Saturday, April 9, 2011

சென்னையில் ஷாருக்கான்: ஐபிஎல் அதிரடி


நான்கு நாட்கள் மட்டும் நிம்மதி பெருமூச்சு விட்ட சினிமாக்காரர்கள் மீண்டும் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கிரிக்கட் போட்டியால் வெறிச்சோடி கிடந்த தியேட்டர்கள், உலக கோப்பை வெற்றிக்கு பிறகு லேசாக களைகட்ட தொடங்கியது. இந்த நேரத்தில்தான் ஐபிஎல் மேட்ச் அடுத்த குண்டை வீசியிருக்கிறது. இப்பவே பல தியேட்டர்களில் மாலை காட்சியும், இரவு காட்சியும் ரத்து செய்யப்படுகிற நிலை. ஐபிஎல் வந்தால் என்னாகுமோ என்று பீதியடைந்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். நாளை சென்னையில் துவங்கும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டார் தோனி. அதுமட்டுமல்ல நாளைய போட்டியில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஷாருக்கானும் வரப்போகிறார்.

கடந்த முறை நடந்த ஐபிஎல் போட்டியை நினைவில் வைத்திருப்பவர்கள், பிராண்ட் அம்பாசிடர் பதவிக்கு போட்டியிட்ட த்ரிஷா, நயன்தாரா பாலிடிக்சை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த தொல்லையெல்லாம் எதற்கு என்று நினைத்தார்களோ, என்னவோ இந்த முறை எந்த நடிகர் நடிகைகளையும் தொடர்பு கொள்ளவே இல்லை ஐபிஎல் நிர்வாகம்.

No comments:

Post a Comment