Sunday, March 13, 2011

ஜப்பான் நாடு 8 அடி நகர்ந்துள்ளது: நம்ப முடியுமா ?

கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானில் நடைபெற்ற பாரிய நில நடுக்கத்தை அடுத்து அந் நாடு சுமார் 8 அடி நகர்ந்துள்ளதாக அறியப்படுகிறது. அதாவது பூகோளத்தில் யப்பான் நாடு இவ்வளவு காலம் எங்கே இருந்ததோ, அவ்விடத்தில் இருந்து சுமார் 8 அடி(2.4) மீட்டர் நகர்த்தப்பட்டுள்ளது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (அதாவது முழு நாடும்). அமெரிக்க செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்த ஆராட்சியாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அதில் ஜப்பான் நாடு 8 அடி விலகிப் போய் உள்ளது தெளிவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆசியக் கண்டத்தின் அடிப்பகுதியும், பசுபிக் கண்டத்தின் அடிப்பகுதியும் கடலுக்கு அடியில் முட்டி மோதியதால் இந்த நில நடுக்கம் தோன்றியதாக அறியப்படுகிறது.

சுமார் 4 நிமிடம் இந்த நிலநடுக்கம் நீடித்துள்ளது. இதன் காரணமாக கடலுக்கு அடியில் உள்ள நீர் கொந்தளித்து, அது கடலுக்கு அடியில் அலையாகச் சென்றுள்ளது. அவை பல மைல்கள் செல்லக்கூடியவையாக உள்ளதோடு, அந்த கடலுக்கு அடியில் செல்லும் அலை, கரையை அடையும் போது அதன் வேகம் அப்படியே கல் பாறைகள் மற்றும் கடல் கரைகளில் மோதி பேரலையாக உருவெடுப்பதையே சுணமி என்கிறோம். கடந்த வெள்ளி ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுணாமியும், ஜப்பானுக்குள் சுமார் 10 கி.மீட்டார் தூரம்வரை சென்று தாக்கியுள்ளது. ஆனால் ஆபத்தை முன்கூட்டியே அறிந்த ஜப்பானியர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொண்டதால், பெரும் உயிர்ச்சேதம் தகவிர்க்கப்பட்டது.

நடந்த பூகம்பத்தால், பூகோளரீதியாக ஜப்பான் நாடு நகர்ந்துள்ளதும், அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற விபரங்களையும் ஆராட்சியாளர்கள் திரட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment