Sunday, March 13, 2011

சீமான் வீடு அலுவலகத்தில் கெடு பிடி!


நாம் தமிழர் இயக்கத்தலைவர் இயக்குனர் சீமான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ரகசிய தகவல்கள்

வந்ததையடுத்து மிகவும் உஷாராக இருக்கிறார் அவர். அவரது அலுவலகம், வீடு எல்லா இடங்களுக்கு தனது நாம் தமிழர் இயக்க தொண்டர்களையே பாதுகாப்புக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்.
அது மட்டுமல்ல, அவரது வீடு அலுவலக வாசல்கள் எந்நேரமும் பூட்டப்பட்டே இருக்கின்றன. தெரிந்தவர்களோ, பத்திரிகையாளர்களோ வந்தால் கூட கவனமாக பரிசீலித்துதான் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

உயிருக்கு பயந்தவன் நான் இல்லை என்று அவர் சொன்னாலும், அவரை காப்பாற்ற வேண்டியது எங்கள் பொறுப்பு. அதனால்தான் இத்தனை பாதுகாப்பு என்கிறார்கள் அவருடன் இருக்கிற முக்கியஸ்தர்கள்.

அரசியல் வேலைகளில் பிசியாக இருந்தாலும், விஜய்யை அவ்வப்போது சந்தித்து பகலவன் பற்றியும் பேச நேரம் ஒதுக்குகிறார் சீமான். இருவரும் ஓரணிக்கு சாதமாக இருப்பதால் அரசியல் பற்றியும் விவாதிக்கிறார்களாம் இருவரும்.

இன்னொரு பக்கம் “ பகலவன் படத்தில் எப்போது நடிப்போம் என்று த்ரில்லாக இருக்கிறது” என்று மிகவும் எக்ஸைட் ஆகி தனது நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம் விஜய். இதற்கிடையில் சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி படத்தை ‘குரோதம்’ என்ற தலைப்புடன் டோலிவுட்டில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.

No comments:

Post a Comment