Friday, February 18, 2011

காதலன் ஏமாற்றியதால் கூலிப்படையை விட்டு கொலை செய்த பெண்


பாகிஸ்தானை சேர்ந்தவர் காமரன் வயது 20. இவருடைய காதலி மரியம்(17). இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

காமரன் மரியத்திடம் இருந்து பிரிந்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மரியம் காதலனை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக பணம் கொடுத்து கூலிப்படையை ஏற்பாடு செய்தார். அதன்படி அவர்கள் காமரனை கடத்தி சென்று மரியம் கண் முன்னாலேயே வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தையும் மரியம் தனது செல்போனில் படம் பிடித்தார். காமரன் உடலை துண்டு துண்டாக வெட்டினார்கள். அதையும் கொஞ்சம் கூட பீதி இல்லாமல் படம் பிடித்தார். பின்னர் இந்த படங்களை தனது லேப்டாப் கம்ப்யூட்டரிலும் பதிவு செய்தார்.

காமரன் உடலை கண்டு பிடித்த பொலிசார் கொலை பற்றி விசாரித்த போது மரியம் கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவருடைய கம்ப்யூட்டரில் கொலை காட்சிகள் அனைத்தும் இருந்ததை பார்த்து பொலிசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment