல்லம் தூக்கி எறிந்து போட்டு ஓடட்டோ என நினைத்தனாம்.பின் நண்டுக்கறியும் மட்டு இறைச்சியும் சப்பிட்டு விட்டு கிணிக்கோழி ஒன்று பிடித்துக் கொண்டு போனான்.ரூபன் மாமாவிற்கு பட்ட குண்டு எனக்கு பட்டிருக்கலாம் என்று சொன்னான் எனக்கு ஒறு கணம் உயிர் நின்ற மாதிரி இருந்தது.

தொடரும்............