Thursday, April 21, 2011

ஈழப் பெண்ணின் நெஞ்சைத் தொடும் கதறல் !

ஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற ஈழப் பெண் ஒருவரின் கண்ணீர் கதறல் ! பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார் , சொல்ல முடியாத துயரில் இருக்கும் இவருக்கு தமிழ் நாடு தொப்புள்கொடி உறவுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். வார்த்தைகளால் விபரிக்க முடியாத இக் காணொளியை முடிவுவரை பாருங்கள் தமிழர்களே !

விடியோ


.

விக்ரம் படத்திற்கு கடும் எதிர்ப்பு


நடிகர் விக்ரம், மதராசபட்டணம் படத்தை இயக்கிய விஜய் டைரக்‌ஷனில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்திற்கு முதலில் "தெய்வ மகன்" என்று பெயர் வைக்கப்பட்டது. சிவாஜி நடித்த படத்தின் தலைப்பு இது என்பதால் சிவாஜி பிலிம்ஸ் இந்த படத்தலைப்பை வைக்க அனுமதி மறுத்துவிட்டது. பின்னர் இந்தப்படத்திற்கு "தெய்வத்திருமகன்" என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த தலைப்பிற்கும் இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "தெய்வத் திருமகன்" படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள "தெய்வத் திருமகன்" தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடாவிட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார்.

கடவுளின் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!


பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

கடவுளின் அவதாரம் என்று உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களால் நம்ப்பபடும் இவரின் நுரையீரல் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் என்பன கவலையளிப்பதாக சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திர பிரதேஷ் புட்டபர்த்தியில் உள்ள அதிநவீன சத்திய சாயி மருத்துவ மனையில் விஷேட மருத்துவர் குழுவொன்று இவருக்கு விஷேட சிகிச்சையளித்து வருகின்றது.

அவரின் நுரையீரலுக்கு ஆதரவாக தொடர்ந்தும் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 85 வயதான சாயிபாபா மார்ச் 28 முதல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சியில் ஆவியாம்! பீதியில் மக்கள்


கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இறந்த ஒருவரின் ஆவி நடமாடுவதாக தெரிவிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகின்றது.

கடந்த 12 ஆம் திகதி அப்பகுதியில் மெக்கானிக் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது ஆவி அப்பகுதியிலுள் வெதுப்பகத்திற்கு நள்ளிரவில் சென்று பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் பெயரை கூறி அழைத்ததாகவும் அவர்களிடம் பசிக்கின்றது எனக்கு பாண் தாருங்கள் என்று கேட்டதால் அங்கிருந்தவர்கள் கதவை அடைத்து விட்டு கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஒடிவந்துள்ளனர். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியதும் இச்செய்தி காட்டுத் தீ போல் அப்பகுதியெங்கும் பரவிவிட்டது.

இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் மக்கள் தமது நடமாட்டங்களை குறைத்துள்ளதாகவும் ஆவி நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மக்கள் கருதுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

Tuesday, April 12, 2011

செக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....? இதோ உங்களுக்காக ...


அளவிற்கு அதிகமாக செலுத்தப்படும் அன்புதான் தம்பதிகளிடையேயான செக்ஸ் செயல்பாட்டை முழுமைப்படுத்தி, அதை திருப்திக்குரியதாக மாற்றுகிறது.

அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும்.

செக்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில் ஈடுபட வேண்டும். இந்த விளையாட்டு வெற்றி, தோல்வி, திருப்தி போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக அமையவேண்டும்.

தூக்கம் என்பது ஒரு நாள் முழுக்க மனதும்- உடலும் அனுபவிக்கும் டென்ஷனைத் தீர்ப்பது. நேற்றுதான் தூங்கியிருக்கிறோமே அதனால் இன்று தூங்கவேண்டாம் என்று யாரும் கருதுவதில்லை. தினமும் தூங்கித்தான் ஆக வேண்டும் என்பது கட்டாயம். அதுபோல் செக்சையும் நினைக்கக்கூடாது.

தூக்கத்திற்கு முன்னால் ஏற்படுத்திக்கொள்ளும் பொழுதுபோக்கு என்றும் செக்சை கருதிவிடக்கூடாது. தம்பதிகளிடையேயான செக்ஸ் என்பது கடமைக்காக என்ற நிலையில் இருந்து விடக்கூடாது. இருவரையும் தூக்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்தாகவும் அதை கருதிவிடக்கூடாது.

ஏதோ இதுவும் ஒரு வேலை என்ற மனநிலையில் இருவரும் உறவில் ஈடுபடவும் கூடாது. உறவுக்கு நீங்கள் இருவரும் தயாராக இருக்கும் நாளில் காலையில் இருந்தே உங்கள் நினைவில் அந்த இன்பம் இருக்கட்டும். அதை நினைவில் வைத்துக்கொண்டே உற்சாகத்தோடு வேலைகளைப் பாருங்கள்.

அன்று இரவு உணவை சற்று முன்பாகவே முடித்துவிட்டு, வேலைகளை எல்லாம் செய்து முடியுங்கள். வழக்கமாக கணவனும்- மனைவியும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு, அன்போடு, ஆவலோடு படுக்கை அறைக்குள் நுழையுங்கள்.

அங்கு சென்ற பின்பு தொந்தரவிற்குரிய பேச்சு, சிந்தனை எதுவும் தேவையில்லை. உடல், மனது இரண்டையும் உற்சாகப்படுத்தவும்- அன்பை மேம்படுத்தவும் செக்ஸ் அவசியம் என்பதை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபடுங்கள். காலையில் செயல்படுவது, அந்த நாள் முழுவதையும் மகிழ்ச்சிக்குரியதாக்கும்

Monday, April 11, 2011

உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்


உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன.

ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது.

ஆண் குறி விறைத்தல்- ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது. ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.

ஆண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது. உடலுறவு நேரத்தில், இந்தப் போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.


இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன்மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன.

இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாகவும் செயல்படலாம்.

ஆகவேதான், வாலிபப் பருவத்தில் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.

ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்படலாம். இது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்

Sunday, April 10, 2011

பெண்களின் உணர்ச்சிகளை ஏமாற்றும் ஆண்கள் ...


பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 வீதமான பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்காத போது 40 வீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

42 வீதமானோருக்கு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம். வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள்.

அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள். இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்

Saturday, April 9, 2011

சென்னையில் ஷாருக்கான்: ஐபிஎல் அதிரடி


நான்கு நாட்கள் மட்டும் நிம்மதி பெருமூச்சு விட்ட சினிமாக்காரர்கள் மீண்டும் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கிரிக்கட் போட்டியால் வெறிச்சோடி கிடந்த தியேட்டர்கள், உலக கோப்பை வெற்றிக்கு பிறகு லேசாக களைகட்ட தொடங்கியது. இந்த நேரத்தில்தான் ஐபிஎல் மேட்ச் அடுத்த குண்டை வீசியிருக்கிறது. இப்பவே பல தியேட்டர்களில் மாலை காட்சியும், இரவு காட்சியும் ரத்து செய்யப்படுகிற நிலை. ஐபிஎல் வந்தால் என்னாகுமோ என்று பீதியடைந்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். நாளை சென்னையில் துவங்கும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டார் தோனி. அதுமட்டுமல்ல நாளைய போட்டியில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஷாருக்கானும் வரப்போகிறார்.

கடந்த முறை நடந்த ஐபிஎல் போட்டியை நினைவில் வைத்திருப்பவர்கள், பிராண்ட் அம்பாசிடர் பதவிக்கு போட்டியிட்ட த்ரிஷா, நயன்தாரா பாலிடிக்சை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த தொல்லையெல்லாம் எதற்கு என்று நினைத்தார்களோ, என்னவோ இந்த முறை எந்த நடிகர் நடிகைகளையும் தொடர்பு கொள்ளவே இல்லை ஐபிஎல் நிர்வாகம்.

பில்லா-2 அஜித்தின் புது நாயகி


பாலிவுட்டில் அனுராக் காஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆப் வாசெப்பூர்' படத்தில் நடித்தவர் ஹுமா.

அஜித்தை வைத்து பில்லா-2 படத்தை இயக்கும் சக்ரி டோலெட்டி, டெல்லியை சேர்ந்த இளம் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஹுமா குரேஷியை நாயகியாக நடிக்க வைக்கிறார்.
ஹுமா, பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ஆமிர் கான், சல்மான் கான் ஆகியோருடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

மும்பையின் பிரபலமான மாடலாக உள்ளார். 'தமிழில் பில்லா படத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பதை என் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக உள்ள அஜித்துடன் படப்பிடிப்புக்கு செல்வது பெருமையாக உள்ளது. படத்தின் ஸ்கிரிப்டை சொன்னவுடன் ஸ்கிரிப்ட்டில் எனக்கு முக்கிய பங்கு இருப்பதையும் கூறினார். அதைக்கேட்டதும் எப்போது செட்டில் நடிக்க போவோமோ என்று ஆவல் உண்டானது.' என்கிறாராம் ஹுமா.

படத்தயாரிப்பில் சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் ஆகியோருடன் கை கோர்த்துள்ள சுனிர் கேடர்பால், 'பில்லா படத்தில் நடிக்க சரியான நடிகை அமைய இரண்டு மாதங்கள் காத்திருந்தோம். ஹுமா, அஜித்துடன் பில்லா படத்தின் நாயகி ரோலை மிக சரியாக பண்ணுவார் என்று அவரை தேர்வு செய்தோம்.' என்கிறார்.

படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாயகி கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தோற்றம், நடிப்பு திறமை உள்ள ஹுமாவை நடிக்க வைக்க முடிவு செய்தோம். மெக்பூல், குர்பான் ஆகிய இந்தி படங்களுக்கு கமெராமேனாக பணியாற்றியுள்ள ஹேமந்த் சதுர்வேதி, இந்த பில்லா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மே மாதம் படத்தின் சூட்டிங் ஆரம்பமாக உள்ளது என்கிறார் டைரக்டர் சக்ரி டோலெட்டி.

Wednesday, April 6, 2011

ஆண்களின் காதல் காமத்தை நோக்கியது பெண்களின் காமம் காதலை நோக்கியது


ஆண்களும் பெண்களும் முத்தமிடுதலின் வேறுபாடுகள் பற்றி நியூயார்க் நகர பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சுவாரஸ்யமான பல முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. அதாவது முத்தத்திற்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்பது அவற்றில் ஒன்று. பெண்கள் முத்தத்தை தங்கள் இணை வாழ்க்கை உறவின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர்.

காதலை அர்த்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் நீண்டகால உறவினை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அதன் நிலைப்பாட்டை சரி செய்து கொள்ளவும் முத்தத்தையே விரும்புகின்றனராம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு முத்தம் என்பது நீண்ட கால உறவினைப் புதுப்பிக்க பயன்படும் ஒன்றாக இல்லை. காதல் உறவின் போது முத்தம் ஒரு கீ கொடுக்க பயன்படுகிறது. ஆசை அதிகரிக்கும் போது ஒரு அடையாளமாக வெளிப்படுகிறது.


ஆண்களும் பெண்களும் முத்தத்தை மிகவும் ரசிக்கிறார்கள் என்றாலும் பெண்களே அதற்கு ஒரு முன்னுரிமை வழங்குகிறார்கள். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. இணை வாழ்க்கை நாட்கள் நீள நீள முத்தத்தின் முக்கியத்துவம் ஆண்களிடம் குறைந்து விடுகிறது. ஆனால் பெண்களிடம் அது உயிரோட்டமாய் இருக்கிறது. தாமதம் வேண்டாம், தயக்கம் வேண்டாம். உங்கள் துணையின் நேசத்தை அவ்வப்போது முத்தத்தால் அங்கீகரியுங்கள்.

மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம்: தெரிந்து கொள்ளுங்கள்! | புதிய உலகம்.கொம்

மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம்: தெரிந்து கொள்ளுங்கள்! | புதிய உலகம்.கொம்

இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம்


தமிழினத் தலைவன் என்று சொல்லிச் சொல்லியே தமிழினத்தை கூண்டோடு அழிக்க பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதியின் பேரனும் துணை முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் படத்தை தான் இங்கு காண்கிறீர்கள்.
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கையின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் மைதானத்தில் வலம் வருகிறார்.


இவர் இலங்கை அணிக்கு தனது தார்மீக ஆதரவை வழங்குவதிலிருந்தே புரிகிறது கருணாநிதி குடும்பத்தின் இரட்டை வேடம்.

ஈழத் தமிழ்மக்களே புரிந்து கொள்ளுங்கள் இந்த தமிழினத் துரோகக் குடும்பத்தை...

ஹொக்கி விளையாடும் கரடிகள்?(வீடியோ இணைப்பு)

கரடிகள் ஹொக்கி விளையாடுவதை பார்த்து இருக்கின்றீர்களா?

சின்னப் பிள்ளைகளின் விளையாட்டுப் போல இருக்கின்றது கரடிகளின் ஹொக்கி ஆட்டம்.

ஆனால் மனிதனுக்கு இருக்கின்ற போட்டி மனப்பான்மை கரடிகளும் இருக்கவே செய்கின்றது.

வீடியோவை பார்க்கின்றமை மூலம் இதை விளங்கிக் கொள்வீர்கள்

சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் (வீடியோ இணைப்பு)

இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.முஹமட் ஹாரிப் (47), பர்மாஹான் அலி (37) என்ற இச் சகோதரர்கள் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.



அப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சஹிரா பர்வீன(24) என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரின் சடலத்தை தோண்டி எடுத்த இவர்கள் கால்களை வெட்டி கறி சமைத்து உண்டுள்ளனர்.

அப்பெண்ணின் கல்லறைக்கு சென்றிருந்த உறவினர்கள் சடலம் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கையில், பல வருடங்களாக நரமாமிசம் மற்றும் நாய்களை இவர்கள் உண்டு வருவதாக தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் மனைவியர் இவர்களை விட்டுச் சென்றுவிட்டதால் ஏற்பட்ட மன விரக்தியாலேயே இவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.