Tuesday, March 8, 2011

கற்பனை செய்து பார்க்க முடியாத சம்பளத்துடன் பிரபுதேவாவை அழைத்த பெரிய இடம்!!


ஒப்பற்ற நடனத் திறமையால் இந்தியாவின் மைக்கேல் ஜாக்‌ஸன் என்று புகழப்படும் பிரபுதேவா கோரியோகிராஃப் செய்வதைக் கிட்டத்தட்ட மறந்தேபோனார். அதற்கு முக்கிய காரணம் அவர் அணிந்துகொண்டிருக்கும் இயக்குனர் தொப்பி.
தமிழில் போக்கிரி என்னும் வெற்றிப் படத்தை இயக்கியதைத் தொடந்து அதை பாலிவுட்டிலும் ரீமேக் செய்து அங்கேயும் வெற்றிப் பட இயக்குனராகத் தன்னை நிரூபித்த பிரபுதேவா டோலிவுட்டிலும் ஒரு கைபார்த்தார்.
இப்போது சஞ்சய் லீலா , பன்சாலி, போனிகபூர் ஆகிய இரண்டு முக்கிய தயாரிப்பாளர்கள், பிரபுதேவாவை பாலிவுட் வந்து செட்டில் ஆகிவிடும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஜெயம் ரவியை இயக்கி முடித்த கையோடு, தற்போது விஷாலை இயக்கிக்கொண்டிருக்கும் பிரபுதேவா, இது முடிந்தவுடன் தனது திருமணத்தை முடித்துவிட்டு, மும்பையில் செட்டிலாகத் திட்டமிட்டிருந்தாராம்! ஆனால் கோலிவுட் இவரை அத்தனை சீக்கிரம் வழியனுப்பி வைக்காது போலும்.
சன் பிக்ஸர்ஸ் பிரபுதேவாவை அழைத்து, “மெகா பட்ஜெட்டில் எங்களுக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்கள்” என்று கேட்டுகொண்டிருக்கிறார்களாம். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கித் தாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்களாம்.
கூடவே கற்பனை செய்து பார்க்க முடியாத சம்பளம் தருவதாகக் கூறி , தங்கள் சாட்டிலைட் டீவிக்காக ஒரு நடன நிகழ்ச்சியை ரியாலிட்டி ஷோவாக நடத்தித் தர முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். இரண்டாவதை முற்றாக மறுத்துவிட்ட பிரபுதேவா, படம் இயக்கித் தர ஒப்புக்கொண்டிருக்கிறாராம். இப்போதைக்கு மும்பையில் செட்டிலாகும் திட்டத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டாராம் பிரபுதேவா.

No comments:

Post a Comment