Friday, March 4, 2011

விஜயகாந்த் வடிவேல் பயங்கர மோதல்!


சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று நடிகர் வடிவேல் கூறியிருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி நடிகர் வடிவேல் கூறியதாவது: நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.

எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். எம்.ஜி.ஆரின் கொள்கைகள் எனக்கு பிடிக்கும். கலைஞரின் அறிவும், ஆற்றலும், அயராத உழைப்பும் எனக்கு பிடிக்கும். அவருடைய நிர்வாக திறன் பிடிக்கும். என்றாலும், நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இன்னொரு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்கிறதா? அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தபின், விஜயகாந்தை எதிர்த்து நான் தேர்தலில் போட்டியிடுவேனா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment