Thursday, February 17, 2011

திருநீரால் நிரம்பும் வீடு � பெரியகல்லாறில் மூன்று மாதமாக இடம்பெறும் அதிசயம் (வீடியோ இணைப்பு)



மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திரு நீரு பெருமளவில் கொட்டிவரும் அதிசயம் நிகழ்ந்துவருகின்றது.">

பெரியகல்லாறு 2ஆம் வட்டாரத்தில் உள்ள புஸ்பகுமாரன் என்பவரின் வீட்டிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துவருகின்றது.கடந்த 10 மாதம் தொடக்கம் இவரது சுவாமி அறையில் இந்த அதிசயம் நிகழ்ந்துவருவதுடன் இதனைக்காண இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மக்கள் வந்துசெல்வதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சாயிபாபா பக்தரான இவரும் இவரது மனைவியும் பல வருடங்களாக சாயி வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த நிலையில் ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி கேளதார கௌரி விரத்துக்கு ஆலயத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் சுவாமியறை பூராக திருநீராக இருந்ததாகவும் வீட்டு உரிமையாளர் புஸ்பகுமாரன் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த மூன்று தினங்களாக அவர்களின் வீட்டில் உள்ள தொலைக்காட்;சிப்பெட்டி வழியாகவும் திருநீரு வழிகின்றது.தாங்கள் குறித்த தொலைக்காட்சியில் வேறு நிகழ்ச்சி பார்ப்பதில் பகவானின் பாடல்கள்படங்கள் மட்டுமே அதில் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்தார்.அத்துடன் பக்தர்கள் சுவாமி படம் ஒன்றை பூசையறையில் வைத்தால் அந்த படத்தின் மேலாகவும் விபுதிகள் வருவதாகவும் சிலர் எம்மிடம் தெரிவித்தனர்.

அத்துடன் வரும் பக்தர்கள் வேண்டுதல்கள் செய்யும்போது அவர்களின் கைகளிலும் விபுதிகள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டை பார்வையிடுவதற்காக யாழ்குடா உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment