Thursday, February 17, 2011

தேர்தல் நாடகம்: கனிமொழி எம்.பி கைது

சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இந்தியாவின் தமிழ் நாடு மாநில முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வியும், தி.மு.க எம்.பியுமான கனிமொழி உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் வட மாகாண கடல் பரப்புக்குள் தமிழக மீனவர்கள் 106 பேர் நேற்று அத்து மீறிப் பிரவேசித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இக்கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்கள் ஆகியவற்றை ஆட்சேபித்தே தி.மு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இதே நேரம் தமிழக மீனவர் கைதுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகவியலாளர்களுக்கு கூறினார்.

சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

2 comments: