Tuesday, March 15, 2011

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: பிணத்தை சூட்கேசுக்குள் அடைத்து கால்வாயில் வீசிய கொடூரம்


ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பிசினெஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த தோஷா தாக்கர் என்ற மாணவி படித்து வந்தார்.

கடந்த 11-ந் திகதி காலை மெல்போர்ன் மெடவ்பேங் கால்வாய் அருகே ஒரு சூட்கேஸ் ஒதுங்கி கிடந்ததை கட்டிட ஊழியர் ஒருவர் பார்த்தார்.

அந்த சூட்கேசுக்குள் பெண் பிணம் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்துப் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பொலிசார் விரைந்து வந்து பார்த்தனர். சூட்கேசுக்குள் பிணமாக கிடந்தது கல்லூரி மாணவி தோஷா தாக்கர் என்பது தெரிய வந்தது.

அவள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரை யாரோ கற்பழித்து கொன்று பிணத்தை சூட்கேசுக்குள் வைத்து கால்வாயில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர் எப்படி கொல்லப் பட்டார் என்பது தெரிய வரும். கடந்த 9-ந்திகதி தாக்கரை அவரது நண்பர்கள் பார்த்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் அதன் பிறகுதான் அவள் கொல்லப்பட்டு இருக்கலாம். இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதனிடையே இந்திய மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பாக 19 வயதான டேனியல் ஸ்டானி ரெசினால்டு என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொலிசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள். அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

No comments:

Post a Comment