Friday, February 11, 2011

தூக்கம்...

பசுமையிளம் வேளையிலே
பகலினிமை நேரமதில்
பொன்னிறத்தின் உன் அழகை
பார்த்துவிட்டேன் நானடியே

சொல்லென்று மனம் சொல்ல
சொல்லாமல் வாய் மூட
செல்லாத வழியினிலே
செல்லுதடி என்நெஞ்சம்

உன்னழகை கண்டதினால்
உருக்குலைந்த என் நெஞ்சம்
உன்னிடத்தில் தான் வரவே
உலர் நிலமாய் ஆகுதடி

என்மனதில் உதித்தவற்றை
உன்னிடத்தில் சொல்லும்வரை
என்னிடத்தில் தூக்கம் என்றும்
இல்லையடி பெண்மானே...

No comments:

Post a Comment