Wednesday, February 23, 2011
பட்டம் வாங்கிய பிறகு தான் நடிப்பு: அமலா பால்
'வீரசேகரன்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவர் அமலா பால்.
'சிந்து சமவெளி'யால் சர்ச்சையின் நாயகியாக உருவெடுத்து, 'மைனா' மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர். அதிலும் 'சிந்து சமவெளி' படத்தில் மாமனாருடன் சல்லாபிக்கும் காட்சியில் நடித்ததன் மூலம் மாதர் சங்கங்கள் கொடுத்த பப்ளிசிட்டியால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அமலா பாலுக்கு அடுத்தடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.
இனி சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அவர், புதிய படங்களில் கதையை நன்கு கேட்ட பிறகே தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
பல முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் அமலாவிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிப்படிப்பை முடித்த கையோடு தமிழ் சினிமாவில் நடிக்க வந்து விட்ட அமலாவுக்கு, கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது ஆசையாம். அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் அந்த ஆசை நிறைவேறாமல் இருந்து வந்தது.
இப்போது மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர அமலா பால் திட்டமிட்டிருக்கிறாராம். இதனால் விரைவில் முறையான அறிவிப்புகளுடன் சினிமாவுக்கு இருந்து தற்காலிக முழுக்கு போடப்போகிறாராம். பட்டம் வாங்கிய பிறகே நடிப்பில் கவனம் செலுத்தப்போவதாக அமலா பால் கூறியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment