Thursday, March 3, 2011

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்: கொடுத்து வைச்ச வாலிபர்


காதலித்து கர்ப்பமாக்கிய 2 இளம் பெண்களுக்கும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் வாலிபர். கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் குஸ்கூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா நாயக்.

இதே கிராமத்தை சேர்ந்த சைத்ரா, தீபா என்ற 2 பெண்களை காதலித்தார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார்.

காதலிகள் 2 பேரும் கர்ப்பம் அடைந்தனர். சைத்ரா 6 மாதம். தீபா 3 மாதம். விஷயம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்தது. ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவியது.

2 பேரின் கர்ப்பத்துக்கும் சந்திரா நாயக்தான் காரணம் என தெரிந்ததும் ஊரே வாயடைத்து போனது. தன்னை திருமணம் செய்யும்படி 2 பெண்களும் நாயக்கின் வீட்டின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கடைசியில் இருவரையும் திருமணம் செய்யவும் சம்மதித்தார். இதையடுத்து, ஷிராளகொப்பாவில் உள்ள ஸ்ரீகாளிகாம்பா கோயிலில் திருமண பந்தல் அமைக்கப்பட்டது. அதில், தீபாவையும் சைத்ராவையும் ஒரே நேரத்தில் அமர வைத்து தாலி கட்டினார் நாயக். இந்த திருமணத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

No comments:

Post a Comment