Sunday, March 13, 2011

இலங்கையில் பேஸ்புக் நிறுத்தப்படுமா?


இலங்கையில்சமூக வலையமைப்பான பேஸ்புக்கின் மூலமாக ஒருசிலர் தவறான விடயங்களை முன்னெடுப்பதாக கடந்த 8 மாதங்களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பண மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், மிரட்டல் போன்ற முறைபாடுகள் கிடைக்கபெற்றுள்ளதகவும், இம்முறைபாடுகளில் அதிகமாக போலியான கணக்கினை வைத்திருப்பவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்கணக்கினை தடுத்து நிறுத்துவதற்காக அவ்வாறான கணக்குகள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக இலங்கை கணிணி அவசரச் சேவை பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹன பல்லியகுரு தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் தேவையற்ற சுய தரவுகளை இடுவதனையும் தெரியாத நண்பர்களை இனைத்துக்கொள்ளுவதையும் தவிர்ப்பதன் மூலம் இவற்றிலிருந்து ஓரளவேனும் தப்பித்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment